Thursday, April 25, 2024

பிரசன்ன ஜோதிஷ நிமித்தங்கள்

ப்ரஸ்ன ஜோதிஷம் பார்க்கும் போது ஜோதிஷர்கள் கவனிக்க வேண்டிய நிமித்தங்கள்,


1.ஸமயா (Samaya)

கேள்வி கேட்கப்படும் நேரம்,


2.தெஸா(Direction)

கேள்வி கேட்பவர் நிற்கும் திசை.


3.ஸ்வாஸா(Breathing)

ஜோதிஷன் சுவாஸ ஸ்திதி.


4.அவஸ்தா (Avastha)

ஜோதிஷனின் தற்போதைய மனோநிலை.


5.ஸ்பர்ஸா(Sparsa-touching)

ஜாதகர் தன் ஸரீர பாகங்களை தொடும்போது கவனித்தல்.


6.ப்ரஸ்ன இராசி, (Prassana rasi)

ப்ரஸ்ன லக்கினத்தின் இராசி ஸ்திதி.


7.ஸம்பிதானா தெஸா;(Direction of. Place)

ப்ரஸ்னம் காட்டும் திக்கு.


8.ப்ரஸ்னக்ஷரா. (The first word  spoken by the native)

ஜாதகர் சொல்லும் முதல் வார்த்தை.


9..விருச்சிகன் ஸ்திதி,

(Natives sitting position)

ஜாதகர் அமர்ந்திருக்கும் நிலை.


10.ஜ்யேஷ்டா(Nativesactivity)

ஜோதிஷம் கேட்க வந்தவர்களின் ஸரீர பாக செயல்பாடுகள்.


11.மனோபாவா(Natives thoughts)

ஜாதகரின் அப்போதைய. மனோநிலை.


12.விலோக்கினம்.

(Natives  looking  directions)

ஜாதகர் எங்கேயெல்லாம் பார்க்கிறார்,

என்பதை கவனிப்பது.


13.வஸ்திரா(Natives  Dressing positions) 

ஜாதகரின் வஸ்திர தரித்த நிலைகளை

கண்டுகொள்வது.


14.நிமித்தா(Situation around the person doing prasnam  )

ப்ரஸ்னம் பார்க்கும் போது ஜோதிஷனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்,


ப்ரஸ்ன. ஜோதிஷம் பார்க்கும் போது ஜோதிஷர்கள் இவைகளை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்,

Ambharish g 

savithaastro@gmail.com 

savithaastro.blogspot.com

9790111570

அக்னி நட்சத்திரத்தில் செய்யகூடியது செய்யகூடாததும்

அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி 3வது பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது.

 இந்த காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் நேரம். 

அப்போது சூரியனுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுக்கப்படுகிறது. சூரியன் என்பது விண்மீன் தான். மற்ற காலங்களில் நாம் அதனை சூரியன் என்கிறோம்.

அக்னி நட்சத்திரம் ஆண்டுதோறும் 21 நாட்கள் வருகின்றன.

 அக்னி நட்சத்திர நாளில் சந்திரன் மட்டுமல்லது. பூமி கூட சூரியனுக்கு சற்று அருகே இருக்கும்.

 அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும். 

பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும்.

 இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பத்தை தரும்.

அக்னி நட்சத்திர வரலாறு :

முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள்.

 தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது.

 அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும். எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.

அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன.

 21 நாள்அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்' என வருணன் கூறினான்.

இதையறிந்த அக்னி தேவன் கிருஷ;ணரிடம் ஓடி, நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டான். கிருஷ;ணன் அர்ஜீனனைப் பார்த்தார். அர்ஜீனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான்.

அப்போது கிருஷ;ணர், 21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். 

அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்' என்றார். அதன்படி அக்னி தேவன் காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்று சாஸ்திரங்களில் கூறுப்படுகிறது.

அக்னி நட்சத்திரத்தில் 
என்ன செய்யலாம்? என்ன செய்யகூடாது என
நமது தமிழர்களை பொறுத்தவரை பழங்காலத்திலிருந்தே மாதங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.

தமிழ் மாதங்கள் மொத்தம் 12 ஆகும்.

 பண்டைய தமிழர்கள் இரண்டு வகையாக மாதங்களை குறித்து வந்துள்ளார்கள். பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும், பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் மாதங்களை கணக்கிட்டார்கள்.

 அவையாவன : சூரிய மாதம் என்றும் சந்திர மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் முதலாமானவள் என்ற சிறப்பை பெற்றவள் சித்திரைத் தாய்.

அக்னி நட்சத்திரம் ஆரம்பம் :

சூரியனின் ஒளிதான் நம் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் படி சூரியனின் அதிஉச்ச காலமான அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பார்கள். 

அர்ஜுனன் காண்டவ வனம் எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம் அக்னி நட்சத்திரக் காலம் என்றும் சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் சிவாலயங்களில் இறைவனுக்கு தாராபிஷேகம் செய்விப்பார்கள்.

அதன்படி இந்த அக்னி நட்சத்திரத்தில் கத்திரி வெயிலின் போது வீடு கட்ட ஆரம்பிப்பது மற்றும் அதற்கான கிணறு வெட்டுதல், பூமிபூஜை செய்வது, விவசாய விதைப்பு வேலைகள், மரம் வெட்டுதல், குழந்தைகளுக்கு காது குத்தி மொட்டையடித்தல் போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது.

அதேநேரத்தில் கட்டிய வீட்டில் குடிபுகுதல், வாடகை வீடு மாறுதல், நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல், திருமணம், சீமந்தம், உபநயனம் போன்ற சுபகாரியங்கள் செய்யத் தடையில்லை.

ஜோதிடரீதியாக இது சில விஷயங்களுக்கு தோஷ காலம் எனப்படுவதால் பழமையான சிவன் கோவில்களில் சர்வேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்விப்பது சகல தோஷத்தையும் நீக்கும்.

சித்திரை திருவோண நடராஜர் அபிஷேகம் 

நடராஜருக்கு தேவர்களின் கணக்குப்படி ஆறுகால அபிஷேகமாக ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் செய்வார்கள்.

 அதில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில்  அபிஷேகம் செய்யப்படும் 

 உச்சிகால அபிஷேகமான இதை தரிசித்தால்,  பிறப்பில்லா பேரின்ப நிலையை எட்டலாம் என்பது ஐதீகம்.
Ambharish g 
savithaastro@gmail.com 
savithaastro.blogspot.com
9790111570

Wednesday, April 24, 2024

விதி மதி கதி

 விதி என்பது முன் ஜென்மத்தில் 

நாம் செய்த பாவ,

புண்ணியம் காரணமாக அனுபவித்து தீர்க்கபட வேண்டிய கர்மா.

இது ஏற்கனவே நமக்காக நாம் அனுபவிக்க தீர்மானிக்கப்பட்டது.

மதி என்பது 

இந்த ஜென்மத்தில் நாம் செய்ய போகிற பாவ,புண்ணிய

கர்மா .

அதாங்க நமக்காக நாம் அனுபவிக்க

நம்மளாலேயே 

நாம் தீர்மானிக்கப் போகிற கர்மா .

நமக்கு இனி வருங்காலத்தில் நமக்கு என்ன நன்மை தீமை வரும் என்று தீர்மானிப்பது கதி 

விதிக்கு லக்னம்

மதிக்கு சந்திரன்

கதிக்கு சூரியன் 

என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்த நியதி.

பிறப்பில் இருந்து

ஒருவருக்கு விதி 

என்கிற லக்னம் 33 வயது வரை தன் கர்மாவை அனுபவிக்க செய்யும்.

மதி என்கிற சந்திரன் 

34 வயது முதல் 66 வயது 

வரை தன் கர்மாவை 

அனுபவிக்க செய்யும்.

கதி என்கிற சூரியன் 

67வயது முதல் 99 வயது 

வரை தன் கர்மாவை அனுபவிக்க செய்யும்.

என்று ஜோதிட சாஸ்திரம் 

வரையறுத்து உள்ளது.

விதி என்பது 

இறந்த காலம் 

நமக்கு 

தீர்மானிக்கப்பட்டது.

மதி என்பது 

நிகழ்காலம் 

நாமாகவே ,

தீர்மானிப்பது.

கதி என்பது 

எதிர்காலம் 

நமக்காக 

தீர்மானிக்கப்போவது.

Ambharish g 

savithaastro@gmail.com 

savithaastro.blogspot.com

9790111570

நவகிரக குளியல்:

 

நவகிரகப்ரீதி-ஸ்நானங்கள் ஒன்பது 


சூரியன் : கச கசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.


சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுதும் தேய்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.


செவ்வாய் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.


புதன் : மஞ்சள்கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.


வியாழன் : கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.


சுக்கிரன் : பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.


சனி : கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.


ராகு : மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.


கேது : அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

Ambharish g 
savithaastro@gmail.com 
savithaastro.blogspot.com
9790111570

கிரஹயுத்தம்

குரு சுக்கிரன் சனி கிரகயுத்தங்கள்:

குரு

குரு சுக்கிரனால் வெற்றிகொள்ளப்பட்டால் இமாச்சலப்பிரதேசத்தின் மலைப் பகுதிகள், பாகிஸ்தானின் Potohar பகுதிகள்,ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதிகள், பஞ்சாபின் வடமேற்குப் பகுதிகள், மதுரா, சாளுவம், கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட பகுதிகளான அலகாபாத்தின் தென்மேற்குப் பகுதிகள்,வங்கதேசம் ஆகியவைகளும் கால்நடைகளும் உணவுதானியங்களும் சேதமடையும்.

குருவை செவ்வாய் ஜெயிக்குமானால் நாட்டின் மத்தியப்பகுதிகளும் அவற்றை ஆட்சி செய்பவர்களும், பசுக்களும் பாதிக்கப்படுவார்கள்.

சனி குருவை வெற்றிகண்டால் ராஜஸ்தானின் வடகிழக்குப் பகுதிகள், இந்தியாவின் மேற்குப்பகுதியில் உள்ள மலைப்பிரதேசங்கள், பாகிஸ்தானின் பகவல்பூர்,பலுசிஸ்தான் மற்றும் முல்தான் பகுதிகள் ஆகியவையும் பிராமணர்களும் பாதிக்கப்படுவார்கள். 

புதன் வெற்றிபெற்றால் முஸ்லிம்கள், நேர்மையாளர்கள், படைவீரர்கள் மற்றும் நாட்டின் மத்தியப்பகுதிகள் பாதிப்படையும். மேலும் யானை,குதிரை, முதல்வர் மற்றும் மந்திரிகள், சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பவர்கள், மருந்து தயாரிப்பாளர்கள், பண்டிதர்கள், தொண்டு நிறுவனங்கள், செல்வந்தர்கள், இலக்கணப்பண்டிதர்கள், தத்துவ ஞானிகள், வேதபண்டிதர்கள், அரசியல்வாதிகள், உயர்ரக ஆயுதங்கள் ஆகியவை பாதிப்படையும்.

சுக்கிரன்

சுக்கிரனைக் குரு வென்றால் நாட்டின் எல்லையோர மாநிலங்களை ஆட்சி செய்பவர்கள் அழிந்து போவார்கள். பிராமணர்களும் அரசவம்சத்தினர்களும் சிக்கலைச் சந்திப்பார்கள். மழை பெய்யாது. அயோத்தி பைசாபாத் பகுதிகள்,ஒரிசா மற்றும் ஆந்திராவின் வடபகுதிகள், வங்கதேசம்,அலஹாபாத் பகுதிகள், நாட்டின் மத்தியப்பகுதிகள்,உத்தரப்பிரதேசத்தின் Braj பகுதிகள் ஆகியவை பலவிதத்திலும் பாதிக்கப்படும். 

செவ்வாய் சுக்கிரனை வெற்றிகண்டால் இராணுவ உயர் அதிகாரிகள் கொல்லப்படுவார்கள். ஆட்சியாளர்கள் போர் காரணமாக சிறைப்படுவார்கள்.

சுக்கிரனை புதன் ஜெயித்தால் மலைப்பிரதேசத்தில் வசிப்பவர்கள் பாதிக்கப் படுவார்கள். மழை பெய்யாது. பாலுக்கு பற்றாக்குறை உண்டாகும். 

சனியால் சுக்கிரன் தோற்கடிக்கப்பட்டால் நிறுவனங்களின் தலைவர்கள்,இராணுவ வீரர்கள், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், நீர்வாழ் விலங்குகள் மற்றும் பொருட்கள் ஆகியவை பாதிக்கப்படும். மேலும் மவுண்ட் அபு, புஷ்கரம், சௌராஷ்டிரா ஆகிய பகுதிகள், சூத்திரர்கள், ரைவதக மலைக்கு அருகில் வசிப்பவர்கள், தவறான செய்கையுடையவர்கள், வயது முதிர்ந்தவர்கள்,காட்டுப்பன்றி வேட்டையாடுபவர்கள், விதவைகள், திருடர்கள், எருமை,கழுதை, ஒட்டகம் முதலானவைகளும் பாதிக்கப்படும்.

சனி

சனியைச் சுக்கிரன் வென்றால் விலைவாசி ஏற்றமடையும். பாம்புகள், பறவைகள் மற்றும் பிரபலமான மனிதர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

சனியைச் செவ்வாய் வென்றால் தக்காணம்,ஆந்திரா, இந்துகுஷ் மலைப் பகுதிகள், பஞ்சாப் மற்றும் வடகாசி ஆகியவை பாதிக்கும்.

புதன் சனியை வெற்றிகொள்ளுமானால் பீகார்,ஜார்கண்ட்,மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளும் வியாபாரிகள், பறவைகள், கால்நடைகள், யானைகள் போன்றவையும் பாதிக்கப்படும். 

சனி குருவிடம் தோற்றால் பெண்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களும், பெண்களால் நிர்வகிக்கப்படும் மாநிலங்களும் பாதிக்கப்படும்

Ambharish g 

savithaastro@gmail.com 

savithaastro.blogspot.com

9790111570

யோகி அவயோகி

ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் முதலில் அந்த ஜாதகர் எந்த யோகத்தில் பிறந்திருக்கிறார் என்றும் அவருக்கு யோகியாக வரும் கிரகம் யார் என்றும் , யோகி சாரத்தில் எத்தனை கிரகங்கள் இருக்கின்றன. 

தற்போது நடைபைறும் தசாபுத்திநாதர்கள் யோகி அல்லது அவயோகி நட்சத்திரத்தில் இருக்கிறார்களா என்பதை கணக்கிட

ஆங்கிலத்தில் கணக்கற்ற கட்டுரைகள் 

   Yogi avayogi planets 

   Yogi avayogi prosperous and destruction.

போன்ற தலைப்புகளில் உள்ளதை காணலாம்.

யோகி, அவயோகி சூட்சுமத்தை தெரிந்த யாரோ சில ஜோதிடர்களும் அதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் நமக்கு தெரிந்த ஜோதிட ரகசியங்களை மறைத்துவைக்கும் ஒரு சிலருக்கு புதனின் தோசம் அதிகமாகவே பற்றுவதால் அவர்களால் இத்திறையில் சிறப்பையும், புகழையும் ஒருகாலமும் அடைய முடியாது. புதன் கொஞ்சம் ஆச்சரியமான இல்லை இல்லை அதிகமான சூட்சும கிரகம்தான்.


ஒரு குற்றம் நடந்திருக்கும்போது புதன் வக்கிரமானால் அவ்வக்கிரகாலம் முடிந்த பிறகே துப்பு துலங்கும் என்றால் பாருங்களேன். பஞ்சபூத காற்று, பிரபஞ்ச ரகசியம் உள்ள கிரகம்.


பஞ்சாங்கம்:

நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் இந்த ஐந்தும் கொண்டதுதான் பஞ்சாங்கம்.


இதில் பெரும்பலோனோருக்கு பிறந்த நட்சத்திரமும், நாளும்தான் தெரியும்.

இதில் உள்ள யோகம் தெரியாது.


மொத்தம் 27 நித்திய நாமயோகங்கள் உள்ளன. அந்த 27 யோகங்கள் என்னவென்றும், அதற்கு யார் யோகி கிரகம் என்றும் ,யார் அவயோகி கிரகம் என்றும் கீழே கொடுத்துள்ளேன்.( அட்டவணை).

இது எவ்வாறு கணக்கிடுவது?


