Monday, December 21, 2020

தில ஹோமம் செய்யவேண்டிய காரணங்கள்

தில ஹோமம்

 இன்று அனைத்து ஜாதகங்களிலும் ஒரு மிக பெரிய சவாலாக இருப்பது இந்த தில ஹோமம் ஆகும். தில ஹோமம் என்றால் என்ன, யார் இதை, எங்கு செய்ய வேண்டும். அனைத்து ஜோதிட ஆசான்களும் இதை இன்று சொல்லுகிறார்கள். மிகவும் உண்மைதான். எள்ளினால் செய்யும் ஹோமம் தில ஹோமம் எனப்படும்.

தில ஹோமம் என்றால் என்ன? அதை எப்போது யார் செய்யலாம்?

தில ஹோமம் என்பது கறுப்பு எள்ளை முக்கிய திரவியமாகக் கொண்டு முறையாக அக்னியில் செய்யப்படும் ஹோமம், இது பித்ரு தோஷத்திலிருந்து விடுபடவும், மறைந்த முன்னோர்கள் நல்ல நிலையை அடையவும் செய்யப்படுகிறது.

இதை சுமார் நான்கு மணி நேரம் ஆகும் செய்து முடிப்பதற்கு. இதை திருப்புல்லாணி, ராமேஸ்வரம் போன்ற இடங்களிலும் செய்யலாம். மேலும் அவரவர் வீட்டிலேயும் செய்துக் கொள்ளலாம்.

மறைந்தவர்களுக்கு முறையாக கர்மாக்கள் செய்யாமல் இருத்தல், செய்த கர்மாக்கள் அனைத்தும் தோஷத்துடன் இருத்தல், செயற்கை மரணத்தால் மறைந்தவர்களுக்கு கர்மாக்களால் திருப்தி ஏற்படாமல் பித்ருக்களாக மாற இயலாமல் தவித்தல், வருஷா வருஷம் முறையாக சிராத்தம் செய்யாமல் இருத்தல், செய்யும் சிராத்தத்தை முறை தவறி செய்தல் போன்ற செயல்களால் ஏற்படும் பித்ரு தோஷம் ஆகியவை இந்த தில ஹோமத்தால் விலகும்.

பித்ரு தோஷத்தால் ஏற்படும் குழந்தையின்மை, அல்லது குழந்தை உருவாகாது இருத்தல், கர்ப்பம் தங்காது இருத்தல், பிறந்த குழந்தை இறந்து போதல் போன்ற தோஷங்கள் ஏற்படலாம், இப்படிப்பட்ட தோஷங்களைப் போக்கவும் தில ஹோமம் செய்யப்பட வேண்டும்.

மற்ற ஹோமங்களைப் போலல்லாமல் மறைந்தவர்களுக்கு சம்ஸ்காரம் செய்வதைப்போல் இறந்தவர்களை வெள்ளியாலான பிரதமையில் ப்ரேத ஸ்வரூபியாக ஆவாஹனம் செய்து, செய்யப்பட வேண்டிய இந்த தில ஹோமத்தை, தாங்கள் வசிக்கும் வீட்டில் செய்வதில்லை, ராமேஸ்வரம், திருவெண்காடு, ஸ்ரீவாஞ்சியம், பவானி, ஸ்ரீரங்கபட்டினம் போன்ற பொதுவான இடங்களில் செய்ய வேண்டும், ஹோமத்தின் இறுதியில், இறந்த முன்னோர்களை பிரேத ஸ்வரூபத்திலிருந்து விடுபட்டு பித்ருக்களுடன் ஒன்றாக சேர்ப்பிக்கும் விதமாக பித்ரு பிரதமைகளை சமுத்திரத்திலோ அல்லது கடலில் கலக்கும் புண்ணிய நதிகளிலோ கரைத்துவிட்டு ஸ்னானம் செய்ய வேண்டும், இதனால் பித்ரு தோஷம் விலகி, குழந்தைகள் பிறந்து, தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.

கிருஷ்ண பக்ஷம் சனிக்கிழமை அமாவாசை பரணி நட்சத்திரம் குளிகன் இருக்கும் ராசி ஆகிய நாட்கள் தில ஹோமத்துக்குச் சிறந்தவை, மேலும் தனக்கு சொந்தமான அக்னியில் தனது வீட்டிலேயே காயத்ரீ மந்திரம் சொல்லியும் தில ஹோமம் செய்யலாம், இதுவும் அனைத்து பாபத்தையும் போக்கும், தில ஹோமம் செய்து பித்ரு தோஷம் விலகிய பின்னர் அமாவாசை போன்ற நாட்களில் தர்ப்பணமும் பெற்றோருக்கு வருஷா வருஷம் சிராத்தம் ஆகியவற்றையும் முறையாகச் செய்ய வேண்டும், அப்போதுதான் செய்த தில ஹோமம் முழுமையான பலனைத் தரும்.

ஆனாலும் இப்படிப்பட்ட தில ஹோமத்தை தேவையில்லாமல் செய்யக்கூடாது, தேவையான வியாதியுள்ளவர்கள் மட்டுமே மருந்தை சாப்பிடுவதைப்போல் யாருக்குத் தேவையோ அவர்கள்தான் தில ஹோமத்தைச் செய்ய வேண்டும்.

தில ஹோமம் செய்ய வேண்டியத் தேவை உள்ளதா? ஜாதகம் மூலம் பித்ரு தோஷம் இருப்பதை உறுதி செய்த பின்னரே தில ஹோமம் செய்ய வேண்டும், அதாவது ஜென்ம லக்னத்திலிருந்து புத்ர ஸ்தானத்தில் (ஐந்தாமிடத்தில்) சனி இருந்தாலோ அல்லது ஐந்தாமிடத்துக்கு சனி பார்வை இருந்தாலோ, புத்ரகாரகனான குருவுக்கு சனியின் சேர்க்கை - பார்வை - இருந்தாலோ குழந்தை பாக்கியம் இருக்காது, அல்லது குழந்தைகள் தங்காது.

இது போன்ற தோஷங்கள் பித்ரு தோஷத்தால் ஏற்படுகிறது என்பதால் இப்படிப்பட்ட பித்ரு தோஷத்துக்கு தில ஹோமத்தைத் தவிர மற்ற பரிகாரம் கிடையாது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் தில ஹோமம் செய்யலாம், 
மேலும் தில ஹோமம் செய்த மறுநாள் சுமங்கலி ப்ரார்த்தனை மற்றும் நவக்ரஹ ஹோமத்தை செய்து இயன்ற அளவில் தானங்களை வழங்கி 
வேதம் ஓதும் வேதியரின் ஆசீர்வாதத்தையும் இல்லத்தில் பெரியோர்களின் ஆசீர்வாதத்தையும் பெருவது தில ஹோமத்தின் முடிவில் செய்து கொள்ளவேண்டிய முக்கிய காரியமாகும்.
மற்ற சாதாரண தோஷங்களுக்கு தில ஹோமம் செய்ய வேண்டாம், மற்ற தேவையான பரிகாரங்களைச் செய்தாலே போதுமானது.
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

