Wednesday, September 28, 2016

நவாவரண பூஜை அறிந்து கொள்ளுங்கள்

!!!

காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.

அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.

பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக் களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.
இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது.

நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு.

இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில்
படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று
விட்டால் பாக்கிய சாலிதான்.

அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

ஒரு பழைய காமகோடி இதழ

"்"

கன்யையில் கன்யாபூஜையும் பித்ருபூஜையும்
பரிவர்த்தன ஏகாதசி, சிரவணத்வாதசி, விஸ்வரூப யாத்திரை, மஹாளயபக்ஷம், நவராத்திரி ஆரம்பம் முதலிய புண்ணிய நாட்கள் நிறைந்தது. கன்யா ராசியில் சூரியன் வரும் மாதம்.

अस्मै वै पितरौ पुत्रान् बिभृतः (யஜுர்வேதம் 6.1.6.) இதற்காகத்தான் பெற்றோர் புத்திரர்களைப் பரிக்கிறார்கள். ஸுபர்ணா என்னும் தாய் தன் புத்திரர்களை நோக்கிக் கூறும் சொல் இது. கத்ரூ என்பாள் ஸுபர்ணையை அடிமை கொண்டாள். அதிலிருந்து தன்னை விடுவிப்பது புத்திரர் கடமை என்று அவள் சொன்னாள். தன்னைத்தான் காத்துக்கொள்ள முடியாத சைசவத்தில் பல கஷ்டங்களை அநுபவித்துப் பெற்றோர் சிசுக்களைக் காப்பது எதற்காக? பெற்றோர் தம்மைக் காத்துக்கொள்ள முடியாதபோது புத்திரர்கள் பித்ருக்களைக் காப்பதற்காக அல்லவா?

ஸுபர்ணை கூறிய வண்ணம் ஸ்வர்க்கத்திலுள்ள ஸோமத்தைக் கொண்டு வர முயன்ற ஜகதீ, திருஷ்டுப் என்ற புத்திரர்கள் தம் பலத்தை இழந்து வெற்றி பெறாமல் திரும்பினர். காயத்திரி என்னும் புதல்வன் கிளம்பி, தேவலோகம் சென்றான்; சகோதரர் இழந்த பொருள்களையும் மீட்டு வந்தான்; ஸோமத்தையும் கொண்டுவந்து தாயை விடுவித்தான்.
இதையே பதினெண் புராணகர்த்தாவான வியாசர், “பாம்புகளின் தாயான கத்ரூ, கருடன் மாதாவான ஸுபர்ணையை அடிமையாக்கினாள். ஸ்வர்க்கத்திலுள்ள அமிருதத்தைக் கொண்டுவந்தால் அடிமை அகலுமென்று கத்ரூ கூறக் கேட்டார் கருடன். பெற்றோர் பெரியோர் ஆசியைப் பெற்று விண்ணுலகம் சென்றார்; வீரர்களுடன் போர் புரிந்தார்; வெற்றி கொண்டார்; தாயைக் காத்தார்” என்று சுவை நிறைந்த கதையால் வேதக் கருத்தைச் சித்திரித்துப் போஷித்தார்.