மேசம் முதல் ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளாக மொத்தப் 360 பாகை கொண்ட 12 ராசிகளாக ராசிமண்டலத் பிரிக்கப்பட்டுள்ள அடிப்படை கணித்த்தை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதாவது மேசம்0 to 30, 

ரிசபம் 30 to 60 , மிதுனம் 60 to 90, கடகம் 90 to 120 , சிம்மம் 120 to 150, கன்னி 150 to 180, துலாம் 180 to 210, விருச்சிகம் 210 to 240, தனுசு 240 to 270, மகரம் 270 to 300, கும்பம் 300 to 320 பாகை, மீனம் 320 to 360 பாகை என 360 பாகை கொண்ட 12 ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதிலேயே 13 பாகை 20 கலை அளவுள்ள 27 நட்சத்திர தோகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ள 27 நட்சத்திரங்கள் உள்ளன.( 13.20 ×27=360).

இனி யோகி பாகையை கணக்கிட மேஷத்தில் இருந்து சூரியன் இருக்கும் பாகை+ மேசத்திலிருந்து சந்திரன் இருக்கும் பாகை + 93  20°பாகை கூட்டினால் யோகி பாக கிடைத்துவிடும்.அதை கணக்கிட்டிதான் ரெடிமேடாக நீங்க என்ன யோகத்தில் பிறந்துள்ளீர்கள் என குறித்து அதற்கு ஒவ்வொரு பெயரையும் சூட்டியுள்ளனர் ஞானிகள். 


இப்போ பலன்களை பார்ப்போம். 

யோகி பாகை எந்த நட்சத்திரத்தில் விழுகிறதோ அந்த நட்சத்திர அதிபதியே யோகி. அந்த நட்சத்திராதிபதியின் மூன்று நட்சத்திரங்களுமே யோகி நட்சத்திரங்களே!

அதாவது ஒருவருக்கு யோகி பாகை 223 பாகயில் விழுந்தால் சனியின் நட்சத்திரமான அனுச நட்சத்திரத்தில் விருட்சிக ராசியாக வரும். இந்த நட்சத்திர யோகம் கண்ட யோகம் ஆகும்.இப்போது சனியே யோகியாவார். சனிதசா சனி கெடுதல் செய்யும் ராசியில் இருந்தாலும் யோகமே செய்யும். அதுமட்டுமின்றி சனியின் நட்சத்திரங்களான பூசம் ,அனுசம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் எந்த மோசமான கிரகம் நின்று தசா நடத்தினாலும் யோகம் செய்யும்.


அவயோகி:

யோகியின் நட்ஞத்திரபாகையிலிருந்து 186 பாகையிலுள்ள நட்சத்திரம் ஆறாவது நட்சத்திரமும் அவயோகி நட்சத்திரம். அவயோகியாக வரும் கிரகமும் அவயோகி நட்சத்திர பாதம் நின்ற கிரகங்களும் தனது தசா புத்தி காலங்களில் மிக மோசமான பலன்களை தருவார்கள்.அவயோகியை மற்றொரு குறுக்கு வழியில் எளிதாக கண்டுபிடிக்கலாம். அதாவது யோகி நட்சத்திரத்திற்கு ஆறாவது நட்சத்திர அதிபதியே அவயோகி. 


1. சனி யோகியென்றால் சந்திரன் அவயோகி.

2.சூரியன் யோகியென்றால் சனி அவயோகி.

3. சந்திரன் யோகியென்றால் புதன் அவயோகி.

4. புதன் யோகியென்றால் செவ்வாய் அவயோகி.

5. குரு யோகியென்றால் சூரியன் அவயோகி.

6. சுக்கிரன் யோகியென்றால் குரு அவயோகி.

7. ராகு யோகியென்றால் சுக்கிரன் அவயோகி.

8. கேது யோகியென்றால் ராகு அவயோகி.

9. செவ்வாய் யோகியென்றால் கேது அவயோகி.

இப்போது நீங்கள் உங்களது ஜாதகத்தை கணித்து என்ன யோகம் மற்றும் திதி மற்றும் கரணத்தில் பிறந்துள்ளீர்கள் என்பதை கண்டுபிடிக்க முயல்வீர்கள். அந்த யோகத்திற்கு யார் யோகி யார் அவயோகி என்று நான் கீழே இணைத்துள்ள அட்டவணை மூலம் சுலபமாக கண்டுபிடித்துவிடுவீர்கள்.


இனி யோகி அவயோகியின் முக்கியத்துவத்தை பார்ப்போம் .

எந்த நிலையிலும் யோகியும், யோகி நட்சத்திரத்திலும் அமர்ந்த கிரகங்களும் தனது தசா புத்தி காலங்களில் யோகத்தையே வழங்குவார்கள்.


எந்த நிலையிலும் அவயோகியும் ,அவயோகி நட்சத்திர சாரங்களில் அமர்ந்த கிரகங்களும் தனது தசாபுத்தி காலங்களில் கெடுதலையும், வீழ்ச்சியையும், தீங்கையும்தான் தருவார்கள்.

உங்கள் ஜாதகங்களில் இதுவரை நடந்த தசாபுத்தி காலங்களில் இவர்களது காலங்களில் என்ன நடந்த்து என்று ஆராய்ந்து பாருங்கள். தசா வராவிட்டாலும் இவர்களது தொடர்புடைய புத்தி காலங்களை ஆராய்ந்து பாருங்கள்.

Ambharish g 

savithaastro@gmail.com 

savithaastro.bolgspot.com

9790111570

நட்சத்திர குலம்

 அஸ்வினி - வைசியகுலம்

பரணி - நீச்ச குலம்

கிருத்திகை - பிரம்ம குலம்

ரோஹிணி - க்ஷத்திரிய குலம்

மிருகசீரிடம் - வேடர் குலம்

திருவாதிரை - இராட்சச குலம்

புனர்பூசம் - வைசியகுலம்

பூசம் - சூத்திர குலம்

ஆயில்யம் - நீச்ச குலம்

மகம் - க்ஷத்திரிய குலம்

பூரம் - பிரம்ம குலம்

உத்திரம் - சூத்திர குலம்

ஹஸ்தம் - வைசியகுலம்

சித்திரை - வேடர் குலம்

ஸ்வாதி - இராட்சச குலம்

விசாகம் - நீச்ச குலம்

அனுசம் - க்ஷத்திரிய குலம்

கேட்டை - வேடர் குலம்

மூலம் - இராட்சச குலம்

பூராடம் - பிரம்ம குலம்

உத்திராடம் - சூத்திர குலம்

அபிஜித் - வைசியகுலம்

திருவோணம் - நீச்ச குலம்

அவிட்டம் - வேடர் குலம்

சதயம் - இராட்சச குலம்

பூரட்டாதி - பிரம்ம குலம்

உத்திரட்டாதி - சூத்திர குலம்

ரேவதி - க்ஷத்திரிய குலம்

Ambharish g 

savithaastro@gmail.com 

savithaastro.blogspot.com

9790111570

வாக்கு மற்றும் குரல்

செவ்வாய் பலம் இருந்தால் பற்கள் பலம் 

செவ்வாய் இரண்டில் இருந்தால் உரத்த குரல்,, முரட்டு குரல் மிரட்டும் குரல்,,

குரல் பிறரை அடி பணிய வைக்கும்,,,,,

இதில் ராகு சாரம் வாங்க குரல் பிறரை பயமுறுத்தும்,,,,

இரண்டில் செவ்வாய் போலீஸ், ராணுவம்,,,,,பயிற்சி மையம் வைக்கலாம்,, போலீஸ் ராணுவம் சம்பந்த தேர்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு,, 

செவ்வாய் பலம் இருந்தால் அசைவம் உண்ணலாம்,, அசைவ உணவு ஆசை இருக்கும்,,,,

பற்கள் பலம் இருந்தால் தான் அசைவம் உண்ண முடியும்,,

இரண்டில் சுக்ரன் அல்லது குரு இனிப்பு விரும்பி ,,அதனால் பல் பிரச்சனை,, அதை செவ்வாய் பார்க்க பல் பிரச்னை குறைவு,, அதாவது பல் சம்பந்த பிரச்சனை வந்தாலும் மருத்துவம் மூலம் விரைவில் சரி செய்வார்,,

செவ்வாய் கேது அல்லது செவ்வாய் சனி பற்களில் கரை,,

இரண்டில் சூரியன்,,இருந்து அதை குரு தொடர்பு கொண்டாலும் தங்க பல் வைப்பார்,,சிலர்

Ambharish g savithaastro@gmail.com 

savithaastro.blogspot.com

9790111570

11 ம் பாவமும் 6 ம் பாவமும்

11 ஆம் பாவம் நெருங்கிப் பழகும் நீண்ட கால நண்பர்கள்.                  

6 ம் பாவம் தனிமை.


 11 ம் பாவம் ஜாதகரின் நலன் விரும்பிகள். 

6 ம் பாவம் ஜாதகரின் எதிரிகள்.


11 ம் பாவம் ஒருமித்த கருத்துடையவர்களின் குழு. 

6 ம் பாவம் யாருடைய கருத்துக்களையும் ஏற்காதவருடைய குரல்.  


11 ம் பாவம் கொடுத்தக் கடனை அசல் வட்டியுடன் சேர்த்துப் பெறுவது. 

6 ம் பாவம் புதிய கடனைப் பெறுவது.                                                11 ஆம் பாவம் மருத்துவமனையிலிருந்து முழுவதும் குணமாகி வீடு திரும்புதல். 

6 ம் பாவம் நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்லுதல்.


 11 ம் பாவம் சேமிக்கும் பழக்கம். 

6 ம் பாவம் கடன் பெறும் வழக்கம்.


 11 ம் பாவம் ஜாதகரை முகஸ்துதி செய்பவர்கள். 

6 ம் பாவம் முதுகிற்குப் பின்னால் குத்த நினைப்பவர்கள்.

               ‌

11 ம் பாவம் முயற்சிகள் திருவினையாதல். 

6 ம் பாவம் முயற்சிகள் போராடி வெற்றி பெறுதல்.


11 ம் பாவம் 7 ம் பாவம் எனும் வாழ்க்கைத்துணைக்கு மிகவும் மகிழ்ச்சியான பாவம். 

6 ம் பாவம் 7 ம் பாவம் எனும் ஜாதகரை அடிமைப் படுத்தும் பாவம். 


11 ம் பாவம் ஜாதகர் மகிழ்ச்சியோடு உறவாடும் நண்பர்கள்.

6 ம் பாவம் ஜாதகரின் அந்தஸ்திற்கு குறைவான வேலைக்காரர்கள், கால்நடைகள்.


11 ம் பாவம் வாழ்க்கைத் துணைக்கு ஜாதகரிடமிருந்து கிடைக்கும் இல்லற வாழ்வில் திருப்தி.

6 ம் பாவம் வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை உதாசீனப் படுத்தல்.


11 ம் பாவம் போட்டியில்லாமல், வீழ்த்தாமல் வெற்றி பெறுதல்.

6 ம் பாவம் போட்டியிட்டு பிறரை வீழ்த்தி வெற்றி பெறுதல்.


11 ம் பாவம் வழக்கு, எதிரிகள் இல்லாத திருப்தியான வாழ்க்கை. 

6 ம் பாவம் மறைமுக எதிரிகள், வழக்குத் தொடுத்தல்.


11 ம் பாவம் பிறர் மகிழும் வண்ணம் ஒரே சிந்தனையைப் பெற்றிருத்தல்.

6 ம் பாவம் மற்றவரின் சிந்தனையிலிருந்து மாறுபட்ட சிந்தனைகளைப் பெற்றிருத்தல். 


11 ஆம் பாவம் எப்போதும் கூடி வாழ்தல்.

6 ம் பாவம் தனித்து வாழ்தல்.


11 ம் பாவம் உடல் முழுச் செயல் திறனுடன் உற்சாகமாக இருத்தல்.

6 ம் பாவம் நோயினால் உடல் சோர்வடைந்தல்.


11 ஆம் பாவம் தேவையற்ற சத்துக்களை தன்னுள் வைத்திருப்பதில்லை.

6 ம் பாவம் என்பது ஒரு சத்து கூடவோ, குறையவோ செய்வதே நோய்.


11 ம் பாவம் அதிகமான தாதுக்கள், விட்டமின்கள் எளிதாக உடலைவிட்டு வெளியேறும்.

6 ம் பாவம் மாத்திரைகள் மூலம் பெறப்படும் தாதுக்கள், விட்டமின்கள் உடலை விட்டு வெளியேறுவது சிரமம்.

Ambharish g 

savithaastro@gmail.com 

savithaastro.blogspot.com

9790111570

ஜோதிட_விதிவிலக்கு

 11 பாவத்தில் எத்தனை கிரகம் இருந்தாலும் கிரக_யுத்தம் ஏற்படுவதில்லை..

தனுசு ராசியில் எந்த கிரகமும் பகை பெறுவதில்லை..

சந்திரன் எந்த வீட்டிலும் பகை பெறமாட்டார்..

செவ்வாய் க்கு 6 இல் நீச்சம் கிடையாது .. 

சுக்ரணுக்கு 6 , 12 இல் மறைவு கிடையாது..

சந்திரனுடன்  எந்த கிரகம் இருந்தாலும்  அந்த பாவத்தின் காரகத்துவத்தில் மனதை உறுதியுடன் மனோபலம் கொண்டிருந்தால்  ராகு , கேது வே உடன் இருந்தாலும் சந்திரன் பலசாலி யாக கருதப்படுவார்..

புதனுக்கு 8 இல் பலம் அதிகம்.. புதன் எங்கும் மறையமாட்டார். 

சனி'யை விட குரு கொடுக்கும் கெடுபலன் சற்று வீரியம் அதிகம் ... 

கேது யாருக்கும் நண்பர் கிடையாது..
Ambharish g 
savithaastro@gmail.com 
savithaastro.blogspot.com
9790111570

மருத்துவ ஜோதிட விதிகள்

-

3.இளமையில் வரும் நோய்களை கண்டறிய சந்திரனின் நிலையை பார்க்கவும்.

-

4.முதுமையில் வரும் நோய்களை கண்டறிய சூரியனின் நிலையை பார்க்கவும்.

-

5.ஜாதகத்தில் சூரியன்,சந்திரன் நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் எந்தவிதமான அறுவை சிகிச்சையும் செய்யக்கூடாது.

-

6. ஜாதகத்தில் செவ்வாய்,சனி நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் ஏதாவது ஒரு நோய் இருக்கும்.

-

7.ஜாதகத்தில் சூரியன்,சந்திரன் ஆட்சி,உச்சம் பெற்று நின்றால் நோய்கள் எளிதில் குணமாகும்.

-

8.மேசம்,சிம்மம்,ரிசபம்,கடகம்,துலாம் ஆகிய லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு நோய் எளிதில் குணமாகும்.

-

9.கன்னி லக்கினம்,கன்னி ராசியில் பிறந்த பெண்கள் நல்ல செவிலியராக செயல்படுவர்.

-

10.லக்கினத்திற்கு 6 ல் சனி,செவ்வாய் உள்ளவர்கள் நோயாளிகளை பார்க்கவோ,தொடவோ கூடாது.இவர்கள் தொட்டால் நோய் எளிதில் குணமாகாது.

-

11. லக்கினத்தில் சூரியன்,சந்திரன்,சுக்கிரன்,உள்ள்வர்கள் நோயாளியை பார்ப்பதும்,தொடுவதும் நல்லது.நோய் வரைவில் குணமாகும்.

-

12. லக்கினாதிபதி ஆட்சி ,உச்சம் பெற்று வலுத்து நிற்க,6-8க்குடையவர்கள் நீச்சம்,பகை, அஸ்தமனம் பெற்று நின்றால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாக இருக்கும்.

-

13. லக்கினாதிபதி பகை , நீச்சம் ,அஸ்தமனம் பெற்று நிற்க,6-8க்குடையவர்கள் ஆட்சி ,உச்சம் பெற்று நின்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

-

14. லக்கினத்திற்கு 6 -8 ல் அதிக எண்ணிக்கையில் கிரகங்கள் நின்றால் ஒரே நேரத்தில் பல வியாதிகல் ஒன்றாக வந்து தக்கும்.

-

15.நோயாளியின் லக்கினத்திற்கு 6-8 ம் வீடுகளை ஜென்ம லக்கினமாகவோ,ஜென்ம ராசியாகவொ அல்லது பெயர் ராசியாகவோகொண்டவர்கள்.நோயாளியை பார்க்கக்கூடாது.இவர்கள் பார்த்தால் நோய் எளிதில் குணமடையாது.

-

16. லக்கினத்திற்கு 6-8 ல் நின்ற கிரகம் அல்லது 6-8 க்குடைய கிரகங்கள் சம்பந்தமான நோய்கள் வரும்.

-

17.ராகு ,கேதுக்கள் நின்ற பாவங்கள் குறிக்கும் உடல் உறுப்புகளில் ஏதாவது நோய் இருக்கும்.