மனதின் போக்கும் தெளிவும்

அன்பு உள்ளங்களுக்கு இனிய சுபோதயம் !
      எந்த ஒரு மனிதக்கும் மனநிலை சரியில்லை ( குழப்ப நிலை)  என்றால் அவர்களால் ஒருமுகத்தன்யுடன் செயல்படுவதென்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆகவே, மனம் என்பதை முதலில் ஆய்வு செய்தோமானால், 
       உணர்தல், பார்த்தல், கேட்டல், நுகருதல், ருசித்தல் என்னும் பஞ்சேந்திரியங்களின் இயக்கத்தால் ஏற்படும் புதிய ஒன்றின் மீதான தீர்மானத்தை ஏற்படுத்திக் கொள்வதற்குண்டான குழப்பத்தை அடைந்திருக்கும் நிலை அதாவது எதையும் சந்தேகத்திற்கிடமான குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கும் ஸ்தான நிலை என்பதால் மனம் என்பதை ஒரு சந்தேகநிலை ( இதுதான் என்று வரையறுக்க இயலாத ஒன்று)  என்று சொல்லலாம்.
        இவ்வாறு பலவிதமான நிகழ்வுகளால் உருவாகும் சந்தேகங்கள் முதலானவைகளும் ஐம்புலன்களால் உணரப்பட்டு சந்தேகமில்லாமல் தனக்குள் சேமித்து வைத்துக் கொண்ட அனுபவப் பதிவுகளைக் கொண்டு சந்தேகமில்லாமல் ஒன்றை தீர்மானித்து சேமித்து வைத்த ஸ்தானத்தை சித்தமென்றும் 
    இதுபோல் சேமித்த தகவல்களைக் கொண்டு தொலைவிலுள்ள பொருளை இதுதான் என்று தீர்மானித்து வெளிப்படுத்தும் . ஒருவேளை சித்தத்தில் சேமிக்கப்படாத புதிய ஒன்றாக இருக்குமானால் அதை அடையாளப்படுத்த இயலாத புதிய ஒன்று என தீர்மானப்படுத்தும். இதையே புத்தி என்றும் இவ்வாறு மூன்று நிலைகளிலும் உறுதிப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தும் நிலையிலே நான் என்னும் அஹங்காரம் தோன்றுவதாகவும் சொல்லலாம். 
      ஆகவே, ஒரு ஜாதகத்தில் லக்ன பாவகமென்னும் ( மனிதன்)  மனமென்னும் இரண்டாம் பாவகத்தில் இறங்கி ( சித்தம் )மூன்றாமிடமாகிய பயணத்தை அடைந்து தெளிவு ( சேமித்தல் )என்னும் நான்காம் பாவகத்தில் சுகப்பட வேண்டுமானால் ஐந்தாம்பாவகமென்னும் ( புத்தி)  சிறப்பாகச் செயலாற்ற வேண்டும் என்பதாலேயே ஒருவரது குணபாவகங்களைக் கண்டறிய லக்னத்திற்கு 2 , 5 ம் பாவகங்களையும், அந்த பாவக, பாவகாதிபதிகளுடன் தொடர்பு கொண்ட சுபாசுப கிரகங்களை ஆராய்ந்து பார்க்க சொல்லி வைத்திருக்கின்றார்கள் நம் முன்னோர்கள். சுத்தமாகக் குழப்பி விட்டேனா? 
       அப்படியானால், சூரியன், சந்திரன், புதன், குரு முதலான கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் சுப ஸ்தானங்களில் சுபபலன்களைக் கொடுக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்று எடுத்துக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள் .
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

Sunday, December 20, 2020

புனர் பூ தோஷம்

     பொதுவாகவே ஜனன ஜாதகத்தில் சந்திரன் சனி சம்பந்தம் ஏற்பட்ட ஜாதகருக்கு புனர்பூ தோஷம் இருப்பதாகச் சொல்லி விடுகின்றோம்.  அப்படிப்பட்ட ஜாதகர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி மனதிற்குள் நினைத்துப்பார்க்கையில் சற்றே சங்கடமான விசயமாகத்தான் இருக்கின்றது.  
        காலபுருஷ தத்துவத்தின்படி சுகாதிபதியான மனோகாரகனுக்கு கர்ம, பாதகாதிபதியான சனிபகவான் 7 , 8 ம் ஆதிபத்தியமாக அமைந்து அவரே மாரகாதிபதியாகவும், மான, அவமான, மர்மங்களைக் குறிக்கும் ஆயுள் ஸ்தானாதிபதியுமாக அமைந்து விடுகிறார். 
     இந்நிலையில் சந்திரன் சனி சேர்க்கை என்பது சற்றே ஆயுள் பந்தமான கர்மவினையின் தொகுப்பாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். 
      அதாவது , சனிபகவான் தான் இருக்குமிடத்தை சுருக்கி சிறியதாக்கும் தன்மையும் , தான் பார்க்கும் இடங்களை பாழ்படுத்தும் குணத்தையும் கொண்டவர்.  இந்நிலையில் மனோகாரகனாகிய சந்திரனை தொடர்பு கொள்ளும்போது அந்த ஜாதகர் தனது சுயபுத்தியையும் பிறர் கூறும் அறிவுரைகளை ஆராய்ந்து வழிநடக்கும் எண்ணங்களும் இல்லாம் தனக்கென தனியொரு சிந்தனையை மனதிற்குள் ஏற்படுத்திக்கொண்டு தன்னிச்சையாக வாழத்தொடங்கி விடுகின்றார். 
     காரணம் யாதெனில், காலபுருஷனுக்கு 3 , 6 க்குடைய மூளைகாரகனென்னும் புதபகவான் கடகத்திற்கு 12, 3 ஆகவும், மகரம், கும்பம் ஆகிய ஸ்தானங்களுக்கு முறையே  6 , 9 மற்றும் 5 , 8 ம் ஆதிபத்தியங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதால் இந்த சந்திரன் சனி சேர்க்கை பெற்ற ஜாகருக்கு தனது பெரும்பான்மையான உதவிகளை செய்து கொடுக்க முன்வருவதில்லை என்பதே என்னுடைய கருத்து.  மேலும், இப்படியான அமைப்புள்ள ஜாதகர்களே கண்ணை திறந்து கொண்டே படுகுழியில் விழுகின்ற விபரீத ஆராய்ச்சிகளில் இறங்கி விடுகிறார்கள்.  
      சரி, இப்படிப்பட்ட இணைவுள்ள ஜாதகர்களும் மேன்மையடைய என்னதான் தீர்வு என்று சிந்தித்தால் சனி -- காலபைரவன் அதாவது சிவம் .சந்திரன்  -- அன்னை பராசக்த்தி அதாவது கங்காதேவியாகிய அம்பாளையும் குறிக்கும் என்பதால் சந்திரமௌலீஸ்வரையோ அல்லது காலை பைரவரையோ அவரவர் ஜாதகப்படியான தோஷத்தின் தன்மைக்கேற்ற எண்ணிக்கையான நாட்கள் வழிபட்டு வருவதாலும், கிரக ராசிக்கற்களை முறைப்படி பூஜித்து அணிந்து கொள்வதாலும் ஓரளவு பாதிப்புக்களை குறைத்து வாழ்க்கையில்  வெற்றிவாகை சூடலாம். அல்லது வேறு சில தாந்திரீக முறைகளில் பூஜைகளை மேற்கொண்டும் இதுபோன்ற அமைப்புள்ள ஜாதகர்கள் வெற்றிவாகை சூடலாம் ! 
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

நடிகர்கள் இயல்பாக அரசியல் பிரவேசம் செய்வது ஏன் ?