நம்மைப் பெற்றெடுத்து வளர்த்த பெற்றோர் ஐம்பூத உடலையும் மண்ணுலகையும் விட்டனர். விண்ணுலகில் ஜலமயமான உடல் பெற்றுப் பித்ருக்களாகி வைவஸ்வதன் ஆதியின் கீழ் ப்ரஜைகளாக வாழ்கின்றனர். அது போக பூமி. அங்கே அவர்கள் தம் உடலுக்கு வேண்டியதைத் தேட முடியாது. இந்தச் சமயத்தில்தான், தாம் செய்த உதவிக்குக் கைம்மாறு வேண்டுகின்றனர். யமதர்மராஜன் கருணைகொண்டு பித்ருக்களை அவ்வுலகிலிருந்து மண்ணுலகுக்கு அனுப்புகிறார். ’புத்திரரிடம் சென்று உண்டு வாருங்கள்’ என்று. அந்தக் காலமே மஹாளய பக்ஷம் எனப்படும். பித்ருக்கள் வசித்த இடத்தைச் சுத்தம் செய்வதற்காகவோ அல்லது புத்திராதிகள் அளிக்கும் அன்னபானங்களை அருந்தி அவர்களை ஆசீர்வதிக்கட்டும் என்ற எண்ணங்கொண்டோ பித்ருக்களை அனுப்புகிறார். அவர்களும் ’அறுசுவை அன்னம் அகப்படும். பதினாறு நாட்களும் மஹாளய சிராத்தம் செய்வர். பெரும் உத்சவ காலம் அது’ என்று சுருதிப் புத்திரரை அநுக்கிரகிக்கின்றனர். அதனால்தான் மஹா ஆலயம் உத்சவ ஆனந்தத்துக்கு இருப்பிடம் என்ற பெயர் தோன்றிற்றோ? அந்தத் தினங்களில் ஒரு நாளாவது மஹாளய சிராத்தம் செய்யாவிடில் ஏமாற்றமடைந்து துக்கத்துடன், “உனக்குச் சிராத்தம் செய்யப் புத்திரனில்லாமல் போகட்டும். மண்ணுலகிலும் உள்ள உணவு கிடைக்காது” என்று சபித்துச் செல்வார்கள். பித்ரு சாபத்துக்கு ஆளாகாமலிருப்போம்.
प्रेतपक्षं प्रतीक्षन्ते गुरुवाञ्छासमन्विताः।
कन्यागते सवितरि पितरो यान्ति वै सुतान्॥
ततो वृश्चिकसम्प्राप्तौ निराशाः पितरो गताः।
पुनः स्वभवनं यान्ति शापं दत्वा सुदारुणम्॥ ------माधवीये।
பிச்சை எடுத்து வாழ்பவர்கூட ஒரு பிடி அன்னமாவது பித்ருக்களை நாடி அளிக்க வேண்டும் என்கின்றனர் மஹரிஷிகள். மஹாபரணி வ்யதீபாதம், மத்யமாஷ்டமி, த்ரயோதசி இந்த நாட்களிலாவது சிராத்தம் செய்தால் கயா சிராத்த பலன் உண்டாகும். லௌகிக முறையில் சிறிது வாசா உபகாரம் செய்தவருக்குக்கூட வந்தனச் சொல் வழங்குவது நாகரிகமென்று கருதுகிறோம். பெற்றெடுத்து வளர்த்து நம்மை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தவர்கள் உணவுக்கு நம்மை நாடி வரும்பொழுது பதினாறு நாட்களிலும் எள்ளும் நீருமேனும் தராவிடில் அது த்ரோஹமல்லவா? பெற்றோர் திதியிலேனும் மஹாளயம் செய்வது அவர் பொருளுக்கு உரிமை பாராட்டுவோர் கடமையாகும்.
“பக்ஷ மஹாளயம் செய். சக்தி இல்லாவிடில் பஞ்சமியிலிருந்து தர்சம் வரையில், அல்லது அஷ்டமியிலிருந்து தர்சம் வரையில் அல்லது தசமி முதல் தர்சம் வரையிலாவது மஹாளயம் செய்” என்று தர்ம நூல் சக்தியில்லாதவருக்குச் சலுகை காட்டுகிறது. விதிப்படி அன்ன சிராத்தம் செய்க. அதற்குச் சக்தியில்லாதவர் ஹிரண்ய சிராத்தமேனும் செய்யட்டும். அதற்கும் பொருளில்லாதவர், ஸர்வஸுலபமான திலஜலமளித்துப் பித்ருக்கள் அருளால் ஸம்பத்தைப் பெறலாம்.

16 நாள் ஆண்டுக்கு ஒரு முறை பித்ருபூஜை நடத்தினர் முன்னோர். மஹாளயம் செய்யாவிடில் பிரத்யவாயம்; செய்தால் ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு வகையான பலன் உண்டு என்கிறார் ஆபஸ்தம்பர். முக்கியமாக பித்ருசாபத்தால்தான் புத்திரபாக்கியம் இல்லாமற் போகிறது.
पुत्रानयुस्तथारोग्यं ऐश्वर्यमतुलं तथा।
प्राप्नोति पञ्चमे दत्तश्राद्धं कामांस्तथापरान्॥
பஞ்சமே என்பது ஆஷாட்யாதி பஞ்சமாபரபக்ஷம் என்பதாம். இது ஜாபாலியின் உபதேசம். துரீயாச்ரமிகளுக்குத் துவாதசியிலும், அஸ்த்ர சஸ்திரங்களால் இறந்தோருக்குச் சதுர்த்தசியிலும் செய்ய வேண்டும். பக்ஷ மஹாளயம் செய்வோர் அமாவாஸ்யையில் இரண்டு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும். பித்ருக்களை நாடி ஒரே நாளில் இரண்டு சிராத்தம் செய்யக்கூடாது. ஆயினும் தர்சத்தில் பித்ரு மாதாமஹ வர்க்கம் இரண்டுக்கே தர்ப்பணம். மஹாளலயத்திலோ காருண்ய பித்ருக்களுக்கும் தர்ப்பணாதிகள் உண்டு.