Ambharish g 

savithaastro@gmail.com 

9790111570

savithaastro.blogspot.com

பன்னிரெண்டாம் இடமும் அடையும் முக்தியும் :

2இல் சூரியன் அல்லது சந்திரன் தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா கைலாசத்தினை அடையும் என்றும்,


12இல் செவ்வாய் தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா உடனடியாக மீண்டும் பிறப்பெடுக்கும் என்றும்,


12இல் புதன் தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் ஆன்மா வைகுண்டத்தினை அடையும் என்றும்,


12இல் வியாழன் (எ) குரு தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா பிரம்மலோகத்தினை அடையும் என்றும்,


12இல் சுக்கிரன் தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் ஆன்மா சுவர்க்க லோகத்தினை அடையும் என்றும்,


12இல் சனி தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா யமலோகத்தினை அடையும் என்றும்,


12இல் ராகு தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா பூமியில் வேறு கண்டத்தில் பிறப்பு எடுக்கும் என்றும்,


12இல் கேது தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா நரகத்தினை அடையும் என்றும் கூறப்படுகின்றது.


எனினும் 12இல் உச்ச கேது இருந்தால் மோட்சம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது...

Ambharish g 

savithaastro@gmail.com 

savithaastro.blogspot.com

9790111570

Monday, April 15, 2024

ஜபம் சித்தி ஆகும்

மந்திரங்கள் சப்த ரூபமாக உள்ளவை. இவை தேவதைகளின் ஸூக்ஷ்ம சரீரம். இவைகளில் இவ்வளவு என்று குறிப்பிட முடியாத சக்தி உண்டு. இன்ன மந்திரம் இன்ன பலன் தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். உபாஸனை, ஜபத்தினால்தான் வலிமை பெறும். ஜபத்திற்கு சாதனம் மந்திரம்.◆

ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி
பெறுவது எப்படி

◆மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில் தான் இருக்கிறது. லட்சக்கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.◆

1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.
சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரியஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.
உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.◆◆

2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும்.
இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே.◆◆

3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திரஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில் தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.

4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக்கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.

5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.

6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம் முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும்.

7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது.

8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது.

9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும், மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும் மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.

11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன.

"◆ஜபத்திற்குரிய இடங்கள் ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11- 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது. சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.◆

"◆பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம். கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.●◆

◆சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.  கருங்கல் மீதிருந்து ஜபம்செய்தால்வியாதி; வெறும்தரையில்ஜபம்செய்தால் துக்கம்; மான் தோல்மீது ஜபம்செய்தால்ஞானம்; புலித்தோல்மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.◆◆
Ambharish g 
savithaastro@gmail.com 
9790111570
savithaastro.blogspot.com

Sunday, April 14, 2024

புலிப்பாணி சித்தர்..

 

இவர் போகரின் சீடராவார். புலிப்பாணி என்பது இவரது இயற்பெயரல்ல. இப்பெயர் மாற்றத்திற்கு காரணக் கதையுண்டு:


ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க தம் குருநாதர் கேட்டுவிட்டார்

என்பதற்காக ஒரு புலியை வசியப்படுத்தி அதன் மீது ஏறிச் சென்று வெறும்

கையாலேயே போதிய தண்ணீர் திரட்டிக் கொண்டு வந்தார். புலி மேல் சென்று பானி (தண்ணீர்) கொண்டு வந்ததால் இவர் புலிப்பாணி என்றழைக்கப்பட்டதாகவும் ,பாணி- கைகளால் கொண்டு வந்ததால் புலிப் பாணி  என்றும் அழைத்ததாகக் கூறப்படுகிறது. பழனிமலை முருகன் சிலையை போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர் புலிப்பாணி ச. நவபாஷாண மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறி சென்று பறித்து வந்ததாக கூறப்படுகிறது.


போகர், சமாதிநிலைக்கு செல்லும் முன் பழநி தண்டாயுதபாணியின் பூசைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். ஆனால் பிற்காலத்தில் அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது. போகர் பழநி சிலையை செய்து முடித்ததும் சீன தேசத்திற்கு சென்றார். அங்கு தமது தவ வலிமைகளை இழந்து விடவே, இந்த புலிப்பாணியார் அவரை தமது முதுகிலேயே சுமந்து வந்து பழநியில் வைத்து அவருக்கு சகல தவ வலிமைகளையும் அளித்தார் என்று கூறப்படுகிறது.


இவர் வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் போகரை மிஞ்சியவர் என்றும் சொல்லப்பபடுகிறது. அதனால் இவரை குருவை மிஞ்சிய சிஷ்யன் என்றும் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. பழனி முருகன் சிலையை போகர் செய்யும்போது ஒன்பது வகை விஷ மூலிகைகளை வைத்து

தம் குருநாதர் சிலை செய்கிறாரே இவை மனிதனை குணப்படுத்துவதற்க்கு பதில் ஆளையல்லவா கொன்றுவிடும் என்ற சந்தேகமும் புலிப்பாணிக்கு இருந்து வந்தது.


இதை தன் குருநாதர் போகரிடம் கேட்டார். மக்கள் மீது புலிப்பாணிக்கு

இருக்கும் அபிமானத்தை பாராட்டிய போகர் கவலை கொள்ளாதே நீ கொண்டு வரும் ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் நவபாஷாணம் என்னும் மருந்து கிடைக்கும் இந்த மருந்தை நேரடியாக சாப்பிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பது உண்மையே. ஆனால் நவபாஷாணத்தை சிலையாக வடித்து அதற்க்கு அபிஷேகம் செய்யும் பொருட்களை சாப்பிட்டால் அது மருத்துவத்தன்மை பெறும். மேலும் நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே மனிதர்கள் புத்துணர்வு பெறுவர் நான் செய்யும் இந்த முருகன் சிலை கலியுகம் முடியும் வரையில் அங்கேயே இருக்கும் அவன் அருளால் உலகம் செழிக்கும் மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்றார் போகர்.


மூலிகை வைத்தியத்தில் கை தேர்ந்தவரான புலிப்பாணி பலருக்கு மூலிகை வைத்தியம் செய்து பலரை நோயில் இருந்து காத்துள்ளதாக கூறப்படுகிறது. போகர் இறந்த பிறகு அவரின் சமாதிக்கு பூஜை செய்வதை  வழக்கமாக வைத்திருந்தார். புலிப்பாணியை மனதார நினைத்தால் அவரே நேரடியாக வந்து மருந்து தருவதாக சொல்லப்படுகிறது. இவரும் தன் குருநாதர் வாழ்ந்த பழனியிலேயே சமாதியாகிவிட்டதாக கூறப்படுகிறது


புலிப்பாணி சித்தர் தமிழில் இயற்றிய நூல்கள்:


புலிப்பாணி வைத்தியம் – 500

புலிப்பாணி சோதிடம் – 300

புலிப்பாணி ஜாலம் – 325

புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200

புலிப்பாணி பூஜாவிதி – 50

Ambharish g 

savithaastro@gmail.com 

9790111570

savithaastro.blogspot.com

புலிப்பாணி சண்முக பூசை – 30

புலிப்பாணி சிமிழ் வித்தை – 25

புலிப்பாணி சூத்திர ஞானம் – 12

புலிப்பாணி சூத்திரம் – 9



யார் அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வர்.?


1) 4-ஆம் வீட்டில் 4-ஆம் அதிபதி இருப்பது.(சனி மற்றும் சுக்கிரன் தவிர்த்து).

2)4-ஆம் அதிபதி சூரியன்,சந்திரன்,புதன்,செவ்வாய்,குரு இவர்களுடன் சேர்ந்திருப்பது.(சனி,சுக்கிரனுடன் சேரக்கூடாது.)

3) சந்திரன் 4-ஆம் வீட்டில் இருப்பது(சனி,சுக்கிரனுடன் கூட சேரக்கூடாது)அல்லது சந்திரன் சூரியன்,செவ்வாய்,புதன்,குருவுடன் சேர்ந்திருப்பது.

4) 4-க்குடையவன் லக்னத்திலிருப்பது அல்லது லக்னாதிபதி நாலில் இருப்பது.(சனி, சுக்கிரன் தவிர்த்து)அல்லது லக்னத்திலோ அல்லது லக்னாதிபதியோடோ சந்திரன், சூரியன், செவ்வாய்,புதன்,குரு இருப்பது.

மேலே உள்ள நான்கு நிலைகளும் ஒரு ஜாதகத்திலிருந்தால் அந்த ஜாதகர் மன அமைதியோடும்,மன நிறைவோடும் வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார்.

Ambharish g 

savithaastro@gmail.com 

9790111570

savithaastro.blogspot.com

களத்திர தோஷம் :

களத்திர தோஷம் என்பது திருமண தாமதம், திருமணம் அமையாத நிலை, திருமணம் நடந்தும் பிரச்சனைகள், பிரிவு, மறுமணம் ஆகியவையே. 

............

களத்திர காரகன் சுக்கிரன் (அ) களத்திராதிபதி கன்னியில் அமரக்கூடாது. அது களத்திரதோஷத்தை உண்டு செய்யும்


எந்த ஒரு கிரகங்களாயிருந்தாலும் கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்தால் பலம் வாய்ந்தவர்களாகி விடுவார்கள். பொதுவாக 7ம் அதிபதியை விட 11ம் அதிபதி பலம் பெற்றால் மறுதார அமைப்பை ஏற்ப்படுத்தி விடும். 11ம் இடம் மறுதாரத்திற்க்குரிய இடம்.

பொதுவாக சனிபகவான் கடகத்தில் அமர்ந்தாலும் சந்திரன் மகர கும்பத்தில் அமர்ந்தாலும், இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் களத்திர தோஷத்தை செய்வார்கள். காலம் க்டந்த திருமணம், திருமணம் நடக்காத நிலை, திருமணம் நடந்தாலும் சற்று சன்னியாச வாழ்க்கை தான்.

களத்திர பாவத்திற்கு (அ) களத்திராதிபதிக்கு (அ) சுக்கிரனுக்கு முன் பின் பாப கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டால் களத்திர தோஷம் தான்.

2ல் வக்கிரகிரகங்கள் இருந்தாலும், 2ம் இடத்தை வக்கிரகிரகங்கள் பார்த்தாலும், 2ம் அதிபதி பகை நீசம் பெற்று கெட்டிருந்தாலும் குடும்பம் அமைவதை தடை செய்யும், திருமணம் காலதாமதமாகும்.

சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கை பல தாரத்தை உண்டு பண்ணும்.

பொதுவாக களத்திர காரகன் சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதி, சந்திரனுக்கு 7ம் இடத்ததிபதி, சுக்கிரனுக்கு 7ம் அதிபதி ஆகிய அனைவருக்கும் களத்திரத்தில் பங்கு உண்டு. அனைவரையுமே ஆராய வேண்டும்.

7ம் இடத்திற்கு அம்சாதிபதி நின்ற அம்சாதிபதி அலி கிரகமானாலும் மறுமணத்திற்க்கு வித்திடும்.

Ambharish g 

savithaastro@gmail.com 

9790111570

savithaastro.blogspot.com

பாதாகாதிபதிகள் மூலம் வரும் உடல் கோளாறுகள்


இதில் பாதாகாதிபதிகள் பலம் பெற்று, கேந்திரத்தில் அமர, கண் திருஷ்டியினாலும், பில்லி சூனியம் மற்றும் செய்வினை போன்ற கோளாறுகளால் ஏற்படும் உடல் உபாதைகளை குறிக்கிறது.

சர லக்னத்துக்கு (மேஷம், கடகம், துலாம், மகரம்) 11 இடமும், ஸ்திர லக்னத்துக்கு (ரிஷபம், சிம்மம், விருச்சக்கம், கும்பம்) 9 இடமும், உபய லக்னத்துக்கு (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) 7 இட அதிபதிகள் பாதகாதிபதிகள் ஆவார்கள். இவர்கள் ஆட்சி உச்சம் பெற்று பலம் பெற்று, லக்னாதிபதி மற்றும் திரிகோன அதிபதிகள் பல இழக்க, மேற்சொன்ன உபாதைகள் ஏற்படும்.

ஜோதிடத்தில் 6 மற்றும் 8 பாவங்கள் நோய் தரும் பாவங்கள் என கூறப்பட்டுள்ளது.

இதில் 6 பாவம் தவறான பழக்க வழக்கங்களால் வரும் நோய் ஆகும்.

8 பாவம் பரம்பரை மற்றும் பூர்வ ஜென்ம பாவத்தால் வரும் நோய் என அறிந்து கொள்ளலாம்.

Ambharish g 

savithaastro@gmail.com 

9790111570

savithaastro.blogspot.com

நோய் நிவர்த்தி

நோய் நிவர்த்தி பாவங்கள்

6 க்கு 12 ம் பாவம் நிவர்த்தி பாவமாகும்.

8 க்கு 2 ம் பாவம் நிவர்த்தி பாவமாகும்.

11 க்கு 5 ம் பாவம் நிவர்த்தி பாவமாகும்.

9 க்கு 3 ம் பாவம் நிவர்த்தி பாவமாகும்.

7 க்கு 1 ம் பாவம் நிவர்த்தி பாவமாகும்.

-

நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கும் பாவங்கள் 

-

3 மற்றும் 5 ம் பாவங்கள்

Ambharish g 

savithaastro@gmail.com 

9790111570

savithaastro.blogspot.com

Saturday, April 13, 2024

மருத்துவ ஜோதிட விதிகள்


1.கடுமையான நோய்களை கண்டறிய சந்திரனின் நிலையை பார்க்கவும்.

-

2.நாள்பட்ட வியாதிகளை கண்டறிய சூரியனின் நிலையை பார்க்கவும்.

-

3.இளமையில் வரும் நோய்களை கண்டறிய சந்திரனின் நிலையை பார்க்கவும்.

-

4.முதுமையில் வரும் நோய்களை கண்டறிய சூரியனின் நிலையை பார்க்கவும்.

-

5.ஜாதகத்தில் சூரியன்,சந்திரன் நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் எந்தவிதமான அறுவை சிகிச்சையும் செய்யக்கூடாது.

-

6. ஜாதகத்தில் செவ்வாய்,சனி நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் ஏதாவது ஒரு நோய் இருக்கும்.

-

7.ஜாதகத்தில் சூரியன்,சந்திரன் ஆட்சி,உச்சம் பெற்று நின்றால் நோய்கள் எளிதில் குணமாகும்.

-

8.மேசம்,சிம்மம்,ரிசபம்,கடகம்,துலாம் ஆகிய லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு நோய் எளிதில் குணமாகும்.

-

9.கன்னி லக்கினம்,கன்னி ராசியில் பிறந்த பெண்கள் நல்ல செவிலியராக செயல்படுவர்.

-

10.லக்கினத்திற்கு 6 ல் சனி,செவ்வாய் உள்ளவர்கள் நோயாளிகளை பார்க்கவோ,தொடவோ கூடாது.இவர்கள் தொட்டால் நோய் எளிதில் குணமாகாது.

-

11. லக்கினத்தில் சூரியன்,சந்திரன்,சுக்கிரன்,உள்ள்வர்கள் நோயாளியை பார்ப்பதும்,தொடுவதும் நல்லது.நோய் வரைவில் குணமாகும்.

-

12. லக்கினாதிபதி ஆட்சி ,உச்சம் பெற்று வலுத்து நிற்க,6-8க்குடையவர்கள் நீச்சம்,பகை, அஸ்தமனம் பெற்று நின்றால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாக இருக்கும்.

-

13. லக்கினாதிபதி பகை , நீச்சம் ,அஸ்தமனம் பெற்று நிற்க,6-8க்குடையவர்கள் ஆட்சி ,உச்சம் பெற்று நின்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

-

14. லக்கினத்திற்கு 6 -8 ல் அதிக எண்ணிக்கையில் கிரகங்கள் நின்றால் ஒரே நேரத்தில் பல வியாதிகல் ஒன்றாக வந்து தக்கும்.

-

15.நோயாளியின் லக்கினத்திற்கு 6-8 ம் வீடுகளை ஜென்ம லக்கினமாகவோ,ஜென்ம ராசியாகவொ அல்லது பெயர் ராசியாகவோகொண்டவர்கள்.நோயாளியை பார்க்கக்கூடாது.இவர்கள் பார்த்தால் நோய் எளிதில் குணமடையாது.

-

16. லக்கினத்திற்கு 6-8 ல் நின்ற கிரகம் அல்லது 6-8 க்குடைய கிரகங்கள் சம்பந்தமான நோய்கள் வரும்.