Why is it common actors turn to be politician?
Can I succeed in politics?  மக்களுக்கான அரசியல் செய்பவர் யார்?  5ம் பாவம் பற்றி தொடர்ச்சியாக பார்த்து கொண்டு வருகிறோம். நடிகர்கள் கலை தொழில் செய்பவர்கள், அதாவது மக்களை மகிழ்விக்கும் தொழில் செய்பவர். அரசியலும் மக்களுக்கான தளம். 5ம் பாவம் தன்னுள் கலை, இலக்கியம், ஆன்மிகம், காதல், குழந்தை, ஆழ்ந்த அறிவு, கடவுள் அனுகிரகம், புண்ணியம், பாசம் போன்ற விடயங்களை கொண்டுள்ளது.  இதனால் தான் சினிமா, அரசியல், ஆன்மீகவாதி போன்றோர்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவர்களாக உள்ளனர். அரசியல் வாதி ஆன்மீக குருவிடம் தஞ்சம் அடைவதும், நடிகர் அரசியல்வாதி ஆவதும், ஆன்மீகவாதி மீடியா வெளிச்சம் தேடி வருவதும்   பொதுவாக 5,7 தொடர்பு கொண்டவர்கள் மக்களுக்கான நபராக இருப்பார்.  
5 - சூரியன் - அதிகாரம் மிக்க நபருக்கு சேவை செய்வார்  5 - சந்திரன் - பெண்கள் நலம் வேண்டி, தன் மக்களுக்கும் இனத்துக்கும் உரிய அரசியல் செய்வார்.
5 - செவ்வாய் - காவல், அரசு ஊழியர், எல்லை சார்ந்த விடயம் முன் நிறுத்தி அரசியல் செய்வார்  
5 - ராகு - வாய் ஜாலம் செய்து அரசியல் செய்வார்  
5 - குரு - மக்களுக்கு தேவையான சட்டம் , ஒழுங்கு சார்ந்த அரசியலும், ஆன்மீக அரசியல் செய்வார். 
5 -  சனி - ஏழை மக்கள் நலன் சார்ந்து, சாமானியக்கான அரசியல் செய்வார்  
5 - புதன் - கல்வி முன்னேற்றத்திற்கு அரசியல் செய்வார்  5 - கேது - ஆன்மீக அரசியல், குழப்பமான அரசியல் செய்வார்  
5 - சுக்கிரன் - மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை புரிந்து அதை பற்றி பேசியே அவர்களை மகிழ்வித்து அரசியல் செய்வார். கலை துறை வளர்ச்சி   அரசியல் என்பது எல்லோருக்குமானது. மேல் சொல்லப்பட்ட விடயம் அரசியல் வாதி எந்த குறிப்பிட்ட திரையில் அளப்பரிய செயல் செய்வார் என்று கூறுகிறது.  பொதுவாக சினிமா துரையில் உள்ளவர்கள் மக்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்று அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். மேலும் திரை வெளிச்சம், ஏற்க்கனவே உள்ள மக்கள் தொடர்பு, திரைமயக்கம் கொண்ட விசிறிகள் போன்ற விடயம் இவர்கள் அரசியலில் கால் ஊன்ற எதுவாக உள்ளது.   ஆனால் எல்லா நடிகரும் திரையில் ஜொலித்ததுபோல் அரசியல் மேடையில் ஜொலிப்பதில்லை ஏன் ?  அரசியல் ... தொடரும்.....  Why is it common actors turn to be politician?  We have been seeing about 5th house since last few days. Actors are art professionals, that is, professionals who entertain people. It is a Platform for politics and people. The 5th house has so many stuffs within it like art, literature, spirituality, love, child, deep knowledge, grace of God, blessing, affection.  This is why cinema, politics, spiritualists, etc. are interconnected. Connection between politician with spiritual guru, action turning politician (vice versa), spiritual guru looking for media light.  Usually 5,7 cusp connectivity indicates serving people in Fine arts, Temple, politics etc.  What kind of political journey one will take?  it depends on the 5th cusp, if,  
5 - Sun - will work for the benefit of powerful person 
5 - Moon - will work for the welfare of women, he will do politics for his people and race. 
5 - Tuesday - will work for betterment of Police, civil servant, border issue 5 - Rahu - situational politics  
5 - Guru -  law and order and spiritual related politics 
5 - Saturn - Will do politics for the common man, labor, EWS 
5 - Wednesday - Will do politics for educational development 
5 - Ketu - confused / unclear politics 
5 - Venus - will talk about public interests to sustain in politics ( whether does it or not), art field, unorganized sector  Politicians have to be for all field and all people, 
but the above explains in which field he / she will do remarkable work.  Usually those in cine field know the pulse of people. Media light, existing public relations, the fans help in easily enter in to politics  But all actors are not shining in Politics why?  

Politics ... to be continued .....  

Would you like to know if you will succeed in politice
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

பயண விரும்பிகள் - Travel Freak !!!!

சிலர் எப்போதும் பயணம் 
செய்வதில் நாட்டம் கொண்டிருப்பார்கள்.

பயணம் இருவகைப்படும், குறுகிய பயணம் மற்றும் நீண்ட பயணம்.

குறுகிய பயணம் - சில மணி நேரம் அல்லது குறைந்த தூரம் கொண்ட பயணம்.

நீண்ட பயணம் - Leh Ladak, Manali, கரடு முரடான, சாகசம் செய்யக்கூடிய நோக்கில் மேற்கொள்ளக்கூடிய பயணம்.

லக்கின புத்திநாதன் 3,9 சந்திரன், மிதுனம் மற்றும் தனுசு தொடர்பு கொண்டால் நீண்ட தூற்ற பயணம் செய்வார். வாழ்க்கை முழுதும் பயணம் செய்வதிலேயே போய் விடும்.

லக்கின புத்திநாதன் 3,9 செவ்வாய் தொடர்பு கொண்டால் மலை மற்றும் கரடு முரடான பாதையில் பயணம் செய்வார்.

சனி - நடந்தே செல்வார்
ராகு - விமானம், ரயில் 
குரு - ஆன்மீக பயணம், சட்டம் ஒழுங்கு 
புதன் - கல்வி வியாபாரம்
கேது - ஆன்மிகம், பிறவி பயனை தேடி
சுக்கிரன் - தன சொந்த விருப்ப படி உல்லாச பயணம் 
சூரியன் - அரசு பயணம் 

3,9 பாவ புத்தி நாதன் 2,8 தொடர்பு கொண்டால் ஒரே இடத்தில முடங்கி கிடப்பார்.

3ம் பாவம் 8 , ரிஷபம், விருச்சிகம் தொடர்பு கொண்டால், பயணம் செய்யும் போது மரணிப்பார்.

9ம் பாவம் 8 , ரிஷபம், விருச்சிகம் தொடர்பு கொண்டால், விமான பயணம் செய்யும் போது மரணிப்பார்.

3,9ம் பாவம்  2,8,12 விருச்சிகம் தொடர்பு கொள்பவர்கள் பொதுவாக பயணம் செய்யாமல் இருப்பது, கவனமாக பயணம் செய்வது நல்லது.

9ம் பாவம் ஸ்திர ராசி தொடர்பு கொண்டால் helicopter பயணம்.

9ம் பாவம் 10, உபய மற்றும் மகரம் தொடர்பு astronaut 

ஒருவருடைய ஜாதகத்தில் (விருச்சிக லக்கினம்) 3,7 சனி - 6,10 ராகு , 2,5,8,11 சுக்கிரன் - அவர் 200 முறையாவது விமான பயணம் செய்திருப்பார். இதில் 2,8 என்பது குறுகிய பயணம் அதாவது இந்தியாவிற்குள் என்பதையும், ராகு 6,10 என்பது தொழில் முறை (மகரம் 3ம் பாவம்) பயணம் என்பதையும், ராகு (மிதுனம்) தொடர்பு கொள்வதையும், 2,8, 5,11 என்பது பயணங்களில் சிறு தடை ஏற்பட்டு பிறகு நல்லபடியாக நடப்பதையும் காட்டுகிறது.

இது போல் ஜோதிட ரீதியில் உங்கள் பயணம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து அதன் படி செயல்படுவது சிறந்த பலனை கொடுக்கும்.
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

Thursday, December 17, 2020

யாருக்கு கல்வியில் தேர்ச்சி ஏற்ப்படும்

ஜோதிடத்தில் கல்விமான் யார்? 

1ம் பாவம் ஜாதகரின் கல்வியை ஏற்கும் தன்மையை குறிக்கும். 1ம் பாவம் 8,12 தொடர்பு இல்லாமல் இருந்தால் படிக்க கூடியவர்.

2ம் பாவம் pre school அதாவது kinder garten எனப்படும் பால கல்வி 

3ம் பாவம் கல்விக்கு ஏற்ற மனச்சார்பு. 3ம் பாவம் 8,12 தொடர்பு இல்லாமல் இருந்தால் படிக்க கூடியவர்.

4ம் பாவம் பள்ளி கல்வி - 12ம் வகுப்பு வரை 

5ம் பாவம் ஆழ்ந்த அறிவு. 5ம் பாவம் 8,12 தொடர்பு இல்லாமல் இருந்தால் படிக்க கூடியவர்.

6ம் பாவம் தனக்கென தனித்துவமான முறையில் படிப்பவர், Determination ஓடு படிக்க கூடியவர்.

7ம் பாவம் போட்டி மனப்பான்மையோடு படிப்பவர்.

8ம் பாவம் கல்வியில் தடை 

9ம் பாவம் உயர் கல்வி 

10ம் பாவம் தொழிற் கல்வி 

11ம் பாவம் விரும்பிய படிப்பை படிக்க இயலும். ஆய்வு படிப்பு.

12ம் பாவம் புதியன கண்டு பிடிக்கும் படிப்பு. PhD Post Doctoral studies.

1,4,9 தொடர்பு பெற்றால் கல்வி மான்.

எந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தால் பிற்காலத்தில் நன்றாக சம்பாதிக்க இயலும்?

நன்றாக படிக்கும் நபர், பல்கலை கழகத்தில் முதல் மாணவராக வருபவர் ஏன் தொழிலில் கோட்டை விடுகிறார்?

