Friday, November 20, 2020

காதல்திருமணத்தின் காரணங்கள்

 "காதலுக்குண்டானகிரகங்களின் வரிசையில் சுக்கிரன், செவ்வாய், புதன் ,சந்திரன் ,ராகு , இவர்களுக்குள் சேர்க்கை பார்வை எங்கிருந்தாலும்  பொருந்தும்.முக்கியமாக லக்னத்திற்கு 7ல்சுக்கிரன் ராகு ,7ல்சுக்கிரன் செவ்வாய், 7ல்சுக்கிரன் புதன். 7ல்ராகு நின்று சுக்கிரன் பார்ப்பது. சுக்கிரன் சந்திரன் சமசப்தமமாக பார்வை பெறுவது, மற்றும் பரிவர்த்தனை பெறுவது. பாவக முறையில்1,7

பரிவர்த்தனை 5,7பரிவர்த்தனை 7,11

இவைகளெல்லாம்காதலுக்கு உண்டான கிரக நிலைகளாகும். பொதுவாக சுக்கிரன் என்றாலே எல்லாவிதமான 

சிற்றின்பங்களுக்கும்,காமத்திற்கும்,

காரகர் ஆகிறார்.அவர் செவ்வாயுடன் சேரும்போது வீரியம் அதிகமாகிறது.

பொதுவாக களத்திரகாரககிரகங்கள் ஆண்களுக்கு சுக்கிரன்,பெண்களுக்கு செவ் ,இவர்கள் இருவரும் சேர்ந்தாலோ, அல்லது பார்த்தாலோ,அவருடைய தசா பத்தியோ,கோச்சாரமோ,பாகை

முறையில் இனைவோ,வரும்போது

நிச்சயம் சம்பவம் நடக்கும், அதேபோல் சுக்கிரன் ராகு, கேது 7ஆம்அதிபதியுடன் சம்பந்தம் பெறும்போது தன்னைவிட தாழ்ந்த ஜாதி பெண்ணையோ, பையனையோ,காதலிக்க நேரிடும் .

இப்படிப்பட்ட கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு அந்த வாலிப வயதில்

தசாபுத்தியோ, கோச்சாரமோ,

சம்மந்தமிருந்தால் மட்டும் மேலே சொன்னது அனைத்தும் பொருந்தும்

இந்த விதியில் காதல் திருமணம் ஜெயிக்குமா என்றாள் இந்த கிரக சேர்க்கைகளுக்கு குருவின் பார்வையோ

சேர்க்கையோ,இருக்க வேண்டும்.

சூரியனும் சந்திரனும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.அப்படி இருந்தால்

காதல் திருமணம் 100%பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும். அப்படியில்லாமல் இந்த அமைப்பில் பாதகாதிபதி அஷ்டமாதிபதி ராகு-கேதுக்கள் ஒரு தொடர்பு பெற்றுவிட்டால் காதலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருக்கும் மிகப் பெரிய அவமானங்களையும் கேவளங்களையும் சந்திக்க நேரிடும்.இன்னும் ஏகப்பட்ட விதிகள் இருக்கிறது .

savithaastro@mail.com

savithaastro.blogspot.com


உடல் ஆரோக்யம் தரும் ஸம்ஸ்கிருதம்

 

ஸம்ஸ்கிருதம் அத்தனை மநுஷ்யர்களுக்குமான பாஷை.அது ஸர்வதேச பாஷை. அதுவே தேவ பாஷையும் ஆகும். தேவர்களுக்கு ‘கீர்வாணர்’ என்று பெயர். அதனால் ஸம்ஸ்கிருதத்துக்கு ‘கைர்வாணீ’ என்ற பெயரும் இருக்கிறது. ‘தேவ பாஷை’ என்று அதைத் தமிழ்க் கவிதைக்குச் சக்கரவர்த்தி ஸ்தானத்திற்கு வைக்கப்பட்ட கம்பரும் சொல்கிறார்: “தேவ பாடையில் இக்கதை செய்தவர்” என்கிறார்.


ஸம்ஸ்கிருதம் நாம தைவீ வாக்


என்று தண்டி காவ்யாதர்சத்தில் சொல்கிறார்.


தேவர்கள் வாக்கு – தைவீ வாக்.


நம் எல்லோருக்கும் தேவர்கள் பொது தான்.அதனால், ஸம்ஸ்கிருதமும் நம் எல்லோருக்கும் வேண்டியது தான்.