-

17.ராகு ,கேதுக்கள் நின்ற பாவங்கள் குறிக்கும் உடல் உறுப்புகளில் ஏதாவது நோய் இருக்கும்.

Ambharish g 

savithaastro@gmail.com 

savithaastro.bligspot.com

Friday, April 5, 2024

தனிஷ்டா பஞ்சமி

தனிஷ்டா பஞ்சமி பற்றிய பதிவுகள்

பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். இதில் தனிஷ்டா பஞ்சமி என்பது கீழ்கண்ட 13 நட்சத்திரங்களை உள்ளடக்கியது ஆகும்.

• அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.

• ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.

• கார்த்திகை மற்றும் உத்திரம் நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.

• மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம், விசாகம் மற்றும் உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

*அடைப்பு என்றால் என்ன ?*

கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று அழைக்கப்படுகிறது. சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.

தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.

முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.

கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.

ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். 

தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.

இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி, தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு, கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். 

அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
9790111570

Monday, April 1, 2024

சயன யோகம்


சயன தோஷம் என்பது, இளம் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் விருப்பமின்மையை தற்காலிகமாக ஏற்படுத்தி அதில் நாட்டத்தை குறைக்கும். அல்லது திருப்தியின்மைய தந்து, அதன் மீது ஒரு இனம் புரியாத வெறுப்பை ஏற்படுத்திவிடும். 


இப்படிப்பட்ட தோஷம் இருவரில் ஒருவருக்கு நேரலாம். சில நேரங்களில் அபூர்வமாக இருவருக்கும் நேர்வது உண்டு. விவாக தசவித பொருத்தத்தில் யோனிப்பொருத்தத்தோடு தொடர்பு உடையது இது. இந்த பொருத்தம் முறையாக அமையவில்லை என்றால், அவர்களுக்கு சயன தோஷம் பெரும்பாலும் இருக்கும். 


எனவே யோனிப்பொருத்தம் என்பது முக்கியமான ஐந்து பொருத்தங்களில் ஒன்றாகவும், அவசியம் இருந்தாக வேண்டும் என்றும் சாஸ்த்திரங்களில் கூறப்படுகிறது.


அஸ்திவாரம் பலவீனமானால் அதில் வீடு கட்டினால் தாங்காது என்பது போல, அடிப்படை தோஷமான இது இருந்தால் புத்திர பாக்கியத்திற்கு வழி கிடைக்காமல் தடை ஏற்பட்டு விடும். புத்திர பாக்ய தோஷம் என்பது நிரந்தரமாகவோ அல்லது மிக நீண்ட காலமோ இருக்கக்கூடியது. சயன தோஷம் என்பது தற்காலிகமான குறுகிய காலம் கொண்டது. தானாகவே நீங்கிவிடக்கூடியது. உடனடியாக நீங்க பரிகாரவழிபாடுகளை மேற்கொள்ளலாம். 


அதிக பட்சமாக 3 வருஷம் 4 மாதம் நீடிக்கும். குறைந்த பட்சமாக 10 மாதம் நீடிக்கும். 


இதன்  கிரக அமைப்பே சற்று வித்தியாசமானதாகும். சயனஸ்தானம் எனப்படும் விரயத்தோடு (பன்னிரெண்டாம் வீட்டின் ) தொடர்பு உடையது  இது. 

இந்த ஸ்தானத்தில் சுபாவ சுபர்களான குரு, சுக்கிரன், சுப புதன், சுப சந்திரன் ஆகியோர் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இருந்தால் சயனதோஷம் ஏற்படும். ஸ்ரீ வராகிமிகிரர் தத்துவப்படி, ஒரு பாபஸ்தானத்தில் சுபாவ சுப கிரகம் இருந்தால், அந்த ஸ்தானத்தின் பலன் தரும் வலிமை குறையும். அதன் படி விரயஸ்தானத்தில் சுபாவ சுப கிரகங்கள் இருக்கும் போது, அந்த ஸ்தானத்தின் பலன் தரும் வலிமை குறைந்து தோஷம் உருவாகிறது.


1. குரு என்ற சுபாவ சுப கிரகம் இந்த ஸ்தானத்தில் இருக்கும்போது சயனதோஷம் உருவாவதோடு, புத்திரத்தடை ஏற்படுகிறது. ஏனென்றால் குருவின் காரகத்த்துவத்தில் ஒன்று புத்திர பாக்கியம்.


2. சுக்கிரன் என்ற சுபாவ சுப கிரகம் இந்த ஸ்தானத்தில் இருக்கும் போது சயனதோஷம் உருவாவதோடு, தாம்பத்திய உறவில் திருப்தியின்மையோ அல்லது நாட்டமின்மையோ ஏற்படுகிறது. ஏனென்றால் சுக்கிரனின் காரகத்துவத்தில் ஒன்று காமம்.


3. புதன் என்ற கிரகம் சுபாவ சுபத்தன்மையோடு இந்த ஸ்தானத்தில் இருக்கும் போது சயனதோஷம் ஏற்படுத்துவதோடு, புத்திர பாக்கிய தடையும் ஏற்படுத்துகிறது. புதனுக்கு புத்ர ஹீனன் என்ற காரகத்துவம் உண்டு. அதாவது ஜனன ஜாதகத்தில் புதன் கெட்டுபோக வேண்டும் அதாவது அஸ்தங்கதம் அடையவேண்டும். அல்லது 6,8,12 ஆகிய இடங்களில் மறைய வேண்டும். அப்போதுதான் புத்ரஹீனமும் கெட்டு மறைந்து புத்ர பாக்கியம் உண்டாகும். இப்படிப்பட்ட சூழ்னிலையில் புதனின் தொடர்பு புத்ர பாக்ய ஸ்தானத்திற்கு ஏற்பட்டால் புத்திர தடை இருக்காது. புதன் நல்ல நிலையில் இருந்தால் புத்ர பாக்ய தடை உருவாகும். இங்கு புதன் விரயத்தில் மறைவதால் புத்திர பாக்கியம் இருக்கும். ஆனால் சயனதோஷத்தின் காரணமாக தாமதமாகும்.


4. சந்திரன் என்ற சுபாவ சுப கிரகம் இந்த ஸ்தானத்தில் இருக்கும் போது சயனதோஷம் ஏற்படுத்துவதோடு, பெண்மை குறைவையும் ஏற்படுத்தி, தாம்பத்தியம் கசக்க செய்கிறது. அதாவது, கருமுட்டை முதிர்ச்சியற்ற தனமையுடனோ அல்லது குறைவாகவோ உருவாவது. மேலும் சுரோணித சுரப்பி சரிவர செயல்படாமல் இருப்பது போன்றவை பெண்மை குறைவு எனப்படும். இது பெண்கள் ஜாதகப்படி மட்டுமே நேரும்.

Ambharish g

savithaastro@gmail.com

savithaastro.blogspot.com

9790111570

கிரஹங்களின் சில முக்கிய பலன்கள்

1.நீங்கள் எந்த கரணத்தில் பிறந்துள்ளீர்களோ மேற்கண்ட கரண நாதனின் அதிபதிக்குரிய ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள், மேற்கண்ட அதிபதி உச்சம் மற்றும் நீசம் அடையக்கூடிய ராசிகள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அமைய வாய்ப்புண்டு.


2.சுய ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு மறைந்த கிரகத்தின் காரக உறவுகள், அந்த கிரகம் லக்னத்திற்கு என்ன ஆதிபத்தியம் பெற்று இருக்கிறதோ அந்த ஆதிபத்தியத்தை குறிப்பிடும் பாவக உறவுகளிடத்தில் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.


3.உச்ச சந்திரனுடன் தொடர்பு பெற்ற சனி அல்லது நீர் ராசியில் நின்ற குருவின் பார்வையைப் பெற்ற சனி, கடல் சார்ந்த துறைகளில் பணி புரிவதற்கான வாய்ப்பினை தருவார்.


4.சுபர் தொடர்பில்லாத சனியின் பார்வை ஒரு கிரகத்தின் காரகத்துவத்தை மட்டுப்படுத்த மட்டுமே செய்யும். முற்றிலுமாக இல்லாமல் செய்து விடாது. ஆனால் அந்த கிரகம் பெற்றுள்ள ஆதிபத்தியத்தை பெரிய அளவில் பாதிக்கும்.


5.எட்டாம் வீட்டை சனி, செவ்வாய் பார்த்தாலும் எட்டாம் வீட்டை அல்லது எட்டாம் வீட்டு அதிபதியை குரு பார்க்கும் பொழுது ஆயுளுக்கு பெரிய அளவில் பாதிப்பில் இருக்காது.


6.ஏழாம் அதிபதி பலவீனமாக இருந்தால் மணவாழ்க்கை பாதிக்குமா?

ஏழாம் அதிபதி பலவீனமாக இருந்து விட்டாலே மணவாழ்க்கை பாதிப்பு என எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. மேற்கண்ட ஏழாம் அதிபதியின் தசாக்காலங்கள் வருகிறதா?  வீடு கொடுத்தவரின் நிலை போன்ற விஷயங்கள் பார்க்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஏழாம் அதிபதி பலவீனமாக இருந்தாலும் களத்திரக்காரகனான சுக்கிரன் வலுத்துவிட்டால் மணவாழ்க்கையில் பிரச்சனை இல்லை. மணவாழ்க்கை நல்லபடியாகவே செல்லும்.


7.ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதிகளின் புத்திகள் எப்படிப்பட்ட நிலையில் நல்ல பலன்களை தரும்?

 6, 8, 12 ஆம் அதிபதியின் வீட்டை சுபகிரகங்கள் பார்த்து, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதியையும் சுபர்கள் பார்த்தால் 6,8,12 ஆம் அதிபதியின் புத்திகளும் நல்ல பலன்களைத் தரும்.


8.சகோதரர்கள் வகையில் எதிர்ப்புகளைச் சந்திக்கக் கூடியவர்கள், கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை இல்லாத நிலையில் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் ஆலயங்களில் பக்தர்களுக்கு செவ்வாழைப்பழம் தானம் செய்து வருவது நல்லதாகும்.


9.ஐந்தாம் இடம் உழைப்பில்லாத வருமானம், ஷேர் போன்ற மறைமுக வருமானங்களை குறிக்கக்கூடிய இடம். ஐந்தாம் இடம் வலுவாக இருக்கும் பொழுது ஜாதகர் எளிய முறைகளில் பணம் சம்பாதிப்பதில் விருப்பம் உடையவராக இருப்பார்.


10.சுகஸ்தானதிபதியான நான்காம் அதிபதி பலவீனமாக இருக்கும் பொழுது ஜாதகர் தன்னுடைய சுகபோக வாழ்விற்காக எந்த தவறையும் செய்வார்.

Ambharish g

savithaastro@gmail.com

savithaastro.blogspot.com

9790111570

கால_சர்ப்பதோஷத்தின் வகைகள்


Anantha(அனன்த) 

கால சர்ப்பதோஷம்ல

க்னத்தில் ராகு 7ல் கேது


Kulikha(குளிக)

கால சர்ப்பதோஷம்

2ல் ராகு − 8ல் கேது


Vasuki(வாசுகி)

கால சர்ப்பதோஷம்

3ல் ராகு − 9ல் கேது


Sankhapala(சன்கபால)

கால சர்ப்பதோஷம்

4ல் ராகு − 10ல் கேது


Padma(பத்ம)

கால சர்ப்பதோஷம்

5ல் ராகு − 11ல் கேது


Mahapadma(மஹாபத்ம)

கால சர்ப்பதோஷம்

6ல் ராகு − 12ல் கேது


Takshaka(தக்ஷ்க)

கால சர்ப்பதோஷம்

 7ல் ராகு − லக்னத்தில் கேது


Kaarkotaka(கார்கோடக)

கால சர்ப்பதோஷம்

8ல் ராகு − 2ல் கேது


Sankhanath(சங்க நாதம்)

கால சர்ப்பதோஷம்

9ல் ராகு − 3ல் கேது


Pathak(பதக்)

கால சர்ப்பதோஷம்

10ல் ராகு − 4ல் கேது


Vishkat(விஷ்கட்)

கால சர்ப்பதோஷம்

11ல் ராகு − 5ல் கேது


சேஷ்நாக்(Sheshnag)

கால சர்ப்பதோஷம்

12ல் ராகு − 6ல் கேது.

Ambharish g

savithaastro@gmail.coms

avithaastro.blogspot.com

9790111570


உச்சிஷ்ட கணபதி உபாசனை



திருமண தடைகள் நீங்க, காதல் கைகூட, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரந்து சண்டை சச்சரவின்றி கருத்தொருமித்து நெருக்கமாக வாழவும் ,தாம்பத்திய உறவு பலப்படவும், செல்வச் சேர்க்கைக்கும் உச்சிஷ்ட கணபதி உபாசனை மிகச் சிறந்தது.

தந்திர சாஸ்திரத்தில் மகா காளி போல உச்சிஷ்ட கணபதிக்கும் அதிக முக்கியத்துவமும் சிறப்பும் அளிக்கப்படுகிறது.

மற்ற தெய்வங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு உச்சிஷ்ட கணபதிக்கு நிறைய உண்டு. விநாயகருடைய 32 வடிவங்களில் உச்சிஷ்ட கணபதி விசேஷமானது. ‘உச்சிஷ்டம்’ என்றால் எச்சில் படுத்துதல் என்று பொருள்.
 உச்சிஷ்டம்’என்பது மீந்து போனது எச்சில் பட்டது என்ற பொருளைக் குறித்தாலும் இந்த உபாசனையை பொருத்தவரை மிகவும் தெய்வீகத்தன்மையாகவே கருதப்படுகிறது. சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டையும் ஒரு யோகி கடக்க வேண்டும். தந்திர சாஸ்திரம் இடது கை உபாசனை , எச்சில், தீட்டு இவற்றை புறக்கணிப்பது இல்லை. இதைக்கருத்தில் கொண்டே உச்சிஷ்ட கணபதி வழிபாடு உருவானது.இதை சரியாகப் பரிந்து கொண்டவர்கள் மட்டுமே தந்திர சாதனத்திற்கும் இந்த உச்சிஷ்ட கணபதி உபாசனைக்கும் தகுதியுள்ளவர்கள். மஹாநிர்வாண தந்திரத்தில் உச்சிஷ்ட கணபதி தனது சக்தி தேவியின் குஹ்யத்தில் (உபஸ்தானத்தில்) தனது தும்பிக்கையை வைத்துள்ள ஆனந்த நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் என்று கூறுகிறது .இதை உச்சிஷ்ட கணபதி சகஸ்ரநாமாவளி 103 -104-118-119 வரிகள் உறுதிப்படுத்துகின்றன. ) இதன் மூலம், எதுவும் நிசித்தமில்லை ஏற்றுக்கொள்ளத் தக்கதே என்பது உணர்த்தப்படுகிறது. சாக்தத்திலும் ‘யோனி பூஜை’ என்றொரு வாமாச்சார சம்பிரதாயம் இருந்தது உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.இங்கு தெரிய வேண்டியது இவர் கிரியா சக்தியை தனது இச்சா சத்தியால் ஸ்பரிசிப்பதால் ஞான சக்தி தானே உதயமாகி பக்தர்களை ஆட்கொள்கிறது என்பதுதான். உச்சிஷ்ட கணபதிக்கு முதுகைக் காட்டி தோப்புக்கரணம் இடுவதும் மரபாக உள்ளது. முதுகு காட்டுவது என்பது ஒருவரை புறக்கணிப்பதாகக் குறிக்கும். ஆனால், கடவுளுக்கு முகம், முதுகு என்ற பாகுபாடு கிடையாது. வெற்றி, தோல்வியை சமமாகப் பாவிக்கும் நிலைக்கு மனிதனின் மனம் உயர வேண்டும் என்பதற்காக உச்சிஷ்டகணபதிக்கு முதுகு காட்டி வழிபடுகின்றனர்.
தாம்பூலம் தரித்த வாயுடன் இவருடைய மூல மந்திரம் ஜபித்து வந்தால் சீக்கிரம் மந்திரம் சித்தியாகும்.

உச்சிஷ்ட கணபதி தியானம்

நீலாப்ஜம் தாடீமீ வீணா சாலீகுஞ்ச அட்ச சூத்ரகம் ததது உச்சிஷ்ட நாமாயம் கணேச பாது மே சக||

குறிப்பு :
இவரது ஹோமத்திற்கு வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகள் சிறந்த பலன்கள் கிடைக்கும். கார்ய சித்தி உண்டாகும்.