நன்றாக படித்து கொண்டு வரும் குழந்தை திடீரென்று திசை மாறி  போவது ஏன்?

கல்வி துறையில் சாதிக்க  கூடியவர் யார்? 

தொடரும்...
 Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

Wednesday, December 16, 2020

மார்கழி பூஜை ஏன்

ராதே கிருஷ்ணா மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய விஷயங்களை பார்ப்போம்

अयनं दक्षिणं रात्रिरुत्तरं 
तु दिवा भवेत् ।
दैवतं तदहोरात्रं 
तत्त्रिंशन्मास उच्यते ।।

மனிதர்களின் ஒரு வருடகாலம் தேவர்களுக்கு ஒரு தினமாகும்.
தக்‌ஷிணாயனமானது இரவாகவும் 
உத்தராயனமானது பகலாகவும் 
கணக்கிடபடுகின்றது..

तद्दिनस्य उषःकालं 
चापमासं विदुर्बुधाः।
तस्मात्सर्वप्रयत्नेन 
चापमासे दिने दिने।।
उषःकाले तु सम्प्राप्ते 
बोधयित्वा जनार्दनम् ।
समभ्यर्च्य भजेद्विष्णुं 
जनानां दोषशान्तये ।।(भास्करीये

மார்கழி மாதமானது தேவர்களுக்கு 
விடியற்காலையாகும்.ஆதலால் நமது எல்லா தோஷங்களும் நீங்க 
அவஶ்யம் இந்த மாதத்தில் 
ப்ரதி தினமும் விடியற்காலையில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை ப்ரபோதனம்(சுப்ரபாதம்செய்து 
பஜிக்க  வேண்டும்..
उषःकाले तु सम्प्राप्ते 
अर्चयित्वा जनार्दनम् ।
उपचारैः षोडशभि-
र्मुद्गान्नं च निवेदयेत् ।।
             (ब्रह्माण्डपुराणे

விடியற்காலையில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை ஷோடஶோபசார 
பூஜை செய்து வெண்பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.
      ப்ரஹ்மாண்ட          புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது..

उषःकाले तु सम्प्राप्ते 
प्रत्यूषे स्नानमाचरेत् ।
अर्चयेच्च जगन्नाथं यावत्सूर्योदयात्पुरा।। 
           आदित्यपुराणे।।

விடியற்காலையில் எழுந்து ஸ்நானம் செய்து சூர்யோதயத்திற்கு முன்பு ஸ்ரீ மஹாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும்..

ஸ்நானம் செய்து ஸந்த்யாவந்தனம் தானே செய்ய வேண்டும்...???
ஆம் ஆனால் மார்கழி மாதத்திற்கு 
விதி விலக்கு உண்டு..
ततःप्रभातसमये अर्घ्यं 
प्रक्षिप्य वै द्विजः ।
गायत्रीं च ततो जप्त्वा 
उपतिष्ठेत भास्करम् ।।
              (आदित्य पुराणे

காலையில் ஸ்நானம் செய்து அர்க்யப்ரதானம் வரை செய்து .பிறகு சூர்யோதயத்திற்கு முன்பு பூஜையை முடித்து பிறகு காயத்ரீ ஜபத்தை செய்து சூர்யோதயத்திற்கு பிறகு உபஸ்தானம் செய்ய வேண்டும்..
(சில ஶிஷ்டர்கள் 
பூஜை முடித்தபிறகே அர்க்யப்ரதானம் செய்ய சொல்கின்றனர்)

விஷ்ணுவை மட்டும் தான் பூஜிக்க வேண்டுமா?? ஶிவனையும் பூஜிக்கலாமா??
அவஶ்யம் பூஜிக்கலாம்.

चापराशौ स्थिते सूर्ये 
उषःकाले दिने दिने ।
अभिषेकं ततः कुर्याद्
रौद्रमन्त्रेण रुद्रवित् ।।
अर्कपुष्पैश्च बिल्वैश्च 
पूजयेच्च महेश्वरम् ।
नैवेद्यं च ततः कुर्यात् 
लोक संहार शान्तये।।
              (शिव पुराणे।।

மார்கழி மாதத்தில் ஸ்ரீ ருத்ரப்ரஶ்னத்தை சொல்லி ஸ்ரீ பரமேஶ்வரனுக்கு அபிஷேகம் செய்து , எருக்கம் பூ மற்றும் பில்வங்களால் அர்ச்சனை செய்து,
நிவேதனம் செய்தால் லோகத்தில் ஏற்படும் எல்லா அழிவுகளும் நீங்கும்....

தனுர்மாத பூஜையினால்
என்ன லாபம்..???
உண்டே!!!!

कोदण्डस्थे सवितरि 
प्रत्यूषे पूजयेद्धरेः ।
सहस्राब्दार्चनफलं 
दिनेनैकेन लभ्यते ।।
                (भागवते 

மார்கழி மாதம் விடியற்காலையில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை  ஒரு நாள் பூஜித்தால், ஆயிரம் ஆண்டு பூஜித்த பலன் ஏற்படும்..

இப்படி வாய்ப்பை ஶாஸ்த்ரம் கொடுக்கின்றது ஒரு நாள் பூஜித்தாலே ஆயிரம் ஆண்டு பூஜித்த பலனாகில் , இம்மாதம் முழுவதும் உஷ: கால (விடியற்காலை) பூஜையை செய்து பகவத் அனுக்ரஹத்திற்கு பாத்திர்களாக ஆவோம். 
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