காருண்ய பித்ருக்கள் யார்?
சிறிய தந்தை, பெரிய தந்தை, தமையன், தம்பி, தன் புத்திரர்கள், அத்தை, அம்மான், பெரிய தாயார், சிறிய தாயார், சகோதரிகள் அவர்களது புத்திரர்கள், மனைவி, மாமனார், மாமியார், நாட்டுப்பெண், மைத்துனன், குரு, யஜமானன், நண்பர்கள் ஆகியவர்களுக்கு மஹாளயத்தில் தர்ப்பணாதிகள் செய்ய வேண்டும்.
நமது ஆயுளில் ஒரு முறையாவது மஹாளய அன்னச்ராத்தம் செய்ய வேண்டாமா?

அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

Tuesday, September 27, 2016

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்.

வணக்கம்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்.
இருபத்தேழு நட்சத்திரங்களில் இரண்டாவது இடத்தைப் பெறுவது பரணி நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இவர் உடலில் தலை, மூளை மற்றும் கண் பகுதிகளை ஆளுமை செய்கிறார். 
பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் என்பதால் மற்றவர்களை கவரக் கூடிய உடலமைப்பும், பேச்சாற்றலும் இருக்கும். தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தான தர்மங்கள் செய்வது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். அழகாக உடை உடுத்துவது, அணிகலன்களை அணிந்து கொள்வது மற்றவர்களின் பார்வை எப்பொழுதும் தான் மீது படும்படி நடந்து கொள்வது போன்றவற்றில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். நடனம், பாட்டு, இசை இவற்றிலும் அதிக ஈடுபாடு இருக்கும். எதிலும் சிந்தித்து செயல் படும் ஆற்றல் கொண்டவர் என்பதால் ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறக்க கூடிய இயல்பு கொண்டவர். பிறர் அதிக கோபத்துடன் பேசினால் அந்த இடத்தில் அடங்கு போனாலும் சமயம் வரும் போது சரியாக காலை வாரி விடுவீர்கள். சாதுவாக joஇருந்தாலும் சாமர்த்திய சாலியாகவும் இருப்பீர்கள். புத்தக புழுவாக இல்லாமல் சிந்தித்து செயல்படும் ஆற்றல் அதிகமுண்டு.
    பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்கள் என்ற சொல்லிற் கேற்ப அரசனை போன்ற சுகமான வாழ்க்கை அமையும். காதல் என்ற வார்த்தை இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. யாரையாவது அல்லது எதையாவது எப்பொழுதும் காதலித்துக் கொண்டே தான் இருப்பார்கள். மனைவி பிள்ளைகளையும், தாய் தந்தையையும் கண்ணை இமை காப்பது போல காத்து கொண்டு இருப்பார்கள். அது போல உணவு விஷயத்திலும் எதையும் ரசித்து ருசித்து உண்பதுடன் சமைத்தவர்களை பாராட்டும் குணமும் உண்டு. இதனால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டு இருக்கும். சுக வாழ்வு, சொகுசு வாழ்விற்கும் பஞ்சம் இருக்காது.
    எந்த தொழில் உத்தியோகத்தில் இருந்தாலும் மற்றவர்கள். தங்களை பின்பற்றும் வகையில் வழி காட்டியாக இருப்பார்கள். பெரிய பெரிய பதவிகளை வகுக்க கூடிய ஆற்றல் பெற்றவராயினும் தனக்கு கீழ் உள்ளவர்களை அடிமை படுத்தாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள். சலுகைகளையும் வாரி வழங்குவார்கள். எழுந்து நிற்க முடியாத அளவிற்கு மூழ்கி கொண்டிருக்கும் நிறுவனங்களை கூட தங்களின் சுய முயற்சியால் முன்னேற்றமடைய செய்ய கூடிய அளவிற்கு ஆற்றல் இருக்கும்.  மனதில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கும் என்பதை புரிந்து கொண்டு, பணி என்று வந்து விட்டால் புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்டவர்கள்.
    பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிக காம வேட்கை இருக்கும் என்பதால் பால் வினை நோய்கள் தாக்கும். மர்ம உறுப்புகளில் பிரச்சனை உண்டாகும். சர்க்கரை நோய், கிட்னி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.
பரணி, பூரம், பூசம், பூராடம் அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திரகாரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது

அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

🏼 *நவக்கிரக* 🙏🏼 🕉 *பூர்வம ஜென்ம பாக்கிய* 🕉 *பரிஹார நிவர்த்தி ஸ்தலங்கள்*

🙏

     ஒன்பது நவக்கிரக                                        ஆலயங்களையும் ஒரே நாளில்தரிசனம் செய்ய காலநேர
அட்டவணையுடன் வழிதடங்கள்

ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில்  பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.

1, திங்களூர் (சந்திரன்)
தரிசனம் நேரம் :1மணி நேரம்
*காலை 6மணி*

ஒன்பது  நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி  கிளம்பலாம்.

2, ஆலங்குடி (குரு)
தரிசனம் நேரம்:1மணி நேரம்
காலை 7.30மணி

ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள்  சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு  8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்

காலை 8.30 மணிக்குள்  இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்

3, திருநாகேஸ்வரம் (ராகு)
தரிசனம் நேரம்:1மணி நேரம்
காலை 9.30

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி  பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க  ஒரு மணி நேரம் ஆகும். பின்னர்  கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு  புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

4, சூரியனார் கோவில் (சூரியன்)
தரிசனம் நேரம்:1மணி நேரம்
மதியம் 11.00மணி

நீங்கள்  11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

5, கஞ்சனூர் (சுக்கிரன்)
தரிசனம் நேரம்:1மணி நேரம்
மதியம் 12.15

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால்  மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே  12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்)
தரிசனம் நேரம் :1மணி நேரம்
மாலை 4மணி

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை  20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம்.  மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு   3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

7, திருவெண்காடு (புதன்)
தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்
மாலை 5.15மணி

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம்  மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.

8, கீழ்பெரும்பள்ளம் (கேது)
தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்
மாலை 6.15மணி

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம்.  ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்

9, திருநள்ளாறு (சனி)
தரிசனம் நேரம்:1மணி நேரம்
இரவு 8.00மணி
நவகிரஹ ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகமாக சென்றால்  8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பார்ன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம்  தரிசிக்கலாம்.

9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்
www.dialiyer.com
9962062021
தரிசிக்க.வசதி செய்து
நவக்கிரக
பூர்வம ஜென்ம பாக்கிய
*பரிஹார நிவர்த்தி ஸ்தலங்கள்*
===========================

     ஒன்பது நவக்கிரக                                       ஆலயங்களையும் ஒரே நாளில்
தரிசனம் செய்ய காலநேர
அட்டவணையுடன் வழிதடங்கள்

ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில்  பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.

1, திங்களூர் (சந்திரன்)
தரிசனம் நேரம் :1மணி நேரம்
காலை 6மணி

ஒன்பது  நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி  கிளம்பலாம்.

2, ஆலங்குடி (குரு)
தரிசனம் நேரம்:1மணி நேரம்*
காலை 7.30மணி

ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள்  சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு  8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்

காலை 8.30 மணிக்குள்  இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்

3, திருநாகேஸ்வரம் (ராகு)
தரிசனம் நேரம்:1மணி நேரம்
காலை 9.30

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி  பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க  ஒரு மணி நேரம் ஆகும். பின்னர்  கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு  புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

4, சூரியனார் கோவில் (சூரியன்)
தரிசனம் நேரம்:1மணி நேரம்
மதியம் 11.00மணி

நீங்கள்  11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

5, கஞ்சனூர் (சுக்கிரன்)
தரிசனம் நேரம்:1மணி நேரம்
மதியம் 12.15

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால்  மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே  12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்)
தரிசனம் நேரம் :1மணி நேரம்
மாலை 4மணி

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை  20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம்.  மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

7, திருவெண்காடு (புதன்) :
தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்
மாலை 5.15மணி

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம்  மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.

8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :
தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்
மாலை 6.15மணி

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம்.  ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்

9, திருநள்ளாறு (சனி)
தரிசனம் நேரம்:1மணி நேரம்
இரவு 8.00மணி
நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால்  8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம்  தரிசிக்கலாம்.

9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்

அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056