இவரது உபாசனையின் பலன்கள்

உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி இருவருக்கும் இடையே பரஸ்பர வசியம் ஏற்பட்டு நெருக்கம் அதிகமாகி தாம்பத்திய உறவு (conjugal relationship) வலுப்படும். இருவருக்கும் இடயே திருஷ்டி காரணமாகவோ வேறு நபர்கள் காரணமாகவோ ஏற்பட்ட தடைகள் விலகும். தம்பதி ஒற்றுமை பலப்படும். ( tested ) .குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகள், இந்த விநாயகரை வணங்கினால் குழந்தைச் செல்வம் உண்டாகும். மேலும் இந்த உபாசனையால் வாக்கு பலிதம் ஏற்பட்டு சொன்னது சொன்னபடி நடக்கும்.
மிக முக்கியமாகக் கவனிக்கவும்: இந்த மஹா மந்திரத்தை குருவின் மூலம் உபதேசம் பெற்று , குரு , தெய்வம்,மந்திரம் இம்மூன்றின் மீதும் அசைக்க முடியாத பூரண நம்பிக்கை வைத்து மனஒருமப்பாட்டுடன் மந்திரத்தை உருவேற்றி பூசை செய்துவரவெண்டியது. சீக்கிரம் மந்திரம் சித்தியாகும். உபாசகர்கள் கருப்பு,நீல ஆடைகள் தவிற்ககவும். மாறாக சிவப்பு,  பொன்னிற ஆடைகள் அணியவும்.வினாயகருக்கு பிள்ளையார்
சதுர்த்தி தவிர மற்ற நாளில் துளசி வேண்டாம். 

வழிபாட்டின் பலன்கள்: மந்திர உபதேசம் பெற்று இவரை நன்கு வணங்கி , இவரது திரு உருவத்தை மனதில் இருத்தி மந்திர ஜபம் செய்து வேண்டிய வரம் பெற்று வாழவும். தம்பதிகள் ஒற்றுமையுடனும் நலமுடனும் மிக இணக்கமாக வாழ்வதோடு வாழ்வில் தன சேர்க்கையும் ஏற்படும். நல்ல காரியங்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்த நன்மைகள் தானே தேடிவரும். ருத்ர யாமள தந்திரம்,உட்டாமரேச தந்திரம்,பேத்கார தந்திரம் போன்ற நூல்கள் உச்சிஷ்ட கணபதி பற்றிக் கூறுவதாக அறியப்படுகிறது...

உச்சிஷ்ட கணபதி  உபாசனை  திருவாரூர் கமலாம்பிகை சந்நிதியில் l தொடங்குவது சிறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் மணி மூர்த்திஸ்வரம் என்கிற கிராமத்தில் தாமிரபரணி நதிக்கரையில் உச்சிஷ்ட மஹா கணபதிக்கு மிகப்பெரிய ஆலயம்
உள்ளது.

Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
9790111570
 

கிரஹங்கள் காட்டும் நோய்கள்


 
ஜோதிடத்தில் 6 ,8 ,12 ஆகிய பாவங்கள் ஜாதகருக்கு நோய் ,வலி வேதனை ,விபத்து அங்கஈனம் ஆகியவற்றை கொடுக்கும் பாவங்களாகும். 

ஆக அந்த 6,8,12 ஆகிய பாவங்களுக்கு உபநட்சத்திரமாக ராகு (அல்) கேது (அல்) சனி ஆகிய கிரகங்கள் வந்து 8,12 ஆகிய பாவங்களை தொடர்புகொண்டு தசா நடக்கும் காலத்தில் அவர்களுக்கு கேன்சர் நோய் உருவாகக்கூடிய சூழ்நிலை அமையும். 

கேது என்ற கிரகம் கண்ணுக்குத் தெரியாத மற்றும் குணப்படுத்த முடியாத கட்டிகளை குறிக்கும் .ஆக நம் உடலின் உட்புறத்தில் இருக்கக்கூடிய மூளை ,ரத்தம், கர்ப்பப்பை இன்னும் பல உறுப்புகளில் கேன்சர் வருவதற்கு இக்கிரகம் காரணமாகிறது. 

ராகு என்ற கிரகம் விகாரம் மற்றும் யாரும் கட்டுப்படுத்த முடியாத மென்மேலும் வளர கூடிய காரகத்துவத்தை கொண்டுள்ளதால் இந்த கிரகம் 6 ,8 ,12 ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டிருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு கண்ணுக்கு தெரியும் கேன்சர் அமைப்பு உருவாகும். 

4,10 ஆகிய பாவங்கள் அதிகப்படியான உற்பத்தியை குறிக்கும் .ஆகையால் இந்த 6 ,8 ,12 ஆகிய பாவங்களுக்கு உப நட்சத்திரமாக ராகு/ கேது /சனி வந்து 4,10 ஆகிய பாவங்களை தொடர்பு கொள்ளும் பட்சத்தில் ஏதோ ஒரு விஷயம் அதிகமாக உற்பத்தியாக கூடிய சூழ்நிலை உருவாகும். 

மாறாக 6, 8 ,12 ஆகிய பாவங்கள்  சனி/ ராகு /கேது நட்சத்திரத்தில் இருந்து 4,10,8,12 தொடர்பு கொண்டாலும் இப்பிரச்சனை பூதாகரமாக உருவெடுக்கும். 

மேலே குறிப்பிட்டுள்ள கிரக மற்றும் பாவ தொடர்புகளை கொண்ட 6 ,8 ,12 ஆகிய பாவங்கள் கால சக்கரத்திற்கு மேஷ தொடர்பு பெற்றால் தலையில் கேன்சர் கட்டி உருவாகும். ரிஷப தொடர்பு பெற்றால் காது, மூக்கு, தொண்டை அல்லது வாயில் கேன்சர் கட்டிகள் வரும். கடக தொடர்பு பெற்றால் நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் வரும். சிம்ம தொடர்பு பெற்றால் இருதய கேன்சர் நோய் வரும். கன்னி தொடர்பு பெற்றால் வயிற்றில் கேன்சர் நோய் வரும். துலாம் தொடர்பு பெற்றால் சிறுநீரகம் அல்லது கர்ப்பப்பை கட்டிகள் வர வாய்ப்புண்டு. விருச்சிக தொடர்பு பெற்றால் பிறப்புறுப்பு அல்லது மலதுவாரத்தில் வர வாய்ப்புண்டு. இப்படி கேன்சர் கட்டிகள் என்பது 12 இராசிகளை தொடர்பு கொள்ளும்போது வெவ்வேறு விதமாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது. 

ஆக, இப்பிரச்சினையை ஜாதகத்தில் கண்டறிய  நிச்சயமாக முடியும்!

6,8,12" இந்த மூன்று பாவங்கள்


★6 8 12 பாவங்கள் ஒரு மனிதனின் முக்கியமான தேவைகளையும் முக்கியமான பிரச்சனைகளையும் கொண்டிருக்கும் பாவங்களாகும்.

★அதாவது ஆறாம் பாவம் என்பது கடன், வம்பு, வழக்கு,கோர்ட், கேசு அடிதடி, சண்டை, போட்டி பொறாமைகள், எதிரிகள் சத்துருக்கள், போன்றவற்றை உள்ளடக்கிய பாவமாகும்.

★எட்டாம் பாவம் என்பது ஆயுள் அசிங்கம் அவமானம் பயத்தை கொடுக்கக்கூடிய பாவம் தவறான எண்ணங்களை உருவாக்கக்கூடிய பாவம்.

★பன்னிரண்டாம் பாவம் என்பது விரயச் செலவு அயன சயன போகம் சுகபோக வாழ்க்கை மருத்துவமனை மற்றும் முக்தி எனும் ஸ்தானம் இவற்றை உள்ளடக்கிய பாவங்களாகும்.

★இந்த மூன்று விஷயங்கள் மூலமாகத்தான் ஒரு மனிதனுக்கு பிரச்சனைகள் என்பது வரும் மற்றும் ஒரு மனிதனின் முக்கியமான தேவைகளும் இந்த பாவங்களும் தான்.இந்த மூன்று பாவம் சார்ந்த விஷயங்களை ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் அனுபவித்தே தீரவேண்டும் என்பதுதான் விதி.

★6 8 12-ஆம் பாவங்கள் எதற்கு அவ்வளவு முக்கியத்துவமான பாவங்கள் என்றால் ஒரு மனிதன் தான் பிறக்கும் பொழுது அவனுடைய முன்ஜென்மத்தில் செய்த தவறை பழிதீர்க்க இந்த ஜென்மத்தில் இந்தப் பிரபஞ்சம்,இந்த இயற்கை 6 8 12 பாவங்கள் மூலமாகத் தான் நம்மை பழி தீர்க்கும்.

★ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் அவன் சந்திக்க கூடிய முதல் சவால் அல்லது முதல் படி 6ம் பாவம் மூலமாக இருக்கும்.6ம் பாவம் என்பது உத்தியோகம்.6ம் பாவத்தை ஒருவன் கடந்துவிட்டால் 7ம் பாவம் எனும் திருமணம் அவனுக்கு சுலபமாக விடும்.

★8ம் பாவம் என்பது ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் திருமணத்திற்குப் பிறகு அவன் சந்திக்கக் கூடிய விஷயங்கள் பயம், negative எண்ணம், மற்றும் அசிங்கம் ,அவமானம் போன்றவைகள் ஆகும்.இந்த 8ம் பாவத்தை ஒருவன் கடந்துவிட்டால் 9,10,11, பாவங்கள் ஒருவனுக்கு சுலபமாகக் கிடைத்துவிடும்.

★12 ம் பாவம் என்பது விரயச் செலவுகள் ஒருவன் தன் வாழ்க்கையில் அவனுடைய குறிப்பிட்ட வயதில் தனக்கு வரக்கூடிய பிரச்சனைகள் மற்றும் விரயச் செலவுகள் ஆகும்.

★இந்த 3 பாவங்களின் ஆதிபத்தியங்கள் தான் ஒருவனுக்கு மிக முக்கியமான தேவைகள் ஆகும்.அதனால்தான் நமது முன்னோர்கள் இந்த 6 8 12ம் பாவங்களில் இந்த முக்கியமான ஆதிபத்தியங்களை வைத்திருக்கிறார்கள்.

★இந்த மூன்று பாவங்களில் தான் நமக்கு பிரச்சனைகள் என்பது இருக்கும்.இந்த இயற்கை அல்லது இந்த பிரபஞ்சம் நம்மை சோதிக்க கூடிய இடங்களும் இந்த மூன்று பாவங்கள் தான்.

★ஒரு மனிதன் சாதாரணமாக இந்த மூன்று பாவத்தையும் கடப்பது என்பது கடினமாகும்.ஏனென்றால் நாம் முன்ஜென்மத்தில் செய்த தவறை இந்த ஜென்மத்தில் இந்த பிரபஞ்சம் இந்த மூன்று பாவங்களை பயன்படுத்தி தான் நம்மை சோதனைக்கு உள்ளாக்கும் அல்லது நம்மை கஷ்டப்படுத்தும்.

★இப்பொழுது ஆறாம் பாவத்தில் எந்த எந்த கிரகங்கள் இருந்தால் என்ன ஆகும் என்பதே ஒவ்வொரு கிரகமாக பார்க்கலாம்.

1.(6ம் பாவம்)

★ஆறாம் பாவத்தில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரகத்தின் காரகத்துவங்களை சார்ந்து கடன் வம்பு வழக்கு கோர்ட் கேசு அடிதடி சண்டை போட்டி பொறாமை எதிரி போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

★(6 பாவத்தில் "புதன்")

★புதன் ஆறாம் பாவத்தில் இருந்தால் கடன், சீட்டு, ஏலம், loan, sharemarket stockmarket, trading இவற்றின் மூலமாக கடன் பிரச்சினை, வம்பு வழக்கு கோர்ட் கேசு அடிதடி சண்டை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

★இந்தப் பிரச்சினையில் இருந்து எப்படி தப்பிப்பது என்றால் யாருக்கெல்லாம் ஆறாம் பாவத்தில் புதன் இருக்கிறதோ இவர்கள் என்றைக்குமே கடன்,சீட்டு,ஏலம்
loan, sharemarket,stockmarket, trading போன்றவற்றில் முதலீடு செய்வதோ
கடன் வாங்குவதோ கடன் கொடுப்பதோ போன்ற செயல்களை செய்யக்கூடாது.

★இவர்கள் என்றைக்குமே தங்களுடைய பெயரில் சீட்டு ஏலம்,loan,போன்றவைகள் எடுக்கக் கூடாது.

★(6ம் பாவத்தில் "செவ்வாய்")

★செவ்வாய் யாருக்கெல்லாம் ஆறாம் பாவத்தில் இருக்கிறதோ இவர்களுக்கு வீடு வண்டி வாகனம் சொத்து உத்தியோகம் இதன் மூலமாக கடன் பிரச்சினை வம்பு வழக்கு கோர்ட் கேசு அடிதடி சண்டை போட்டிகள் பொறாமைகள் போன்ற பிரச்சினைகள் இவர்களுக்கு இருக்கும்.

★இந்த விஷயங்களை நாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கு தகுந்தார்போல் நாம் ஜாக்கிரதையாக இருந்து கொண்டால் இந்தப் பிரச்சினையில் இருந்து நாம் தப்பிக்க இயலும்.

★செவ்வாய் ஆறாம் பாவத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் வீடு வண்டி சொத்து உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் முன்கூட்டியே சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.

★மேலும் இதனை சார்ந்தது இவர்கள் யாரிடமும் கடன் வாங்கவே கூடாது வாங்கினால் அதனை அடைவதற்கு சிரமமாகிவிடும்.

★(6ம் பாவத்தில் "சூரியன்")

★சூரியன் ஆறாம் பாவத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் தந்தை மூலமாகவும் அல்லது அரசாங்கம் மூலமாகவும் மருத்துவ செலவுகள் மூலமாகவும் கடன் பிரச்சனை வம்பு வழக்கு அடிதடி சண்டை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

★இந்த விஷயங்களை முன்கூட்டியே நாம் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார்போல் நாம் கவனமாக இருந்து கொண்டால் இந்த விஷயத் தில் இருந்து தப்பிக்க இயலும்.

★மேலும் சூரியன் ஆறாம் பாவத்தில் இருப்பவர்களெல்லாம் மருத்துவ செலவுகள் சார்ந்தும் தந்தையை சார்ந்தும் அரசாங்கத்தை சார்ந்தும் சற்று கவனமாகவே எப்போதும் இருக்க வேண்டும்.

★மருத்துவ செலவுகள் சார்ந்த இவர்கள் கடன் வாங்கவே கூடாது வாங்கினால் அதை அடைப்பதற்கு படாதபாடு ஆகிவிடும்.

★(6ம் பாவத்தில் "சனி")

★சனி ஆறாம் பாவத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் தொழில் மூலமாக கடன் பிரச்சினை வம்பு வழக்கு அடிதடி சண்டை போட்டி பொறாமைகள் போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

★மேலும் தொழில் சார்ந்து இவர்கள் எப்போதுமே கவனமாக இருக்கவேண்டும் தொழிலுக்காக என்றைக்குமே இவர்கள் மற்றவர்களிடம் கடன் வாங்கவே கூடாது வாங்கினால் அதை அடைப்பதற்கு மிகவும் சிரமமாகிவிடும்.

★(6ம் பாவத்தில் "குரு")

★குரு யாருக்கெல்லாம் ஆறாம் பாவத்தில் இருக்கிறதோ இவர்களுக்கு குழந்தைகள் மூலமாகவும் மற்றும் ஆன்மீக செலவுகள் சார்ந்தும் இவர்களுக்கு கடன் பிரச்சினை வம்பு வழக்கு அடிதடி சண்டை போன்ற பிரச்சனை ஏற்படும்.

★யாருக்கெல்லாம் குரு ஆறாம் பாவத்தில் இருக்கிறதோ இவர்கள் கண்டிப்பாக கடன் பிரச்சனையில் சிக்குவார்கள்.

★குரு ஆறாம் பாவத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் என்றைக்குமே இவர்களுக்கு உத்தியோகம் மூலம் வரும் வருமானத்தை இவர்களுக்காக இவர்களின் விருப்பத்திற்காக அந்த பணத்தை என்றைக்குமே
அனுபவிக்கவே முடியாது.

★(6ம் பாவத்தில் "சுக்கிரன்)

★ஆறாம் பாவத்தில் சுக்கிரன் இருப்பவர்களுக்கெல்லாம் மனைவி மூலமாகவும் காதலி அல்லது காதலன் மூலமாகவும் கடன் பிரச்சனை வம்பு வழக்கு கோர்ட் கேசு அடிதடி சண்டை போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

★மேலும் இதனை சார்ந்த விஷயங்களில் இவர்கள் முன்கூட்டியே சற்று கவனமாக இருந்து கொண்டால் இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க இயலும்.