Friday, December 4, 2020

புத்திரப்ராப்தி ஒரு தெய்வீக பார்வை


                 சுவாதியில் முத்தெடுத்து ராதாவில் ( விசாகம் நட்சத்திரம்)  சேர்ந்த முத்து அனுராதாவில் ( அனுஷம் நட்சத்திரம்  ) பயிராகி கேட்டையில் கோட்டை கட்டும் என்பது ஜனன விதி.  ஆகையால்தான் குழந்தைப் பிறப்பில் தாமதமாகியிருக்கும் தம்பதிகளை சுவாதியில் இணையச் சொல்லும் கணிதத்தை ஜோதிடத்தில் சொல்லி வைத்தார்கள். இது பொதுவான கண்ணோட்டமாகக் கொண்டாலும் உள்ளிருக்கும் சூட்சுமத்தை அறிய வேண்டுமென்று சிந்தனையில் அமர்ந்தபோது  கிடைத்த இன்னுமொரு வழிப்பாதையையும் காணலாம்.
    அதாவது, பரணியில் அனல் மூட்டி கிருத்திகையில் நெய்கூட்டி ரோகிணியில்  ஒளிர்ந்திடும் பொழுது மிருகசீரிஷத்தில் வளம் சேர்க்கும் என்று எடுத்துச் சொல்வதும் சரியாகவே இருக்குமென நினைக்கிறேன்.
    சரி வாங்க, விசயத்திற்குப் போவோம்.
                    சூரியன் உத்திராடத்தில் வந்து சந்திரன் திருவோணத்தில் உலவும் நாளில் உத்திராயண புண்ணிய காலத்தையும்,
    சூரியன் புனர்வசுவின் 4ல் வந்து சந்திரன் கிருத்திகையில் உலாவும் நாளில் தட்ஷிணாயன புண்ணிய காலம் என்று வகுத்திருப்பதைப்போலவே இந்த புண்ணியகாலத்திற்குள் அடைபட்டு வரும் மாதங்களின் பருவ நிலையைத்தான் ருதுக்களாகப் பிரித்தும் வைத்தார்கள் நம் முன்னோர்கள்.  
         அந்த வகையில் மழைக்காலம் குறைந்து பனிக்காலம் தொடங்கும் கார்த்திகை மாதத்தில் உருவாகும் முன்பனியால் சூரியனின் மறைவுக்குப்பின் காணும் இருள் மிகவும் வெளிச்சம் குறைந்ததாகக் காணப்படுவதால் உருவாகும் புதிய உயிரினங்கள் மனிதர்களில் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்காமல் இருக்கும் பொருட்டு வெளித்தைச்சத்தை அதிகப்படுத்திக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒளிப்பிழம்பு என்று அறிவியல் ரீதியாக சொன்னாலும் ,  துலாம் மாதத்தில் நீசமாகி மீண்டுவரும் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிறுகச் சிறுக வெப்பத்தைக்கூட்டி ச்ராவண மாதத்தில் உத்திராயண காலம் முதல்  தனது வெப்பக் கதிர்களை அதிகமாக வெளிவிடுவதைப்போல் மனிதர்களின் ஆத்மாவும் மழைக்காலக் கொடுமைகளிலிருந்து விடுபட்டு மீண்டும் ஆன்ம பலத்தைக் கூட்டிக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட புனித நாளாக சூரியன் அனுஷம் நட்சத்திரத்தில் வந்து சந்திரன் கிருத்திகையில் உலவும் காலத்தில் மஹாதீபமாக ஒளிப்பிரவாகத்தை உருவாக்கி அதில் இறை பக்தியை வளர்த்தார்கள் என்றும் எடுத்துக் கொள்கின்றேன். அதுபோலவே சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து சூரியன் கார்த்திகை மாத அனுஷத்தில் புதிய பருவகால மாற்றங்களை உருவாக்கம் செய்வதால் கார்த்திகைப் பெண்கள் ( சந்திரன் - கார்த்திகை நட்சத்திரத்தில்)  ஆறுபேராக உவமானித்து காத்திகைத் தீப ஒளியில் மக்களின் மனதில் உருவாகும் பத்தி என்னும் இறைவனின் சிந்தனை ஆறுமுக வேலவனாக ( முருகப் பெருமானாக)  அழகிய தோற்றங்களைக் கொடுத்து வாழ்க்கை முறையை செம்மையுடன் வாழ வழியமைத்துச் சொல்லி வைத்திருக்கலாம் என்றே எடுத்துக் கொள்வதோடு இன்னும் ஒரு துணுக்குச் செய்தியாக,
   செவ்வாய், ராகு, குரு ( மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம்  ; சித்திரை, சுவாதி, விசாகம்,  அவிட்டம், சதயம், பூரட்டாதி)  இவர்களிடமிருந்து (  பூசம், அனுஷம், உத்திரட்டாதி ) சனிபகவானுடன் சூரியன் பயணிக்கும் பொழுது புதிய பிரபஞ்ச இரகசியங்களைத் தோற்றுவிக்கின்றது என்பதை சூட்சுமமாக உணர்த்திடவே கார்த்திகைத் தீபத் திருநாள், வைகாசி விசாகத் திருநாள், ஆடிப் பெருக்கு, தீபாவளி, தைப் பொங்கல், சித்திரைப் பௌர்ணமி போன்ற ஆன்மீகத் திருவிழாக்களையும்  ஏற்படுத்தி வாழும் கலையை வளர்த்திருக்கின்றார்கள் என்பதை எண்ணி பெருமிதம் கொள்வோம்!
     இதை இன்னும் ஜோதிட ரீதியாக நுணுக்கமாக ஆராய்ந்தால் நீண்ட பதிவாக நீண்டு கொண்டே பயணப்படும் என்பதால் நண்பர்களின் ஆராய்ச்சிக்கு இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!   Sri Sivaguru Jyothisam // 8124524165.!  அனுஷம் நட்சத்திரம் - பனைமரம் = கார்த்திகையில் வரும் அனுஷம் நட்சத்திரத்தில் சூரியனும், கிருத்திகையில் சந்திரனும் இருக்க, சொக்கப்பனை கொளுத்தப்படுவதும் வழக்கமாகி வந்திருப்பதையும் நினைவு கொள்வோம்!
  Ambharish.g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

கர்ம வினை எதனால்

வணக்கம் நண்பர்களே இன்று முக்கியமான சில தோஷங்களையும் அதற்குண்டான தீர்வுகளையும் பற்றி பார்க்கலாம்

மனிதனுடைய கர்மாவை மூன்று விதமாக பிரிக்கலாம்
1:சரி செய்யக்கூடிய கர்மா
2:அனுபவித்துக் கழிக்க வேண்டிய கர்மா 
3:கர்மா அழிந்தும் அழியாத கர்மா வளரும் குறையும்
மனிதப் பிறவி எடுப்பதே கர்மாவை கழிக்கத்தான்.
தோஷத்தை ஏற்படுத்துவது திரிகோனாதிபதி1,5,9
அதை செயல்படுத்துவது கேந்திரம்
1,4,7,10.பின் விளைவை உண்டு பண்ணுவது 6,8,12
பொதுவாக தீராத கோபமும் பேராசைகளும் கர்மாவிற்கு வழிவகுக்கும்.
தோஷத்திற்குண்டான கிரகநிலைகள்
1ஒரு பாவ அதிபதியும் பாதகாதிபதியும் சேர்ந்து இருப்பது.
2ஒரு பாவ அதிபதியுடன் அஷ்டமாதிபதி சேர்ந்திருப்பது.
ஒரு பாவ அதிபதியுடன் ராகு கேது சேர்ந்து இருப்பது.
ஒரு பாவ அதிபதியுடன் அஷ்டமாதிபதியும் ராகுவும் சேர்ந்து இருப்பது.
இதில் லக்னாதிபதி சம்பந்தப்பட்டால்
ஜாதகருக்கு. அதேபோல் எந்த பாவாதிபதி சம்பந்தப்படுகிறது அந்தப் பாவக காரக உறவுகளுக்கு தோசத்தை ஏற்படுத்துகிறது. 
பிதுர் தோஷம்:இது தலைமுறைகளைப் பாதிக்கும் கடுமையாக உழைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது ஜாதகர் தந்தை-மகன் மூவரும் கஷ்டப்பட்டால் பிதுர் சாபம் வேலை செய்கிறது என்று அர்த்தம்.
இதற்கு குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்து கொள்ளலாம்.
மாதுர் சாபம்:இது நாலாம் இடத்தை சேர்ந்தது இதற்கு அம்மா வழி குல தெய்வத்தை வணங்கலாம் அல்லது ஏதோ ஒரு அம்மன் கோயிலில் ஜென்ம நட்சத்திரத்தன்று  அபிஷேகம் அன்னதானம் செய்யலாம்.
குரு சாபம்:குரு 6 8 12ல் இருந்து உடன் ராகுஇருந்தால் குரு சாபம் ஒரு நல்ல குருமார்களுக்கு டிரஸ் எடுத்துக்கொடுத்து ஆசி வாங்கினால்
குரு தோஷம் நிவர்த்தியாகும்.
குலதெய்வ சாபம்:பிதுர் சாபம் இருந்தால் குலதெய்வ சாபம் இருக்கும்
குலதெய்வம் தெரியாமல் இருந்தால் காவல் தேவதைகளுக்கு வழிபாடு செய்தால் குலதெய்வத்தை காட்டிகொடுக்கும் எதோ ஒரு பிரார்த்தனை வைத்து அதை நிறைவேற்றினால் போதும்.
பொதுவாக தீப வழிபாடு சிறந்தது
தொடர்ந்து தீபம் ஏற்றுவது சிறப்பு
அக்கினி தான் தேவதைக்கு உணவு
மாதா, பிதா, குரு, குல தெய்வத்திற்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம்.
பெண் சாபம்:3விதமானபென்கள்
1அம்மா ஸ்தானம் 2கன்னிப் பெண்கள்
திருமணமான மற்றும் கரு உருவான பெண்கள்  12ல் சுக்கிரனோ புதனோ இருந்தால் கன்னிப் பெண் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை உயிரோடு எரித்தது புதைத்தது ஊரில் வர விடாமல் துரத்தியது மற்றும் காதலித்த பெண்களை களங்கப் படுத்தியது.
கூட மாந்தி இருந்தால் கொபம் பழி வாங்கும் உனர்ச்ற்சியில் இருக்கிறது
 என்று அர்த்தம்  தீர்வு ஒரு குறிப்பிட்ட
நாள் நட்சத்திரத்தில் தொடர்ந்து சில ஆண்டுகள் படையல் போட்டு கும்பிடலாம் படிப்படியாக விலகும்.
பிரேத சாபம்:எந்த கிரகத்துடன் மாந்தி சேர்ந்து இருந்தாலும் அதை பிரேத சாபம்
(இறக்கும்போது இறந்த மனநிலையைக் குறிக்கும்)சூரியன் அப்பா, சந்திரன் அம்மா, செவ்வாய் பங்காளி, புதன்மாமன், ராகு கேது தாத்தா பாட்டி
தீர்வு புண்ணிய நதிகளில் நீராடல்
மற்றும் புனித நீர் வீட்டில் தெளித்து விடலாம், மேலும் தில ஹோமம் மற்றும் சுமங்கலி பிரார்த்தனை போன்ற விசேஷ பூஜைகளை கொண்டு தோஷங்களின் விளைவுகளை பெருமளவு குறைத்துக் கொள்ளலாம்.
Ambharish.g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