அவ்யக்தம் எனப்படுகிற ஸ்பஷ்டமற்ற ‘அக்ஷரங்களே இல்லாத பாஷை அது.இங்கிலீஷில் word என்கிற போது ‘வே (ர்) ட்’என்று எழுதுவதா ‘வோ(ர்) ட்’ என்று எழுதவதா என்று தெரியவில்லை. வியக்தமான ஏ-காரம், வியக்தமான ஓ-காரம் இரண்டுமில்லாத ஒரு சப்தமாக அது இருக்கிறது. ஸம்ஸ்கிருதத்தில் இப்படிப்பட்ட ஒலிகள் இல்லை.Word என்பதை ‘வேர்ட்’ என்று ர்-ஐ வியக்தமாகச் சொன்னாலும் தப்பாக இருக்கிறது; அதற்காக ‘ர’ காரமே இல்லாமல் ‘வேட்’ என்றாலும் சரியாயில்லை; துளித்துளி ர-சப்தத்தைத் தொட்டுக் கொண்டு ட்-டுக்குப் போக வேண்டியிருக்கிறது. இம்மாதிரி அவ்யக்த சப்தங்கள் ஸம்ஸ்கிருதத்தில் இல்லை.


மங்களமாகவும், கம்பீரமாகவும் உள்ள மொழி


அதே போல், தாது இல்லாத பதம் என்பதே இல்லாத பாஷையாகவும் ஸம்ஸ்கிருதமே இருக்கிறது.எந்த ஒரு பதத்தை எடுத்துக் கொண்டாலும், அதை அக்ஷர அக்ஷரமாகப் பிரித்து அர்த்தம் சொல்ல முடிகிறது. காதுக்கும் மங்களமாகவும், கம்பீரமாகவும் இருக்கிறது. அதைச் சில பேருக்கு மட்டுமானது என்று குறுக்கி த்வேஷம் பாராட்டுவது சரியே இல்லை.


ஏதோ சத்தம் போட்டு அதன் மூலம் விஷயத்தைத் தெரிவிப்பது என்றில்லாமல், சப்தங்களை நன்றாக ஸம்ஸ்காரம் பண்ணி ( அதாவது சுத்தப்படுத்தி ) அப்புறம் பதம், வாக்கியம் முதலானதுகளையும், பெயர்ச்சொல், வினைச்சொல் முதலான parts of speech -களையும் அலசி அலசி வரையறைப்படுத்தி ஸம்ஸ்காரம் செய்திருப்பதாலேயே இதற்கு ‘ஸம்ஸ்க்ருதம்’ என்ற பேர் ஏற்பட்டது. சிக்ஷா சாஸ்திரமும், அதைவிட முக்யமாக வியாகரணமும் இப்படிப் பட்ட ஸம்ஸ்காரங்களைச் செய்கின்றனவை ஆகும்.


அந்த பாஷையைப் பேசினால் அதுவே மநுஷ்யனுக்கும் ஸம்ஸ்காரத்தைச் செய்கிறது.தேவ பாஷையிலிருந்து உண்டானதால் திவ்ய சக்திகளின் அநுக்கிரஹத்தைப் பெறும் படியாகச் செய்கிறது. ஸம்ஸ்கிருத சப்தங்கள் உத்தமமான நாடி சலனங்களால் நல்லது செய்வதோடு nervous system -ஐ [ நரம்பு மண்டலத்தை ] க்கூட வலுவாக்கி, ஆரோக்யம் தருகிறது என்கிறார்கள்.


ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்


( தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம் )

savithaastro@gmail.com

savithaastro.blogspot.com

சிதம்பர_ரகசியம்



பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator. 

❤❤

எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனைக் கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்ப்பட்ட அறிவுமிக்கவன்..?


 அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்ப்பட்டது..?


இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..?


 திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!


சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களைக் கூறிவரும் வேளையில், அந்தக் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.


முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்குப் பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும்.


 அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.

Hindu temples⛩

(1) இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).


(2) பஞ்ச பூதக் கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம்,


 காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம்,


 நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, 


இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதைப் போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்தத் துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.


(3) மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களைக் குறிக்கின்றது.


((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதைக் குறிக்கின்றது (15*60*24 = 21,600).


(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.


(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்

மானுடராக்கை வடிவு சிதம்பரம்

மானுடராக்கை வடிவு சதாசிவம்

மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், 


அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.


(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும்.


இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சரப் படி" என்று அழைக்கப்படுகின்றது, 


அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது.


 "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. 


இந்தக் கனக சபையைத் தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களைக் குறிக்கின்றது,


(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, 

இவை 28 ஆகமங்களையும், 

சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, 

இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளைக் கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளைக் குறிக்கின்றது, 

இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாலங்களைக் குறிக்கின்றது.


(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள்,

 9 வகையான சக்தியைக் குறிக்கின்றது.

அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 

6 சாஸ்திரங்களையும்,

அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள்,

18 புராணங்களையும் குறிக்கின்றது.


(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.


விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே சாட்சியாக்கியுள்ளது...

ॐஓம் நமச்சிவாய ॐ


savithaastro@gmail.com

savithaastro.blogspot.com