★இவர்கள் என்றைக்குமே மனைவி மற்றும் காதலன் காதலி இவர்களை சார்ந்த விஷயங்களில் சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.

★ஆறாம் பாவத்தில் "ராகு,கேது சந்திரன்" இந்த மூன்று கிரகங்கள் இருந்தால் அதற்கு இந்த சூட்சமம் பொருந்தாது.

2.( 8ம் பாவம்)

★எட்டாம் பாவத்தில் எந்த எந்த கிரகங்கள் எல்லாம் இருக்கிறதோ அந்த கிரக காரகத்துவம் சார்ந்தும் அந்த கிரக உறவு காரகத்துவம் சார்ந்தும் நமக்கு பயம் என்பது இருக்கும்.

★(8ம் பாவத்தில் "புதன்")

★8ம் பாவத்தில் புதன் இருப்பவர்களுக்கெல்லாம் படிப்பு சார்ந்த விஷயங்களிலும்,mathematics accounts, documents,இது சார்ந்த விஷயங்களில் இவர்களுக்கு பயம் என்பது இருக்கும்.

★பத்திரப் பதிவு,ஆவணங்கள், படிப்பு சார்ந்த விஷயங்கள் இவர்களுக்கு பயம் என்பது சற்று இருக்கும்.

★(8ம் பாவத்தில் "சனி")

★சனி எட்டாம் பாவத்தில் யாருக்கெல்லாம் இருக்கிறதோ இவர்கள் வாழ்க்கையில் எதற்குமே பயப்பட மாட்டார்கள்.

★என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் வருவதை நாம் எதிர்கொள்வோம் என்ற மனோபாவம் இவர்களுக்கு இருக்கும்.

★(8ம் பாவத்தில் "செவ்வாய்")

★எட்டாம் பாவத்தில் செவ்வாய் இருப்பவர்களெல்லாம் பயத்தின் மூலமாக வீரத்தை வெளிப்படுத்துபவர்கள்.

★மேலும் அவர்களுக்கு உத்தியோகம் மூலமாகவும் வீடு வண்டி சொத்து  மூலமாகவும் பயம் இருக்கும்.

★(8ம் பாவத்தில் "குரு")

★யாருக்கெல்லாம் குரு எட்டாம் பாவத்தில் இருக்கிறதோ இவர்களுக்கு குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் பயம் என்பது இருக்கும்.

★குரு எட்டாம் பாவத்தில் இருப்பவர்களெல்லாம் வாகனம் ஓட்டும் போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் இவர்களுக்குத் தான் அதிகம்.

★(8ம் பாவத்தில் "சுக்கிரன்")

★சுக்கிரன் எட்டாம் பாவத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் மனைவியை சார்ந்தும் காதலன் அல்லது காதலியை சார்ந்தும் இவர்களுக்கு பயம் என்பது இருக்கும்.

★மேலும் இவர்கள் சுக்கிரன் சம்பந்தப்பட்ட விஷயங்களை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது சொன்னால் பிரச்சினை ஏற்பட்டுவிடும்.

★(8ம் பாவத்தில் "சூரியன்")

★சூரியன் எட்டாம் பாவத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் மருத்துவம் சார்ந்த விஷயங்களிலும்
தந்தையை சார்ந்த விஷயங்களிலும் மற்றும் அரசாங்கம் சார்ந்த விஷயங்களிலும் இவர்களுக்கு பயம் என்பது இருக்கும்.

★சூரியன் எட்டாம் பாவத்தில் இருப்பவர்களெல்லாம் இருட்டைக் கண்டால் பயப்படுவார்கள்.

★(8ம் பாவத்தில் "சந்திரன்")

★சந்திரன் எட்டாம் பாவத்தில்
 இருப்பவர்களுக்கெல்லாம் தண்ணீரைக் கண்டால் பயம் என்பது இவர்களுக்கு இருக்கும்.

★மேலும் இவர்கள் தண்ணீர் சார்ந்த விஷயங்களில் சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.

★(8ம் பாவத்தில் "ராகு")

★ராகு எட்டாம் பாவத்தில் இருப்பவர்களெல்லாம் அமானுஷம் சார்ந்த விஷயங்களிலும் ஆவிகள் பேய்கள் இதனை சார்ந்த விஷயங்களிலும் இவர்களுக்கு பயம் என்பது இருக்கும்.

★மேலும் இவர்கள் மின்சாரம் மற்றும்
electrical and electronics  சம்பந்தப்பட்ட பொருட்களை கையாளும் போதும் 
மற்றும் வாகனம் ஓட்டும்போதும் சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.

★கேது எட்டாம் பாவத்தில் இருந்தால் அதற்கு இந்த சூட்சமம் பொருந்தாது.

3.(12ம் பாவம்)

★பன்னிரெண்டாம் பாவத்தில் எந்த எந்த கிரகங்கள் எல்லாம் இருக்கிறதோ அந்த கிரக காரகத்துவம் சார்ந்து நமக்கு
விரயச் செலவுகள் என்பது இருக்கும்.

★(12ம் பாவத்தில் "சூரியன்")

★சூரியன் பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் மருத்துவம் சார்ந்தும் தந்தையை சார்ந்தும் அரசாங்கம் சாந்தும் நமக்கு விரயச் செலவுகள் என்பது கண்டிப்பாக வரும்.

★மேலும் சூரியன் 12 ஆம் பாவத்தில் இருந்தால் மருத்துவம் சார்ந்த விஷயங்களில் கண்டிப்பாக விரயச் செலவுகள் என்பது வரும்.

★இதனை சார்ந்த விஷயங்களை நாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கு தகுந்தார்போல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

★(12ம் பாவத்தில் "சனி")

★சனி பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் தொழில் மூலமாக விரயச் செலவுகளும் பணக் கஷ்டங்களும் இவர்களுக்கு ஏற்படும்.

★மேலும் சனி 12 ஆம் பாவத்தில் இருந்தால் தொழில் சார்ந்த விஷயங்களில் இவர்கள் முன்கூட்டியே கவனமாக இருக்க வேண்டும்.தொழிலுக்காக அவர்கள் கடன் வாங்கவே கூடாது.

★(12ம் பாவத்தில் "புதன்")

★புதன் 12 ஆம் பாவத்தில் இருந்தால்
கடன், சீட்டு, ஏலம், loan, sharemarket stockmarket, trading இவற்றை சார்ந்த விஷயங்களின் மூலம் இவர்களுக்கு விரயச் செலவுகள் என்பது இருக்கும்.

★மேலும் புதன் 12 ஆம் பாவத்தில் இருந்தால் கடன், சீட்டு, ஏலம் இது சார்ந்த விஷயங்களில் இவர்கள் போக கூடாது.மற்றும் இதனை சார்ந்து இவர்கள் கவனமாகவே இருக்க வேண்டும்.

★(12ம் பாவத்தில் "சுக்கிரன்")

★சுக்கிரன் 12ம் பாவத்தில் இருந்தால் மனைவி மூலமாகவும் அல்லது காதலன் மற்றும் காதலி மூலமாகவும் விரயச் செலவுகள் என்பது இருக்கும்.

★இதனை சார்ந்த விஷயங்களில் இவர்கள் முன்கூட்டியே சற்று கவனமாக இருக்க வேண்டும்.

★(12ம் பாவத்தில் "செவ்வாய்")

★செவ்வாய் பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் வீடு வண்டி வாகனம் சொத்து உத்யோகம் இதனை சார்ந்த விஷயங்களின் மூலம் இவர்களுக்கு விரைய செலவுகள் என்பது இருக்கும்.

★மேலும் இந்த விஷயங்களை சார்ந்து இவர்கள் முன்கூட்டியே சற்று கவனமாக இருக்க வேண்டும்.

★(12ம் பாவத்தில் "குரு")

★குரு பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் குழந்தைகள் மூலமாகவும் ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் மூலமாகவும் விரயச் செலவுகள் என்பது இருக்கும்.

★மேலும் இவர்கள் குழந்தைகள் சார்ந்த விஷயத்திலும் ஆன்மீகம் சார்ந்த விஷயத்திலும் விரயச் செலவுகள் செய்ய முன் கூட்டியே சற்று கவனமாக இருக்க வேண்டும்.

★பன்னிரெண்டாம் பாவத்தில் "சந்திரன், ராகு, கேது" இந்த மூன்று கிரகங்கள் இருந்தால் அதற்கு இந்த சூட்சமம் பொருந்தாது.

★6,8,12ம் பாவத்தில் கிரகங்கள் இல்லை என்றால் அந்த பாவத்தின் அதிபதி எந்த எந்த வீட்டில் இருக்கிறதோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரகத்தின் மூலமாக அந்த பாவங்கள் செயல்படும்.
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
9790111570

முற்பிறவிகளில் ஏற்பட்ட சாபங்கள், பாவங்கள்


 லக்னத்திற்கு
2ல் செவ்வாய், ராகு, கேது, சனி இவர்கள்
இருந்து சுபகிரகம் பார்வை பெறாவிட்டால் இந்த ஜாதகருக்கு வாழ்வில் சுகம் என்பதே இராது. 

2ல் செவ்வாய் இருந்தால்                  
பிறர் செய்வினை செய்திருப்பார்கள். கேது இருந்தால் இவரே இவரது மனைவிக்கு
செய்வினை செய்திருப்பார்.
சனி இருந்தால் ஜாதகரின் முன்னோர்கள் பிறருக்கு
செய்வினை செய்திருப்பார்கள். ராகு 2ல்
இருந்தால் பிறரின் செல்வத்தை வஞ்சித்தவனாவன். இதனால் வேலையில் தடை, குடும்பம் அமை
யாத சூழலை உருவாக்கும்.              5ல் செவ்வாய் இருப்பது முன்ஜென் மாவில் சீடன்  கேட்ட
கேள்விக்கு சரியான பதில்கூறாததினால் ஏற்பட்ட சாபத்தால் வந்ததாகும். இதனால் இப்பிறவியில் சின்ன விஷயத்திற்கெல்லாம் சத்தம் போட்டு பேசுவார். ஐந்தில சனி
இருந்தால் ஒருமுறைக்கு பலமுறை கேட்ட
பின்பே பதில்கூறுவார். இது புத்திரதோஷ அமைப்பாகும். ராகு இருந்தால் எந்நேரமும் போதையில் இருப்பான். 5ல் கேது இருந்தால் ஞானிபோல் பேசுவான்.  முன் பிறவியில் குழந்
தைகளை அடித்ததாலும், படிக்காதவர்களை ஏளனமாக பேசியதாலும் வந்ததாகும். தாயை மதிக்காததினாலும் இந்த அமைப்புகள் வருவதாகும்.8ல் செவ்வாய் இருப்பது பிறர்மனை, வீடு நிலத்தை அபகரித்ததால் வந்தது. சனி இருப்பது பொய்சாட்சி சொன்னதால் வருவது. இது அஷ்டம
சனி மூலம் ஆட்டிப்படைக்கும்.8ல் ராகு இருப்பது பிறர்மனைவியின் மீது இச்சைக்
கொண்டதாலும், அவற்றின் மூலம் பெற்ற
சாபத்தினால் வருவது  ஆகும். எட்டில் கேது இருப்பது வயோதிக காலத்தில் பிறர்மனைவி மீதும்,
இளம்பெண்கள் மீதும் இச்சை கொண்டதால் வந்தது. இதனால் ஜாதகருக்கு மாரக
தோஷமும், மனைவிக்கு மாங்கல்ய தோஷமும் ஏற்படும். 11ல் செவ்வாய் இருப்பது
லாபத்திற்காக பிறரை வஞ்சித்ததால் வந்ததாகும். சனி இருப்பது வேலை எதுவும்
செய்யாமல் முன்னோர்களின் சொத்துக்
களை அனுபவித்ததால் வந்தது.. ராகு இருப்பது முன்னோர்கள் வஞ்சகமாக சேர்த்
தசொத்துக்களை அனுபவித்ததினால் வந்ததாகும். கேது 11ல் இருப்பது முன்னோர்கள் உயர்பதவியில் இருந்து தவறான வழியில் சம்பாதித்த சொத்துக்களை அனுபவித்து அழித்ததனால் வந்ததாகும். இது
தான் கர்ம அமைப்புக்கள் என்று சொல்லத் தக்கன

Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
9790111570

Sri chakram


ஸ்ரீ சக்ரம் எங்கே இருக்கிறதோ அங்கே துஷ்ட சக்திகளும் பில்லி, சூனியம் போன்ற மாந்திரீகங்களும் அனுகவே முடியாது. எதிரிகள் தொல்லை போன்றவைகளுக்கு வாய்ப்புகளே இல்லை. ஸ்ரீ சக்ரம் எந்த இல்லத்தில் உள்ளதோ அங்கு எவ்விதமான வாஸ்து தோஷங்கள் இருப்பினும் அவை வேலை செய்யாது கட்டுப்படும். ஸ்ரீ வித்யா உபாசகர்களுக்கு எந்த விதமான ஜாதக, கிரக தோசங்களும்  பாதிக்காது.


பிரம்ம புராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் ஸ்ரீ சக்கரத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான். யார் வேண்டுமானாலும் பூஜித்து எல்லா பௌதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை (முக்தி/ மறுபிறவி சுழற்சி விடுதலை) அடைய முடியும்.


சிவபுராணத்தின் கூற்றுப்படி, பசு வதை செய்த பாவியும், நன்றிகெட்ட மனிதனும், வீரனைக் கொலை செய்தவனும், கர்ப்பத்தலுள்ள சிசுவைக் கொன்றவனும், தாய் தந்தையரைக் கொன்றவனும் கூட, ஸ்ரீ சக்கரத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும்!


பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் ஸ்ரீ சக்கரத்தை விதிமுறைப்படி ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்!


வாய்விய சம்ஹிதையின் கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி ஸ்ரீ சக்கரத்தை பூஜித்து வழிபடுவதுதானாம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தவரைவிட, பாதரசலிங்கத்தை தரிசித்த அதிர்ஷ்டசாலி. அவனைவிட அதிர்ஷ்டசாலி ஸ்ரீ சக்கரத்தை முறையாக தர்சனம் செய்பவனே. அப்படிவனையே நான் அதிகம் விரும்புகிறேன்! என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார்!


சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் ஸ்ரீ வித்யா தந்திரம் எனும் வாலை பரமேஸ்வரியை, முறையாக ஸ்ரீ சக்கரத்தில் பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.


இரசார்ணவ தந்திரம் என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை ஸ்ரீ சக்கரத்தை முறையாக பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன. பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், ஸ்ரீ சக்கரத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது.


இரசசமுச்சயம் என்ற நூலில், ஸ்ரீ சக்கரத்தை தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்த உபாயமுமில்லை. ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது. 


இந்த ஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ வாலை தாயின் ஸ்ரீ சக்கர உபாசனை தீக்ஷை புண்ணியம் செய்தவர்களுக்கும், ஆசை இல்லாதவர்களுக்கும், இதுவே கடைசி பிறவியாக பிறந்தவர்களுக்கும், மறுபிறவி இன்றி பிறப்பு இறப்பு சுழற்சியில் விடுதலை பெற்று பிறவாமை வேண்டுபவர்களுக்கும், தெய்வீக சக்தி உள்ளவர்களுக்கும் மட்டுமே கிடைக்க முடியும்.சில  யந்திரங்கள் முறைப்படி சுத்தி செய்யப்படாத சாபநிவர்த்தி செய்யப்படாதவைகளே கிடைக்கின்றன.  


தங்களுக்குக்காக குருமார்களால் உருவாக்கி தரும் ஸ்ரீ யந்திரத்தை பூஜிக்கலாம்.


இதைத்தவிர வேறெந்த முறையிலும் வாங்கி உபயோகிப்பதால் பலனில்லை


ஏற்கனவே சித்தி செய்த மந்திரத்தை உச்சாடனம் செய்து ஸ்ரீ சக்கர யந்திரத்தை உருவாக்க வேண்டும்.


வெண்மை நிறமுடைய வாசனை மிகுந்த மலர்களால் ஸ்ரீ சக்ரத்தை அர்ச்சிப்பவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் நிறையும். கல்வி, கலைகளில் சிறந்த தேர்ச்சி அடைவர். “சகலகலாவள்ளி மாலை” சொல்லி இவ்வழிபாட்டைச் செய்யலாம். 48 நாட்கள் விரதமிருந்து இவ்வழிபாட்டினை நெய்ப்பாயசம், வடை, வெண்பொங்கல் நிவேதனம் செய்து வழிபடலாம். பிறகு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தொடர்ந்து செய்தால் வழிபடுவோரின் நாவில் சரஸ்வதி தாண்டவமாடுவாள்.