புத்திர தோஷமும் நிவர்த்தியும்


நாம் இன்று புத்திர தோஷத்திற்கான நிவர்த்திகான வழிகளைப் பற்றி ஆராய்வோம் !
         லக்ன, ராசிக்கு 5 ல் சூரியன், செவ்வாய் போன்ற பாவிகள் இருந்தாலும் 5 ம் அதிபதி ஆட்சி, உச்சம், நட்பு பெற்று கேந்திர கோணத்தில் இருந்தால் புத்திர தோஷம் நிவர்த்தியாவதோடு குழந்தை பாக்கியம் உண்டாகும்.  
       5 ல் பாவிகள் நின்றாலும், அவர்களுடன் சுபர் கூடி ஆட்சி, உச்ச பலத்தோடு இருந்தால் அந்த ஜாதகருக்கு திருமணமாகி சில ஆண்டுகள் கழித்த பின்னர் குழந்தை பாக்கியம் ஏற்படும்.  
       5 ல் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் இருந்தால், நாகதோஷத்தால் ஜாதகருக்கு புத்திர தோஷம் உண்டு. ஆனால், புத்திரகாரகன் கேந்திர கோணங்களில் அமர்ந்து ஆட்சி, உச்ச பலத்துடன் இருந்தால் அந்த ஜாதகருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்த பின்னர் குழந்தை பாக்கியமுண்டாகும்.  
     5 ல் சுக்கிரன், புதன் முதலானோர் அமர்ந்திருந்தாலும், இவர்கள் ஆட்சி, உச்ச பலத்தோடு இருந்தால் ஜாதகருக்கு புத்திர தோஷம் நிவர்த்தியாகி அழகான பெண் குழந்தைகள் பிறக்கக்கூடிய அதிர்ஷ்டம் வந்து சேரும்.  
     5. ல் சூரியன், செவ்வாய் போன்ற பாவிகள் இருந்தாலும், இவர்கள் ஆட்சி, உச்ச பலத்துடன் இருக்க, ஜாதகருக்கு புத்திர தோஷம் நிவர்த்தியாகி அழகான ஆண் குழந்தைகள் பிறக்கும்.  
      5 ல் சனி, ராகு, கேது இருந்தாலும் இவர்கள் ஆட்சி, உச்ச பலத்துடன் இருந்தாலும் அல்லது யோக பலத்தில் ஓங்கியிருந்தாலும் ஜாதகரின் புத்திர தோஷம் நிவர்த்தியாகி குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும்.  
     5. ம்மிடத்தோன் பகை, நீசம் அடைந்திருக்க, அவரோடு பாவிகள் கூடியிருக்க, குரு ஆட்சி, உச்ச பலத்துடன் இருந்து அவரோடு சுபர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் ஜாதகருக்கு தோஷம் நிவர்த்தியாகி 10 ஆண்டுகள் கழிந்த பின்னர் குழந்தை பாக்கியம் உண்டாகும்.  
       5 மிடத்தோன் பகை, நீசம் பெற்று பாவிகளுடன் சம்பந்தப்பட்டிருக்க, 5 மிடத்தோன் நின்ற நட்சத்திர நாதன் ஆட்சி, உச்ச பலத்துடன் இருந்து குருவால் பார்க்கப்பட்டாலும்,  5 மிடத்தோன் நின்ற ராசிநாதன் ஆட்சி, உச்சம் பெற்று  குருவுடனும், 5 மிடத்தோன் நின்ற நட்சத்திர நாதனோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் ஜாதகருக்கு திருமணம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னர் குழந்தை பாக்கியம் ஏற்படும்.  
       5 ல் சுபர்கள் இருந்தாலும், 5 மிடத்தை சுபர்கள் பார்த்தாலும், 5 மிடத்தோன் பலமாக இருந்தாலும், 5 மிடத்தோன் சுபர்களோடு சம்பந்தப்பட்டிருந்தாலும், குரு ஆட்சி உச்சமாக இருந்து 5 மிடத்திற்கோ, 5 மிடத்தோனுக்கோ தொடர்பு கொண்டிருந்தாலும், அவர் நின்ற ராசி நாதன் பலமாக இருந்து 5 மிடத்தையோ, 5 மிடத்தோனையோ தொடர்பு கொண்டாலும் புத்திர தோஷம் நிவர்த்தியாகும்.  
        லக்னப் பிரகாரம் 5 ல் பாவிகள் இருக்க, 5 மிடத்தோனும் பலவீனத்தோடிருக்க,  ராசிப் பிரகாரம் 5 ல் சுபர்கள் நின்று 5 ம் அதிபதி பலமாக இருந்தால் அந்த ஜாதகருக்கு திருமணமாகி சுமார் 10 ஆண்டுகள் கழிந்த பின்னர் ஒரே ஒரு குழந்தை பிறந்து தீர்க்காயுளோடு இருக்கும்.!
Ambharish.g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

செவ்வாய் தோஷம் யாருக்கு

#செவ்வாய #தோஷம் -1



1 .செவ்வாய் மேஷத்தில் ஆட்சி பெற்றால் தோஷமில்லை.

2. செவ்வாய் விருசிகத்தில் ஆட்சி பெற்றால் தோஷமில்லை .

3. செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்றால் தோஷமில்லை .

4 .செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றால் தோஷமில்லை

5.செவ்வாய் சூரியன் வீடான சிம்மத்தில் இருந்தால் தோஷம் குன்றி தோஷமே இல்லை என்ற நிலை கொள்ளலாம் .

6 .கடகம் , சிம்மம் ,இலக்கினகாரர்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தாலும் அதை தோஷம் இல்லை என்று கருத வேண்டும் .

7 . தனுசு , மீனம் ,இலக்கினம் ,கொண்ட ஜாதகர்களுக்கு அட்டம ஸ்தானமாகிய 8 இல் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை .

8 . கன்னி ,மகரம் ,லக்கினம் ஆகி செவ்வாய் 8 இல் இருந்தால் தோஷமில்லை.

9 . மிதுனம் , கன்னி லக்கினம் ஆகி செவ்வாய் 12 இல் இருந்தால் தோஷம் இல்லை .

10. ரிஷபம் , துலாம்,லக்கினம் ஆகி செவ்வாய் 12 இல் இருந்தால் தோஷம் இல்லை.

11. செவ்வாயை ,குரு ,சனி ,பார்வை பார்த்தாலும் , சேர்ந்தாலும் , தோஷம் இல்லை.

12.செவ்வாயை ,ராகு ,கேது ,பார்த்தாலும் ,சேர்ந்து இருந்தாலும் தோஷம் இல்லை

13. தேவ கேரளம் நூல் படி , செவ்வாய் இருக்கும் 2 ஆம் இடம் மிதுனம் ,அல்லது கன்னி ஆனால் தோஷம் இல்லை.

14. செவ்வாய் இருக்கும் 4ஆம் இடம் மேஷம், விருட்சிகம் ஆனால் தோஷம் இல்லை.

15. செவ்வாய் இருக்கும் 7 ஆம் இடம் கடகம், மகரம் ,ஆனால் தோஷம்இல்லை

16. செவ்வாய் இருக்கும் 8 ஆம் இடம் தனுசு , மீனம், ஆனால் தோஷம் இல்லை

17 .செவ்வாய் இருக்கும் 12 ஆம் இடம் ரிஷபம் , துலாம் ,ஆனால் தோஷம் இல்லை

18 .கும்பத்தில் ,சிம்மத்தில் ,செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

19.செவ்வாய் சூரியனுடன் சேர்ந்தாலும் , பார்த்தாலும் தோஷம் இல்லை

20.செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்தாலும் தோஷம் இல்லை

21. செவ்வாய் புதனுடன் சேர்ந்தாலும் ,பார்த்தாலும் தோஷம் இல்லை.

22 .செவ்வாய் குருவுடன் சேர்ந்தாலும் , பார்த்தாலும், தோஷம்இல்லை.

23. செவ்வாய் இருக்கும் இடம் 8 ,12 ,ஆம் இடம் மேஷம் ,சிம்மம் ,விருச்சிகம் ,மகரம் ஆனால் தோஷம் இல்லை .

24 . செவ்வாய் நின்ற வீடடு அதிபதி லக்கின, கேந்திரம் , அல்லது திரிகோண ஸ்தானம் 1,4,7,10,1,5,9, ஆகிய ராசிகளில் இருந்தால் தோஷம்இல்லை

25 .செவ்வாய் சர ராசியான மேஷம் ,கடகம் ,துலாம் ,மகரம் ஆகிய ராசிகளில் இருந்து இலக்கினதிற்கு 2,4,7,8,12, ஆக இருந்தாலும் தோஷம் இல்லை, ஆனால் ஸ்திர உபய , ராசிகளுக்கு செவ்வாய்தோஷம் உண்டு .

26.பெண் ஜாதகங்களில் லக்னம்,அல்லது சந்திரா லக்னம் ஆகிய இரண்டில் எது பலமாக இருக்கோ,அந்த ராசியை கொண்டு செவ்வாய்தோஷ பலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று ஹோரா சாஸ்திரத்தில்சொல்லபட்டுள்ளது .

27 மேலும் பெண் ஜாதகத்தில் ,லக்கினம் ,சந்திரலக்கினம் ,சுக்கிரன் நின்ற ராசி ,ஆகிய மூன்று இடங்களிலும் செவ்வாய் தோஷம் இருந்தாலும் செவ்வாய் திசை நடைமுறைக்கு வருமானால் கணவனுக்கு ,தோஷம்,கண்டம் , மாரகம் ,நடைபெற கூடும் என்றும்இதில் ஜென்ம லக்கினம் மட்டும் முக்கியமாக கணக்கீடும் செய்ய வேண்டும் .

28.யவனேஸவரால் எழுதபட்டுருக்கும் ஸ்திரி ஜாதகாதயத்தில் செவ்வாய் நட்பு வீட்டிலோ , குரு,வளர்பிறை சந்திரன் ,புதன் ,சேர்ந்தாலும் , பார்த்தாலும் ,நல்ல பலனாகவே நடக்கும் என்பதுசாஸ்திர விதி ஆகும் -

29.மூலகிரந்த வாக்கியப்படி செவ்வாய் லக்கினாதிபதி ஆகஇருக்குமானால் அவர் எந்த இடத்தில் இருந்தாலும் சுபம் மட்டும்தான் செய்வார் என்பதாம். எனவே இதையும் மனத்தில் கொண்டு பொருத்தம் பார்க்க வேண்டும் .

30. கர்க மகரிஷி மேல் குறிப்பிட்ட ஸ்தனங்களில் செவ்வாய் இருக்கசனி ,ராகு,கேது சேர்ந்தாலும் ,பார்த்தாலும் ,செவ்வாய் தோஷம் இல்லை என்று சொல்கீறார் .

31 .முஹூர்த்த சங்கிரக தர்ப்பணம் எனும் நூலில் இலக்கினதிக்கு சனி பகவான் 1,4,7,8,12, ஆகிய இடங்களில் இருந்தால் .அந்த ஜாதகற்குசெவ்வாய் தோஷம் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது.

32 .சரள யோகம் செவ்வாய் 12 ஆம் வீட்டின் அதிபதியாகி எட்டாம் ராசிகளில் இருந்தால் உதாரணமாக தனுசு லக்னம் ,கடகத்தில் செவ்வாய், ரிஷபம் லக்னம் தனுசு ராசிகளில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

33. 7 ஆம் இடத்தின் அதிபதியுடன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றால்உதாரனமாக கன்னியா லக்கினம் 7 இல் மீனத்தில் செவ்வாய் 3 இல் குரு விருசிகத்தில் இருந்தால் தோசம் இல்லை

34.செவ்வாய் கேது பகவான் நட்ச்சத்திரமான அஸ்வினி , மகம் ,மூலம் ,நட்ச்சத்திரசாரம் பெற்றால் தோசம் இல்லை.

35.ஷட்பலம் உள்ள குரு அல்லது சுக்கிரன் , லக்னம் ,அல்லது 7 இல்நிற்க ,செவ்வாய் தோஷம் இல்லை .

36 .செவ்வாய் ,நீசம், வக்கிரம் அஸ்தாங்கம் ,ஆனால் தோஷம் இல்லை

37.செவ்வாய் அனுஷம் ,திருவோணம் ,உத்தராடம் ஆகிய நட்ச்சத்திரசாரம் பெற்றால் சாத்வீக தோஷம் இல்லை.

38 .#செவ்வாய் அவிட்டம் ,மூலம், கேட்டை, விசாகம் ,மகம் ,ஆயில்யம் ,கார்த்திகை ,பரணி ,பூராடம் ,பூரம் , பூரட்டாதி ,ஆகிய நட்ச்சத்திர சாரத்தில் நின்றாள் தோஷம் உண்டு பண்ணும் ,

39. #செவ்வாய் தோஷம் என்பது பாதிப்பு மட்டும் தான் தரும் மரணம் தராது என்கிறது சுக்கிர நாடி .

40. #சனி , செவ்வாய் , பரஸ்பர பார்வை கூடாது என்பது ஒரு கொள்கை.

41.#செவ்வாய் ,குரு நவாம்சத்தில் சேர்ந்தாலும் தோஷம் இல்லை..

42 .#செவ்வாய் அஸ்தமனம் , ராகு உடன் 5 பாகைக்குள் இணைந்து இருத்தல் , நீச சுக்கிரனுடன் சேர்க்கை ஆனால் செவ்வாய் தோஷம்உண்டு.

43 . செவ்வாய் கிரக யுத்தம் ஆனாலும் அதில் தோற்றாலும், கிரக யுத்தத்தில் உள்ள மற்ற கிரகங்களுடன் சேர்ந்தாலும் செவ்வாய் தோஷ விலக்குகள் கிடையாது .

Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

Wednesday, December 2, 2020

மாதங்களும் வாழ்வியல் முறையும்

இனிய நண்பர்களுக்கு.