ஸ்ரீ சக்ரத்திற்கு துளசியாலும், தாமரையிதழ்களாலும் அர்ச்சனை செய்து, 48 நாட்கள் விரதமிருந்து வழிபட்டால் தன ஆகர்ஷணமும், லக்ஷ்மி கடாட்சமும் நிறையும். சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம் மற்றும் தேன் நிவேதனம் செய்வது சிறப்பாகும்.


அதேபோல், சிவப்பு அரளி மற்றும் வெள்ளை அரளியால் அர்ச்சித்து எலுமிச்சம்பழ சாதம் நைவேத்யம் படைத்திட தொழில், உத்யோகம், அரசாங்க அனுகூலம் ஏற்படும்.


மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் நோய்கள் அகலும், எதிர்ப்புகள், நீதிமன்ற வழக்குகள் தீரும்.


ஸ்ரீ சக்ரத்தில் தேவியை ஸ்ரீ பாலா எனும் குழந்தை வடிவாக தியானித்து பால் அன்னம், தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் புத்திரப்பேறு ஏற்படும்.


அமாவாசைக்கு அடுத்த தினமான பிரதமை முதல் பௌர்ணமி வரை ஸ்ரீ சக்ரத்தை முறைப்படி பூஜித்தால் (திதி நித்யா பூஜை), தீராத துன்பங்கள் தீர்ந்து மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் விரைவில் குணமடைவர்.


நோயாளிகள் அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) அர்ச்சித்து வர நோயிலிருந்து விடுபடுவர்.


ஸ்ரீ சக்ரத்தில் தாரம்பிகை (ஸ்ரீ தாரா தேவி) மூல மந்திரத்தைக் கொண்டு ஆவாஹனம் செய்து வழிபட்டால் வெளிநாடு சம்பந்தபட்ட தொழில், உத்யோகம், வியாபாரம் செழிக்கும். வெளிநாட்டில் வசிக்கும் மகன், மகள், உற்றார், உறவினர் நலனுக்காகவும் இவ்வாறு வழிபடலாம்.


பொது இடங்களாகிய ஆலயங்கள், திருமடங்கள், தியான பீடங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் போன்றவற்றில் எல்லோரும் நலம் பெற வேண்டி “பிரஜா பிரதிஷ்டை” முறைப்படி ஸ்ரீ சக்ரம் அமைக்கபட்டால் ஒற்றுமையும், அமைதியும் அன்பும் உலகெங்கும் நிலவும்.


ஸ்ரீ சக்ர பூஜை செய்யும் சுமங்கலிகள் மற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், பூச்சரம், மஞ்சள் கயிறு, வளையல், இரவிக்கை துணி ஆகிய மங்கலப் பொருட்களை வழங்கி அவர்களின் நல்வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்வது, கணவன், மனைவி, குழந்தைகளுடன் இவ்வழிபாட்டினைச் செய்வது மிகவும் நல்லது.


Ambharish g

savithaastro@gmail.com

savithaastro.blogspot.com

9790111570

Friday, February 23, 2024

மாசி மகம்

மகிமைகள் நிறைந்த 
                       மாகஸ்நாநம் ..!
      ‌‌              🌺🌺🌺🌺🌺🌺🌺

தமிழ் மாதங்களில் 11 -வது மாதமாக அமைவது மாசி மாதம்.
இறை வழிபாடாற்றலுக்கும்;
விசேஷங்களுக்கும்;  புண்ணிய நீராடலுக்கும் உகந்த மாதமாக இது விளங்குகின்றது.

கோளியல்படி,  ஒவ்வொரு மாதமும் சந்திர பகவானுக்குரிய பௌர்ணமி தினமானது அன்றைய தினம் கூடுகின்ற நக்ஷத்திரத்தின் அடிப்படையில்  இறை வழிபாட்டிற்குரிய புண்ணியதினமாக அமைவது வழமை.

அவ்வகையில்  மாசி மாதத்தில் சந்திர பகவான்  மக நட்சத்திரம் -சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் நிலையில் பௌர்ணமி கூடும் தினமானது 'மாசி மகம்' எனச் சிறப்பிக்கப் பெறும் புண்ணிய தினமாக அமைகின்றது.

வருடந்தோறும் சூரிய பகவான் கும்ப ராசியில் வலம் வரும் இம்மாசி மாதத்தில் 12 புண்ணிய நதிகளும்  தீர்த்தங்களில் புனித முழுக்காடி தாங்கள் சுமந்த மக்களின் பாவங்களைப் போக்கி தங்களை மீண்டும் சுத்தம் செய்து கொள்வதாக ஐதீகம்.  எனவே நமக்கும் மாசி மாதம் முழுவதுமே 
புனித நீராடலுக்குரிய புண்ணிய மாதமாக அமைகின்றது.
குறிப்பாக மாசி மகம் ஆனது  இறை வழிபாட்டுடன்  நீத்தார் வழிபாட்டிற்கும் உரிய தினமாகத் திகழ்கின்றது.

பண்டு நாட்களில் மாசிமக புனித நீராடலை  முந்நீர் விழா, மாசிமகக் கடலாடு விழா என்கிற பெயர்களில்   குறிப்பிட்டுள்ளனர்.
அறிவியல் ரீதியாக குறிப்பிட்ட கிரகநிலைகள் நிலவும் போது நாம் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும்; பூஜை புனஸ்காரங்கள் , தானங்கள் போன்ற புண்ணிய காரியங்களைச் செய்வதும் உடல் மற்றும்  மனோரீதியாக அளவற்ற நற்பலன்களை அள்ளித் தருவது மறுக்க இயலாத உண்மை.

சிவபெருமானுக்குரிய மகா சிவராத்திரி அமைவது இம்மாதத்தில் தான்.
அதையொட்டி வரும் அமாவாசை தினமானது மிகுந்த நற்பலன்களைத் தந்திடும்  வழிபாட்டு தினமாக அமைகின்றது.

ஆடல்வல்லானுக்குரிய ஆறு வருடாந்திர திருமஞ்சனங்களில் மாசி சதுர்த்தசி தின அபிஷேகமும் ஒன்று.

பொதுவாக மாசி மாதம் மகாவிஷ்ணுவிற்குரிய  மாதமாகும்.  எனவே, மாதம் முழுவதுமே பெருமாள் வழிபாட்டிற்குரிய மாதமாக அமைகின்றது.

அன்னை உமையவள் தக்ஷனின் மகளாக அவரது நீண்டகால தவத்திற்குப் பலனாக தாமரை மலரில் அமைந்த  சங்கொன்றில்  அவதரித்தது இந்த மாசி மகம் அன்றுதான். இத்தினத்தில் அம்பிகையை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.
எனவே, அம்பிகைக்கு உரிய  பெண்கள் போற்றக்கூடிய மாதமாக இது அமைகின்றது.
மாசியில் திருமணம் ஆகும் பெண்கள் நீண்ட சுமங்கலித்துவம் பெற்று வாழ்வார்கள் என்பது நமது நாட்டின் தொன் நம்பிக்கை.
இதனையொட்டி 'மாசிக் கயிறு பாசி படரும்' என்ற சொல் வழக்கும்
நம்மிடையே உண்டு. 

இம்மாத இறுதியில் அமையும்  காரடையான் நோன்பு அன்று திருமாங்கல்யச்சரடு 
மாற்றிக்கொள்வதும்; நோன்பு சரடு அணிவதும் பெண்களால்  தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்படும் மரபு.

அந்தணர்களுக்குரிய பூணூல் அணிவிக்கும் சடங்கான  'உபநயனம்' எனப்பெறும் வைதீகநிகழ்வினை இம்மாசி மாதத்தில் செய்வது சிறப்பானதாகக் கருதப் படுகின்றது.

குபேரன் சாப நிவர்த்தி பெற்று செல்வவளம் அடைந்தது மாசி பௌர்ணமி தினத்தில் தான்.
அருகிலுள்ள சிவாலயங்களில் குபேர லிங்கங்கள் இருப்பின் இந்நாளில்  அவற்றை வழிபட்டு அளப்பறிய பலன்களைப் பெறலாம்.

விநாயருக்குரிய  சதுர்த்தி விரதங்களைத் தொடர எண்ணுபவர்கள் இம்மாதத்தில் துவக்குவது மரபு.

மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, தீர்த்தக் கரைகளில் நீத்தார் வழிபாடாற்றுவதன் மூலம் பித்ருக்களின் ஆசிகள் கிட்டும்.
தவிர அன்றைய தினம் கம்பளி, சந்தனம், பசு போன்றவற்றை அந்தணர்களுக்கு தானம் செய்திட தோஷங்கள் அகன்று குடும்பத்தில் மேன்மைகள் உண்டாகும் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை.

பெளர்ணமியை பிரதானமாகக் கொண்டு இறைவழிபாடு செய்பவர்கள் இரவில் தங்கும் அளவினைக் கணக்கிட்டு   மேற்கொள்வர். 
தீர்த்தக் கரைகளில் முன்னோர் வழிபாடாற்றுபவர்கள்  மக நட்சத்திரம் சூரியோதய காலத்தில் தங்கும் நேரத்தினைக் கணக்கிட்டு செய்வர்.
நீத்தார் இறந்த திதி தெரியாதவர்கள் கூட மாசிமகத்தன்று 'திதி கொடுப்பது' என்ற பித்ரு வழிபாட்டினை ஆற்றுவது இன்றளவும் நம் மரபு சார்ந்த தொன்வழமையாக உள்ளது. 

இவ்வளவு புண்ணிய பலன்களைத் தந்திடும் மாக ஸ்நாநம்  மற்றும் வழிபாடுகளை இயன்ற அளவு செய்து அளவற்ற நன்மைகளை அடைய முயற்சிக்கலாமே..!

Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

த்ரெக்காண பலன்கள்

உங்கள் மரணம் எப்படி என்று அறிய !

22வது திரேக்காணம்.

 22 வது திரேக்காணம் என்பது ஒருவரின் இறப்பின் தன்மையினை அறிய பயன்படுகிறது. இது கர திரேக்காணம் என அழைக்கப்படுகிறது. 22 வது திரேக்காணம் என்பது எட்டாவது ராசியில் அமையும் திரேக்காணமாகும்.

22வது திரேக்காணத்தினை எவ்வாறு அறிவது???

திரேக்காணத்தில் லக்னம் விழுந்த இடத்திற்கு 8 ம் இடத்து அதிபதியே 22வது திரேக்காண அதிபதி ஆவார்.

திரேக்காண  லக்னம் மேஷம் எனில் விருச்சிகம் 22வது திரேக்காணம் ஆகும்.  ரிஷபம் எனில் தனுசு 22வது திரேக்காணம் ஆகும்.

உதாரணமாக மேஷ ராசிக்கு முதல் பத்து பாகையின் திரேக்காண லக்கினம் ஆனது மேஷம், இரண்டாவது பத்து பாகையின் திரேக்காண லக்கினம். ஆனது சிம்மம், மூன்றாவது பத்து பாகையின் திரேக்காண லக்கினம் ஆனது தனுசு என முன்னரே கண்டோம். இந்த ராசிகளில் தான் திரேக்காண லக்கினம் விழுகும்.

இதனின் 8ம் இடத்து அதிபதியான மேஷத்திற்கு- விருச்சிகம், சிம்மத்திற்கு- மீனம், தனுசுவிற்கு- கடகமே 22வது திரேக்காணம் ஆகும். இதன் அதிபதியே 22வது திரேக்காண அதிபதியாவார்.

இதனை இன்னொரு விதமாக கூறவேண்டுமானால் எந்த ஒரு ராசிக்கும் 22வது திரேக்காண அதிபதியானது முதல் பத்து பாகைக்குள் லக்கினம் அமைந்தால் அந்த ராசிக்கு 8ம்மிடத்து அதிபதியும், இரண்டாவது பத்து பாகைக்குள் லக்கினம் அமைந்தால் அந்த ராசிக்கு 12ம்மிடத்து அதிபதியும், மூன்றாவது பத்து பாகைக்குள் லக்கினம் அமைந்தால் அந்த ராசிக்கு 4ம்மிடத்து அதிபதியும் திரேக்காண அதிபதி ஆவார்கள்.

உதாரணமாக முதல் பத்து பாகை- 8ம்மிடத்து அதிபதி செவ்வாய்இரண்டாவது பத்து பாகை- 12ம்மிடத்து அதிபதி குருமூன்றாவது பத்து பாகை- 4மிடத்து அதிபதி சந்திரன் இவையே முறையே மேஷ ராசியின் 22வது திரேக்காண அதிபதியாவார்கள்.

22வது திரேக்காணம் ராசியின் முதல் திரேக்காணத்தில் லக்னம் அமைந்தால் 8வது ராசியில் முதல் திரேக்காணமும், ராசியின் 2வது திரேக்காணத்தில் லக்கினம் அமைந்தால் 8வது ராசியில் 2வது திரேக்காணமும், 3வது திரேக்காணத்தில் லக்கினம் அமைந்தால் 8வது ராசியில் 3வது திரேக்காணமும் 22வது திரேக்காணமாக அமையும். இனி ஒவ்வொரு லக்கினத்திற்கும் எந்த திரேக்காணத்தில் லக்கினம் விழுகிறதோ அதற்க்கான வியாதி, நோயினை அறிவோம்.

மேசம்
1வது திரேக்காணம்-நீர் நிலை,  பாம்பின் விஷம், விஷக்கடி
2வது திரேக்காணம்-நீர்,புழுக்கள், பனித்துளி, காடு
3வது திரேக்காணம்-கிணறு அல்லது நீர் நிலைகளில் விழுதல்

ரிஷபம்
1வது திரேக்காணம்-யானை, குதிரை, ஒட்டகம்
2வது திரேக்காணம்-பித்தம் , தீ , வாதம் , திருடர்கள்
3வது திரேக்காணம்-வாகனம் அல்லது இருக்கை அல்லது குதிரையிலிருந்து விழுதல், ஆயுதம் தாக்கி விழுதல்

மிதுனம்
1வது திரேக்காணம்-இருமல் , ஆஸ்த்துமா
2வது திரேக்காணம்-எருது, விஷம், வைரஸ் போன்ற கிருமி ஜுரம்
3வது திரேக்காணம்-காட்டு விலங்குகள்,மலை, பாம்புகள், யானைகள், காட்டுவாசி அல்லது காடு

கடகம்
1வது திரேக்காணம்-முதலை, மது, முட்கள், தூக்கம்
2வது திரேக்காணம்-அடித்தல் ,விஷம் அருந்துதல், 
3வது திரேக்காணம்-பறவைகள், சர்க்கரை வியாதி, கட்டி, இரத்தம் கெடுதல், மயக்கம், அதீத தூக்கம்

சிம்மம்
1வது திரேக்காணம்-நீர், விஷம், கால் நோய்
2வது திரேக்காணம்-நீர் கோத்தல் அல்லது வீக்கம், வயிற்றுப்போக்கு, காடு
3வது திரேக்காணம்-விஷம், ஆயுதங்கள், அறுவைச்சிகிச்சை, சாபம், விழுதல்

கன்னி
1வது திரேக்காணம்-தலை அல்லது மூளை நோய்.
2வது திரேக்காணம்-காட்டு யானை , பாம்பு, காடு, மலை, இளவரசனின் அதிருப்தி.
3வது திரேக்காணம்-பாழ்க்கிடங்கு, உணவு மற்றும் மது, பெண், ஆயுதம், தன்னீர் நிலை, குரங்கு,யானை

துலாம்
1வது திரேக்காணம்-இளம் பெண், விலங்கு, விழுதல்.
2வது திரேக்காணம்-வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள்.
3வது திரேக்காணம்-பாம்பு, நீர் நிலை

விருச்சிகம்
1வது திரேக்காணம்-விஷம், ஆயுதம், பெண், உணவு
2வது திரேக்காணம்-துணி, பாரம், விழுதல், நோய்
3வது திரேக்காணம்-மண்கட்டி மற்றும் கற்களால் ஏற்படும் வலி, கெண்டைக்கால் எலும்பு முறிதல்.