                 சுவாதியில் முத்தெடுத்து ராதாவில் ( விசாகம் நட்சத்திரம்)  சேர்ந்த முத்து அனுராதாவில் ( அனுஷம் நட்சத்திரம்  ) பயிராகி கேட்டையில் கோட்டை கட்டும் என்பது ஜனன விதி.  ஆகையால்தான் குழந்தைப் பிறப்பில் தாமதமாகியிருக்கும் தம்பதிகளை சுவாதியில் இணையச் சொல்லும் கணிதத்தை ஜோதிடத்தில் சொல்லி வைத்தார்கள். இது பொதுவான கண்ணோட்டமாகக் கொண்டாலும் உள்ளிருக்கும் சூட்சுமத்தை அறிய வேண்டுமென்று சிந்தனையில் அமர்ந்தபோது  கிடைத்த இன்னுமொரு வழிப்பாதையையும் காணலாம்.
    அதாவது, பரணியில் அனல் மூட்டி கிருத்திகையில் நெய்கூட்டி ரோகிணியில்  ஒளிர்ந்திடும் பொழுது மிருகசீரிஷத்தில் வளம் சேர்க்கும் என்று எடுத்துச் சொல்வதும் சரியாகவே இருக்குமென நினைக்கிறேன்.
    சரி வாங்க, விசயத்திற்குப் போவோம்.
                    சூரியன் உத்திராடத்தில் வந்து சந்திரன் திருவோணத்தில் உலவும் நாளில் உத்திராயண புண்ணிய காலத்தையும்,
    சூரியன் புனர்வசுவின் 4ல் வந்து சந்திரன் கிருத்திகையில் உலாவும் நாளில் தட்ஷிணாயன புண்ணிய காலம் என்று வகுத்திருப்பதைப்போலவே இந்த புண்ணியகாலத்திற்குள் அடைபட்டு வரும் மாதங்களின் பருவ நிலையைத்தான் ருதுக்களாகப் பிரித்தும் வைத்தார்கள் நம் முன்னோர்கள்.  
         அந்த வகையில் மழைக்காலம் குறைந்து பனிக்காலம் தொடங்கும் கார்த்திகை மாதத்தில் உருவாகும் முன்பனியால் சூரியனின் மறைவுக்குப்பின் காணும் இருள் மிகவும் வெளிச்சம் குறைந்ததாகக் காணப்படுவதால் உருவாகும் புதிய உயிரினங்கள் மனிதர்களில் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்காமல் இருக்கும் பொருட்டு வெளித்தைச்சத்தை அதிகப்படுத்திக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒளிப்பிழம்பு என்று அறிவியல் ரீதியாக சொன்னாலும் ,  துலாம் மாதத்தில் நீசமாகி மீண்டுவரும் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிறுகச் சிறுக வெப்பத்தைக்கூட்டி ச்ராவண மாதத்தில் உத்திராயண காலம் முதல்  தனது வெப்பக் கதிர்களை அதிகமாக வெளிவிடுவதைப்போல் மனிதர்களின் ஆத்மாவும் மழைக்காலக் கொடுமைகளிலிருந்து விடுபட்டு மீண்டும் ஆன்ம பலத்தைக் கூட்டிக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட புனித நாளாக சூரியன் அனுஷம் நட்சத்திரத்தில் வந்து சந்திரன் கிருத்திகையில் உலவும் காலத்தில் மஹாதீபமாக ஒளிப்பிரவாகத்தை உருவாக்கி அதில் இறை பக்தியை வளர்த்தார்கள் என்றும் எடுத்துக் கொள்கின்றேன். அதுபோலவே சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து சூரியன் கார்த்திகை மாத அனுஷத்தில் புதிய பருவகால மாற்றங்களை உருவாக்கம் செய்வதால் கார்த்திகைப் பெண்கள் ( சந்திரன் - கார்த்திகை நட்சத்திரத்தில்)  ஆறுபேராக உவமானித்து காத்திகைத் தீப ஒளியில் மக்களின் மனதில் உருவாகும் பத்தி என்னும் இறைவனின் சிந்தனை ஆறுமுக வேலவனாக ( முருகப் பெருமானாக)  அழகிய தோற்றங்களைக் கொடுத்து வாழ்க்கை முறையை செம்மையுடன் வாழ வழியமைத்துச் சொல்லி வைத்திருக்கலாம் என்றே எடுத்துக் கொள்வதோடு இன்னும் ஒரு துணுக்குச் செய்தியாக,
   செவ்வாய், ராகு, குரு ( மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம்  ; சித்திரை, சுவாதி, விசாகம்,  அவிட்டம், சதயம், பூரட்டாதி)  இவர்களிடமிருந்து (  பூசம், அனுஷம், உத்திரட்டாதி ) சனிபகவானுடன் சூரியன் பயணிக்கும் பொழுது புதிய பிரபஞ்ச இரகசியங்களைத் தோற்றுவிக்கின்றது என்பதை சூட்சுமமாக உணர்த்திடவே கார்த்திகைத் தீபத் திருநாள், வைகாசி விசாகத் திருநாள், ஆடிப் பெருக்கு, தீபாவளி, தைப் பொங்கல், சித்திரைப் பௌர்ணமி போன்ற ஆன்மீகத் திருவிழாக்களையும்  ஏற்படுத்தி வாழும் கலையை வளர்த்திருக்கின்றார்கள் என்பதை எண்ணி பெருமிதம் கொள்வோம்!
     இதை இன்னும் ஜோதிட ரீதியாக நுணுக்கமாக ஆராய்ந்தால் நீண்ட பதிவாக நீண்டு கொண்டே பயணப்படும் என்பதால் நண்பர்களின் ஆராய்ச்சிக்கு விட்டு விடுகிறேன்.

அனுஷம் நட்சத்திரம் - பனைமரம் = கார்த்திகையில் வரும் அனுஷம் நட்சத்திரத்தில் சூரியனும், கிருத்திகையில் சந்திரனும் இருக்க, சொக்கப்பனை கொளுத்தப்படுவதும் வழக்கமாகி வந்திருப்பதையும் நினைவு கொள்வோம்!
    மேலும் இந்தப் பதிவு உங்களுப் பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள் அப்போதுதான் உங்கள் நண்பர்களுக்கும் காணும் பாக்கியம் கிடைக்கும் !
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

ஸந்தியாவந்தன மஹிமை

சந்தியாவந்தன மகிமை – 1: 

சோம்பல் நீக்கம்

கடவுள் நமக்கு உதவவேண்டுமென்றால் அந்த உதவியை பெற நம்மை நாம் தயார் செய்து கொள்ளவேண்டும். சந்தியாவந்தனத்தை அதிகாலையில் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் விடிவதற்கு முன் எழுவது பழக்கமாகி சோம்பல் நீங்குவதுடன் நாளடைவில் நம் செயல் திறன் அதிகரித்து வாழ்வில் ஏற்படும் இடர்களை சந்திக்கும் திறமை நமக்கு ஏற்படும்.

சந்தியாவந்தன மகிமை – 2: 

ஆரோக்கியம் பிராணாயாமம் செய்வது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தை வளர்க்க பெரிதும் உதவும். தொடர்ந்து உழைக்கும் உடலுக்கும் மனதுக்கும் சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் சிறிது நேரம் ஓய்வு கிடைப்பதால் மனஅழுத்தம் குறைந்து ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

சந்தியாவந்தன மகிமை – 3: 

தவறான செயல்களுக்கு தடை
அவ்வப்பொழுது சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் கடவுள் ஞாபகம் ஏற்படுவதால் தவறான செயல்கள் செய்யும் வாய்ப்பு வெகுவாக குறையும். மனம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்காமல் ஒரு சிலநிமிடம் ஓய்வெடுப்பதால் புத்தியின் வார்த்தைகளை செவிகொடுத்து கேட்க அவகாசம் கிடைக்கும். ஆசைகள் அளவுக்கு மீறாமல் ஒரு நிதானம் ஏற்படும்.
பிடித்தது பிடிக்காதது என்ற அடிப்படையில் செயல்படும் மனம் நிலையாத இன்பங்களை தேடுவதிலேயே அனைத்து நேரத்தையும் செலவிடும் தன்மை உடையது. சந்தியாவந்தனம் செய்வதனால் நிலையான இன்பத்தை தேடுவதுதான் வாழ்வின் குறிக்கோள் என்ற புத்தியின் அறிவுரையை திரும்ப திரும்ப கேட்பதன் மூலம் விரைவில் மனம் திருந்தி அதனுடன் ஒத்துழைக்க ஒத்துக்கொள்ளும்.

சந்தியாவந்தன மகிமை – 4:

 சரியான செயல்களுக்கு ஊக்கம்
நல்லது கெட்டது என்ற அடிப்படையில் செயல்படும் புத்திக்கு சந்தியாவந்தனம் ஊக்கம் அளிக்கிறது. நிலையான இன்பத்தை பெற தர்மமான காரியங்களை மட்டும் செய்து வாழ்வில் அதர்மத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை சந்தியாவந்தனம் நினைவுபடுத்தும்
.
சந்தியாவந்தன மகிமை – 5: 

பாதையில் கவனம் 
 சந்தியாவந்தனம் என்பது நாம் வேலை செய்வதன் காரணம் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல என்றும் வேதாந்தத்தை படிக்க தேவையான மனப்பக்குவத்தை பெறுவதற்காகவே என்றும் நாளில் மூன்று முறை நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே செய்யும் வேலைகளை கர்ம யோகமாக செய்யவும், புலன்களை அடக்கி மனதை புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சந்தியாவந்தனம் உதவுகிறது.

சந்தியாவந்தன மகிமை – 6:

 இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு புத்திக்கூர்மை உண்டாகும்.

சந்தியாவந்தன மகிமை –7:
 மனதில் சாந்தமும் தெளிவும் உண்டாகும்.தன் நம்பிக்கை வளரும்

சந்தியாவந்தன மகிமை – 8: 
மூக்கு ,நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்
ஸ்ரீமகாபெரியவா அவர்கள் கூறியது
              பிராமணர்கள் பூஜை செய்யும்போது அடிக்கிற மணி சப்தத்தைவிட ஸந்த்யாவந்தனம் செய்யும்போது வருகிற பஞ்ச பாத்திர உத்தரணி சப்தம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
savithaastro@gmail.com
savithastro.blogspot.com