தனுசு
1வது திரேக்காணம்-குதம் சம்பந்தப்பட்ட நோய், வாத கோளாறு
2வது திரேக்காணம்-விஷம், வாத நோய்3வது திரேக்காணம்-தண்ணீரில் அல்லது தண்ணீரால் பிணி, வயிறு சம்பந்தப்பட்ட நோய்

மகரம்
1வது திரேக்காணம்-அரசரால் துன்பம், புலி, தொடையில் எழும்பு முறிவு, நீர் வாழ் விலங்குகள், விஷம், பாம்பு,  விலங்குகளால் உதை படுதல்
2வது திரேக்காணம்-தீ, ஆயுதம், திருடர்கள், காச்சல், கால் ஆணி, கூரிய ஆயுதத்தால் குத்துதல்.
3வது திரேக்காணம்-பெண்

கும்பம்
1வது திரேக்காணம்-பெண், நீர் நிலை, வயிற்று கோளாறு, கொடூரமாக தாக்குதல். 
2வது திரேக்காணம்-பெண், பால்வினை நோய்கள்
3வது திரேக்காணம்-காம மிகுதி, நான்கு கால்களைகொண்டவைகளால் ஆபத்து, முகம் சார்ந்த நோய்கள்

மீனம்
1வது திரேக்காணம்-கட்டி, வயிற்றுப்போக்கு, நீரிழிவு நோய், இளம் பெண், முழங்கால் மற்றும் நீர்யானை, திருஷ்டி மற்றும் சூன்யம், 
2வது திரேக்காணம்-கப்பல் உடைதலால் அல்லது நீர் புகுதலால் ஆபத்து
3வது திரேக்காணம்-மேலிருந்து விழுதலால் ஆபத்து. 
இங்கு மேலே கூறியவற்றில் உள்ள அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேசத்தின் 
1வது கர திரேக்காணம் விருச்சிகம் எனவே -நீர் நிலை,  பாம்பின் விஷம், விஷக்கடி
மேசத்தின் 2வது கர  திரேக்காணம் மீனம் எனவே -நீர்,புழுக்கள், பனித்துளி, காடு
மேசத்தின் 3வது கர  திரேக்காணம் கடகம் எனவேதான் கிணறு அல்லது நீர் நிலைகளில் விழுதல் போன்றவை பலனாக கூறப்பட்டுள்ளது 

கர திரேக்காணம் பற்றிய  வேறு சில முக்கிய குறிப்புகளை காண்போம். 
1. 22வது திரேக்காணதிபதி தசா/ புத்தி கிரஹமாக இருந்தால் தன்னுடைய தசா புத்தியில் உடல் ரீதியான பிரச்சினையை தருவார்.

2.22வது திரேக்காணதிபதி சனி, செவ்வாய், ராகு, கேதுவாக இருந்து அது மேலும் 5,9 ஆதிபத்தியம் பெறாமல் இருந்தால் அது தீமை தரும் அமைப்பு ஆகும்.  

3.22வது திரேக்காணாதிபதி லக்கினாதிபதிக்கு பகை கிரஹமாக இருந்து 6ம் பாவம் சம்பந்தபட்டாலும், பாதகஸ்தானம் சம்பந்தம் ஏற்பட்டாலும் உடலில் மிகப்பெரிய வடுவை உண்டாக்கும்.

4.22வது திரேக்காணத்தின் அதிபதி இருக்கும் வீட்டை கோட்சாரத்தில் சனி கிரஹம் கடக்கும் போது ஒருவருக்கு உடலில் இறப்பிற்கு சமமான வேதனைகள், ஆபரேஷன் போன்றவற்றினை சந்திக்க நேரிடும்.

5. திரேக்காண லக்கினாதிபதி நீசம், 6,8,12ம் பாவத்தில் திரேக்காணத்தில் இருந்தால் 22வது (கர) திரேக்காணாதிபதி மிகுந்த கெடுதல் செய்வார். திரேக்காணத்தில் திரேக்காண லக்கினாதிபதி பலமாக இருந்தால் 22வது (கர) திரேக்காணாதிபதியால் கெடுதல் அவ்வளவாக இருக்காது.

Ambharish sasthri
Savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

Monday, January 29, 2024

கும்பாபிஷேகத்தின்_வகைகள்


1, ஆவர்த்தம்:- 

ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது.


2, அனாவர்த்தம்:- பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.


3, புனராவர்த்தம்:- கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.


4, அந்தரிதம்:- கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சாந்தி.


கும்பாபிஷேகத்தில் விக்கிரகப் பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் #அவசியமான_கிரியைகள்_பற்றிய #விளக்கம்.


கணபதி பூசை – செய்கின்ற காரியம் தடைகள் இன்றி இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.


தனபூசை - திரவிய பாகம்: கும்பாபிடேகத்துக்குத் தேவையான நிதியைத்  திரட்டுதலும் அவற்றை ஆகம விதிப்படி திட்டமிட்டு ஒதுக்கீடு செய்தலும். சேரும் நிதியைப் பதினொரு பங்காகப் பிரித்து,  

3 பங்கு – யாகத்துக்கும்

1 பங்கு அபிஷேகத்துக்கும்

1 பங்கு ஆச்சாரியாருக்கும்

1 பங்கு ஏனைய குருமாருக்கும்

2 பங்கு பிராமண போசனுத்துக்கும்

2 பங்கு செபம், பாராயணம் செய்வோருக்கும், தானத்துக்கும்

1 பங்கு மண்டலாபிஷேகத்தும்

எனத் திட்டமிட்டுப் பங்கீடு செய்யும்படி ஆகமங்கள் கூறுகின்றன. 


ஆச்சாரியவரணம் – 

தகுந்த சிவாச்சாரியாரைத் தேர்தெடுத்து அவரிடம் கும்பாபிடேகக் கிரியைகளுக்கான பொறுப்பினை ஒப்படைத்தல். தேர்ந்தெடுக்கப்பட்ட சிவாச்சாரியார் பின்னர் தகுந்த சாதகாச்சாரியார், போதகாச்சாரியார், சாதகர், ருத்விக்குகள் முதலானோரை நியமிப்பார். 


அனுக்ஞை {அனுமதி வாங்குதல்} – 


விப்ர அனுக்ஞை: 

வேத ஆகம அறிவும், சைவ அநுட்டானமும் உள்ள் சான்றோர் சபையில் தட்சிணை, தாம்பூலம் சமர்ப்பித்து இக் கும்பாபிடேக கிரியைகளைச் செய்ய யான்  தகுதி உள்ளவனா? என்று  சபையோரிடம் வினவி அவர்களின் ஆமோதிப்பையும் அனுமதியையும் பெறுவது  ஆகும்.


தேவ அனுக்ஞை:  

செயல்களைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெறல். விநாயகர், மூலமூர்த்தி, பரிவார மூர்த்திகள், சண்டேசுவரரிடம் சென்று பூசித்து கும்பாபிஷேகம் செய்ய அனுமதி பெறல்.  


கணபதி ஹோமம் – 

எடுத்த காரியம் விக்கினங்கள் இன்றி முடிய விக்கினேசுவரராகிய விநாயகருக்குச் செய்யும் அக்கினி காரியம் இந்த கணப்தி ஓமம் ஆகும். 


கிராம சாந்தி: 

ஆலயத்தின் மேற்கு வீதியில் பந்தல் போட்டு செய்யப்படுவது. ஆலயச் சூழலில் நிலைகொண்டுள்ள துட்ட சக்திகள், ஆவிகளை கிரியை முடியும் வரை இடையூறு இல்லாமல்  எல்லையை விட்டு விலகி நிற்கப் பணித்து வைரவருக்குக்காக பூசை, ஓமம், பலி கொடுத்துச் செய்யப்படும் பூசை. 


இரட்சோக்ன பூசை: 

கிரியைகள் முடியுமட்டும் ஆலயச் சூழலில் உள்ள அகோர தெய்வ மூர்த்தங்கள், கணங்களை விலக்கு முகமாக சதாசிவமூர்த்தியாகிய கட்கேசரையும், இரட்சோக்ன தேவதையையும் பூசித்து இரட்சோக்ன மந்திரத்தால் வெண்கடுகு, பருத்திக்கொட்டை, வேப்பெண்ணை முதலியவற்றால் செய்யப்படும் ஓமம்.

  

பிரவேச பலி: 

அட்ட திக்குத் தெய்வங்களை அந்தந்த திக்குகளில் காவலாக நிலை நிறுத்துதல்.


பிரமத் தானம் – இலக்குமி – இங்கு இலக்குமியை நிலைநிறுத்தி அட்ட இலக்குமிகளை வீற்றிருக்க வேண்டுதல்.


கிழக்கு – இந்திரன் – இங்கு காவலாக உள்ள யட்சர்களைப் பூசித்து, பிரீதி செய்து, பலி முதலியன கொடுத்து அவர்களை மலை உச்சிக்கு அனுப்பி இங்கு இந்திரனை காவல் தெய்வமாக நிலைநிறுத்தல். 


தென்கிழக்கு – அக்கினி - இங்கு காவலாக உள்ள இராட்சதர்களைப் பூசித்து, பிரீதி செய்து, பலி கொடுத்து, மலைக்கு செல்லுமாறு பணித்து, காவலாக அக்கினியை நிலைநிறுத்துதல்.


தெற்கு – இயமன் – இங்கு காவலாக உள்ள பூதர்களைப் பூசித்து, பிரீதி செய்து, பலி கொடுத்து, அவர்களை பித்ரு தானத்துக்குப் போகுமாறு பணித்து இயமனைக் காவலாக நிறுத்துதல்.


தென்மேற்கு – நிருதி - இங்கு காவலாக உள்ள பைசாசர்களைப் பூசித்து, பிரீதி செய்து, பலி கொடுத்து, அவர்களை வன மத்தியில் செல்லுமாறு பணித்து இங்கு நிருதியைக் காவலாக நிறுத்துதல்.


மேற்கு – வருணன் – இங்கு காவலாக உள்ள பிரம்ம இராட்சதர்களைப் பூசித்துப், பிரீதி செய்து, பலி கொடுத்து, அவர்களை நதிக்கரைக்குப்போகுமாறு பணித்து, இங்கு வருணனைக் காவலாக நிறுத்துதல்.


வடமேற்கு – வாயு – இங்கு காவலாக உள்ள காளியைப் பூசித்துப், பிரீதி செய்து,  பலி கொடுத்து அவளைப் பரிவாரத்துடன் காட்டுக்குப் போகுமாறு பணித்து, இங்கு வாயுதேவனைக் காவலாக நிறுத்துதல். 


வடக்கு – குபேரன் – இங்கு காவலாக உள்ள சரளியென்னும் தேவதையைப் பூசித்து, பிரீதி செய்து, பலி கொடுத்து, அவளைப் பரிவாரத்துடன் வான்மண்ண்டலத்துக்குச் செல்லுமாறு பணித்து, இங்கு குபேரனைக் காவலாக நிறுத்துதல்.


வடகிழக்கு – ஈசானன் – இங்கு காவலாக உள்ள பைரவரைப் ;பூசித்துப், பிரீதி செய்து, பலி கொடுத்து அவரை மயானத்துக்கு செல்லுமாறு பணித்து இங்கு காவலாக ஈசானனை நிறுத்துதல்.


சங்கல்பம் – 

கும்பாபிசேகத்தில் அதற்குரிய கிரியைகள் செய்யப்போகின்றேன் என்று இறைவனிடத்தில் பிரமாணம் செய்தல்.

 

புண்ணியாகவாசனம்: 

சுத்தி செய்யும் கிரியை – தான(இடம்) சுத்தி, உடல் (பூத) சுத்தி, ஆன்ம சுத்தி, திரவிய சுத்தி


வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபட்டு அழைத்தல்.


பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளைப் பூஜை செய்தல்.


பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திரங்களுடன் கூடிய நியாசங்களினால் (தொடுமிடம் தொடுதல்)  மாற்றி அமைத்தல்.


பஞ்ச கவ்யம் – ஆன்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், கோசலம்,கோமயம் முதலியவைகளை வைத்துச் செய்யப்படும் கிரியை.


தான சுத்தி - வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.


மிருத்சங்கிரஹணம் {மண் எடுத்தல்} - 


அட்ட திக்குப் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்திலிருந்து மண் எடுத்து அப் பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.{ ஆலயம் நிர்மாணம் செய்ய பூமித் தாயான பூமா தேவியை ஊறு செய்ததன் காரணமாக பூமா தேவியைப் பொறுதருளவேண்டிப் பூசித்துச் செய்யப்படும் கிரியை}


அங்குரார்ப்பணம் {முளையிடுதல்} -


எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் பன்னிரண்டு ஆதித்தர்களான வைகர்த்தன்,விவஸ்வதன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,ரவி,லோகபிரகாசன்,லோகசாட்சி,திரிவிக்ரமன்,ஆதித்யன்,சூரியன்,அம்சுமாலி,திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.


ரக்ஷாபந்தனம் {காப்புக்கட்டுதல்} -


கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும் செய்யும் கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு. அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.


தீர்த்த சங்கிரஹணம் – கும்பத்துக்கு தேவையான நீரை எடுத்தல்


கும்பலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.


கலா கர்ஷ்ணம் {சக்தியை வருவித்தல்} –

பாலாலயத்தில் விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக வரவழைத்தல்.


யாகசாலா பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.


யாகபூசை: 


சூர்ய,சோம பூஜை – யாகசாலையில் சூரிய சந்திரர்களை வழிபடுதல்.


மண்டப பூஜை – அமைக்க பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.


பேரசலனம்: 

பாலாலயத்தில் தாபித்து இருக்கும் விக்கிரகத்தை அதில் இருந்து அகற்றி எடுத்தல். 

தீப தாபனம்

யந்திர தாபனம்

பிம்ப தாபனம்


அட்ட பந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் இறை விக்கிரகத்தை பீடத்துடன் பொருத்துதல். இதை மருந்து சாத்துதல் என்பர்.


தைலாப்பியாங்கம் - எண்ணெய் சாத்துதல் 


பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.


நாடி சந்தானம் – 

யாகசாலை இடத்திற்கும் மூல திருமேனிக்கும் தருப்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். {இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இணைப்பு மூலமாக விக்கிரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்}


விசேட சந்தி - 

36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்கிய நீர் தருவது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்கியம் தருவது.


ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்கிரகங்களுக்கு ஸ்பரிசத்தின் மூலமாகவும் ஆகுதிகள் மூலமாகவும் கொண்டு சேர்த்தல்.


தூபித் தாபனம்: தூபிகளுக்கு கலசங்கள் பொருத்துதல்


பூர்ண ஆகுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.


கும்பாபிஷேகம் {குடமுழுக்கு} - 

யாக சாலையில் அந்தந்த மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூசிக்கப்பட்டு மந்திர சக்தி ஏற்றபட்ட கும்பத்து நீரை அந்தந்த இறை மூர்த்திகளுக்கு அபிடேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்கிரகத்தில் எழுந்தருள்கிறார்.


மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்கிரகத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.


மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தை போல விக்கிரகத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48 நாட்கள் விஷேச அபிடேகம், பூசைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.


யாகசாலை குண்டங்களின் எண்ணிக்கை:

ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைத்தல்.

பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.

நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.

உத்தம பக்ஷம் – முப்பத்திரண்டு குண்டம் அமைத்தல்.


கும்பாபிடேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தன தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது இரண்டு காலம், நான்கு காலம், எட்டுக் காலம், பன்னிரண்டு காலம் வரை செய்யும் முறைமைகள் வழக்கத்தில் உள்ளன.


கும்பத்தின் விளக்கம் -

யோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை சரீரமாக எவ்வாறு பாவிக்க வேண்டும் என்பதை விபரமாகச் சொல்லுகிறது. 


கும்பமாகிய குடம் மாமிசமாகும், 

குடத்திலுள்ள தண்ணீர் இரத்தமாகும், 

கும்பத்தினுல் போடப்படும் இரத்தினங்கள் சுக்கிலம் ஆகும், 

கும்பத்தின் உள்ளே தர்ப்பையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் நாடியாகும், 

குடத்தின் மேலே நெருக்கமகச் சுற்றப் பட்டுள்ள நூல்களே நரம்புகளாகும், 

கும்பத்தை சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்திரமே தோல் ஆகும்

குடத்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசாகவும், முகமாகவும் கூறப்படுகிறது, 

தேங்காயின் மேலே விரித்துள்ள தர்ப்பையினால் செய்யப்பட்ட லம்ப கூர்ச்சம் சிகை {குடுமி} ஆகும், 

தேங்காய்க்கு அடியில் போடப்படும் மாவிலைகள் ஸ்வாமியின் ஜடாபாரங்கள் ஆகும். 

இங்கு உச்சரிக்கப்படும் மந்திரங்களே பிராணனாகும் என்று  சிவாகமங்களில் விளக்கப்பட்டுள்ளது. . 

. நன்றி

Ambharish g 

savithaastro@gmail.com

savithaastro.blogspot.com