Friday, April 27, 2018

உள்ளத்தெளிவு

பார்ப்பா னகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்பாரு மின்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய வெறியும் அடங்கினால்

பார்ப்பான் பசுவைந்தும் பாலாய்ச் சொரியுமே

பார்ப்பான் அகத்தின் ஐந்து புலன்களாகிய உணர்தல், நுகர்தல், கேட்டல், சுவைத்தல், காணுதல் என்ற பசுக்களால் மனம் பயனில்லாமல் தறி கெட்டுத் கொண்டு திரிவதை உணர்ந்து
அந்தப் பசுக்களை முறையானபடி கட்டி மேய்த்தால் அந்தப் பசுக்கள் ஞானப்பால் சொரியுமே.....

Ambharish G
Savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056 (whats-app)
+91 9790111570

Saturday, April 21, 2018

மஹாபெரியவா அஷ்டோத்திரம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதீச்வர
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி மகாஸ்வாமிகள்
அஷ்டோத்தர சத நாமாவளி:

1. ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிச்வராய நம:
2. ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி குருப்யோ நம:
3. ஓம் ஸன்யாஸாச்ரம சிகராய நம:
4. காஷாய தண்ட தாரிணே நம:
5. ஓம் ஸர்வபீடாபஹாரிணே நம:
6. ஓம் ஸ்வாமிநாத குரவே நம:
7. ஓம் கருணாஸாகராய நம:
8. ஓம் ஜகதாகர்ஷண சக்திமதே நம:
9. ஓம் ஸர்வ சராசர ஹ்ருதயஸ்தாய நம:
10. ஓம் பக்த பரிபாலக ச்ரேஷ்டாய நம:
11. ஓம் தர்ம பரிபாலகாய நம:
12. ஓம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வத்யாசார்யாய நம:
13. ஓம் ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி பூஜிதாய நம:
14. ஓம் ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூபகாய நம:
15. ஓம் பக்த ஜன ப்ரியாய நம:
16. ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவைக்ய ஸ்வரூபாய நம:
17. ஓம் காஞ்சி க்ஷேத்ர வாஸாய நம:
18. ஓம் கைலாஸ சிகர வாஸாய நம:
19. ஓம் ஸ்வதர்ம பரிபோஷ காய நம:
20. ஓம் சாதுர் வர்ண்ய நம:
21. ஓம் லோக ரக்ஷித ஸங்கல்பாய நம:
22. ஓம் ப்ரஹ்ம நிஷ்டாபராய நம:
23. ஓம் ஸர்வ பாப ஹராய நம:
24. ஓம் தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நம:
25. ஓம் பக்தார்ப்பித தன ஸ்வீகர்த்ரே நம:
26. ஓம் ஸர்வோபநிஷத் ஸாரஞ்ஞாய நம:
27. ஓம் ஸர்வ சாஸ்த்ர கம்யாய நம:
28. ஓம் ஸர்வ லோக பிதாமஹாய நம:
29. ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம:
30. ஓம் ப்ரம்மண்ய போஷகாய நம:
31. ஓம் நானாவித புஷ்பார்ச்சித பதாய நம:
32. ஓம் ருத்ராக்ஷ கிரிட தாரிணே நம:
33. ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நம:
34. ஓம் ஸர்வக்ஞாய நம:
35. ஓம் ஸர்வ சராசர வ்யாபகாய நம:
36. ஓம் அநேக சிஷ்ய பரிபாலகாய நம:
37. ஓம் மனஸ்சாஞ்சல்ய நிவர்த்தகாய நம:
38. ஓம் அபய ஹஸ்தாய நம:
39. ஓம் பயாபஹாய நம:
40. ஓம் யக்ஞ புருஷாய நம:
41. ஓம் யக்ஞாநுஷ்டான ருசிப்ரதாய நம:
42. ஓம் யக்ஞ ஸம்பனாய நம:
43. ஓம் யக்ஞ ஸஹாயகாய நம:
44. ஓம் யக்ஞ பலதாய நம:
45. ஓம் யக்ஞ ப்ரியாய நம:
46. ஓம் உபமான ரஹிதாய நம:
47. ஓம் ஸ்படிக துள்ஸீருத்ராக்ஷஹார தாரிணே நம:
48. ஓம் சாதுர்வர்ண்ய ஸமத்ருஷ்டயே நம:
49. ஓம் ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய
நம:
50. ஓம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபாய நம:
51. ஓம் ஜாக்ர ஸ்வப்ன ஸுஷுப்த் யவஸ்தாதீதாய நம:
52. ஓம் கோடி ஸுர்யதுல்ய தேஜோமயசரீராய நம:
53. ஓம் ஸாதுஸங்க ஸம்ரக்ஷகாய நம:
54. ஓம் அச்வ கஜ கோ பூஜா நிர்வர்த்தகாய நம:
55. ஓம் குருபாதுக பூஜா துரந்தராய நம:
56. ஓம் கனகாபிக்ஷிக்தாய நம:
57. ஓம் ஸ்வர்ண பில்வதள பூஜிதாய நம:
58. ஓம் ஸர்வஜீவ மோக்ஷதாய நம:
59. ஓம் மூகவாக்தான நிபுணாய நம:
60. ஓம் நேத்ர தீக்ஷாதானாய நம:
61. ஓம் த்வாதசலிங்க ஸ்தாபகாய நம:
62. ஓம் கான ரஸஞ்ஞாய நம:
63. ஓம் ப்ரஹ்ம ஞானோபதேசகாய நம:
64. ஓம் ஸகலகலா ஸித்திதாய நம:
65. ஓம் சாதுவர்ண்ய பூஜிதாய நம:
66. ஓம் அநேகபாஷா ஸ்ம்பாஷண கோவிதாய நம:
67. ஓம் அஷ்டஸித்திப்ரதாயகாய நம:
68. ஓம் ஸ்ரீ சாரதாமட ஸுஸ்திதாய நம:
69. ஓம் நித்தியான்னதான ஸுப்ரீதாய நம:
70. ஓம் ப்ரார்த்தனாமாத்ர ஸுலபாய
71. ஓம் பாதயாத்ரா ப்ரியாய நம:
72. ஓம் நானாவிதமத பண்டிதாய நம:
73. ஓம் சுருதி ஸ்ம்ருதி புராணஞ்ஞாய நம:
74. ஓம் தேவ யக்ஷ கின்னர கிம்புருஷ பூஜ்யாய நம:
75. ஓம் ச்ரவணான்ந்தகர கீர்த்தயே நம:
76. ஓம் தர்சனான்ந்தாய நம:
77. ஓம் அத்வைதான்ந்த பரிதாய நம:
78. ஓம் அவ்யாஜ கருணாமூர்த்தயே நம:
79. ஓம் சைவ்வைஷ்ணவாதி மான்யாய நம:
80. ஓம் சங்க ராசார்யாய நம:
81. ஓம் தண்ட கமண்டலு ஹஸ்தாய நம:
82. ஓம் வீணாம்ருதங்காதி ஸகலவாத்யநாத ஸ்வரூபாய நம:
83. ஓம் ராமகதா ரஸிகாய நம:
84. ஓம் வேத வேதாங்க ஆகமாதி ஸகலகலா ஸதஸ்
ப்ரவர்த்தகாய நம:
85. ஓம் ஹ்ருதய குஹாசயாய நம:
86. ஓம் சதருத்ரீய வர்ணித ஸ்வரூபாய நம:
87. ஓம் கேதாரேச்வர நாதாய நம:
88. ஓம் அவித்யா நாசகாய நம:
89. ஓம் நிஷ்காம கர்மோபதேசகாய நம:
90. ஓம் லகுபக்திமார்க்கோபதேசகாய நம:
91. ஓம் லிங்கஸ்வரூபாய நம:
92. ஓம் ஸாலக்ராம ஸூக்ஷ்மஸ்வரூபாய நம:
93. ஓம் காலட்யாம் சங்கரகீர்த்திஸ்தம்ப நிர்மாண கர்த்ரே நம:
94. ஓம் ஜிதேந்த்ரியாய நம:
95. ஓம் சரணாகத வத்ஸலாய நம:
96. ஓம் ஸ்ரீ சைலசிகரவாஸாய நம:
97. ஓம் டம்ருகநாத விநோதாய நம:
98. ஓம் வ்ருஷபாருடாய நம:
99. ஓம் துர்மதநாசகாய நம:
100. ஓம் ஆபிசாரிகதோஷ ஹர்த்ரே நம:
101. ஓம் மிதாஹாராய நம:
102. ஓம் ம்ருத்யுவிமோசன சக்தாய நம:
103. ஓம் ஸ்ரீசக்ரார்ச்சன தத்பராய நம:
104. ஓம் தாஸாநுக்ஹ க்ருதே நம:
105. ஓம் அனுராதா நக்ஷத்ர ஜாதாய நம:
106. ஓம் ஸர்வலோக க்யா தசீலாய நம:
107. ஓம் வேங்கடேச்வர சரணபத்மஷட்பதாய நம:
108. ஓம் ஸ்ரீத்ரிபுரசுந்தரி ஸ்மேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வர
பூஜாப்ரியாய நம:

மஹாஸ்வாமி பாத அஷ்டோத்தர சதநாமாவாளி ஸம்பூர்ணம்
உங்கள் இல்லங்களில் நடக்கும்விஷேசங்களில் பரிசுப்பொருட்கள் தருவதைப்போல் இதையும் பிரசுரித்துக்கொடுத்தால்
அனைவரும்படித்து பயன் பெறுவர்
                            

Ambharish G
Savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056 (whats-app)
+91 9790111570

பஸ்மதாரணம்

திருக்கணஞ்சோி கிராமம்
திருவள்ளூா்....

விபூதியை நெற்றியில்  அணியும் போது செய்யக்கூடாதது என்ன? என்ன?

1.புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது

2.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது

3.ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ தரிக்கவோ கூடாது

4.சண்டாளர் ,பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும் பூச கூடாது

5.விபூதி அணியாதவர் முகம் சுடுகாட்டிற்கு சமம்

6.ஒரு கையால் வாங்கிய விபூதியும் தீட்சை பெறாதவர் தந்த விபூதியும் பூசலாகாது

7.சுவாமியை பார்த்துக்கொண்டும் திருநீறு கொடுத்த ஆசாரியாரை பார்த்துக்கொண்டும் அக்கினியை பார்த்துக்கொண்டும் ஆற்றைப் பார்த்துக்கொண்டும் பூசக்கூடாது .திரும்பி எதிர் திசையில் பார்த்து பூசவேண்டும்

8.தீட்சை பெற்றவரும் சந்தியா காலம் தவிர மற்ற காலங்களில் உத்தூலனமாகவே பூச வேண்டும்

9. வலது கை பூசும்போது இடது கை இடுப்புக்கு கீழ் தொங்ககூடாது

10.விபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து எடுக்க கூடாது

11.விலைக்கு வாங்கிய விபூதியை பூச கூடாது

12.விபூதியை கீழே சிந்தக்கூடாது

13.கொடுப்பவர் கீழாகவும் வாங்குபவர் மேலாகவும் நின்று வாங்ககூடாது

14.திண்ணை ஆசனம் பலகை குதிரை சிவிகை இவற்றின் மீது அமர்ந்து வாங்ககூடாது

15.ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது

16.ஆலயங்களில் வாங்கிய திருநீற்றை தூண்களிலும் சிற்பங்களிலும் போட்டுவிட்டு வருவது ஆலயம் செல்லாததை விட கொடிய பாவசெயல்

Ambharish G
Savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056 (whats-app)
+91 9790111570

Wednesday, April 18, 2018

பலி பீடம்

*பலி பீடத்தை தொட்டு வணங்கினால் தோஷம் பிடிக்கும்!*

எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும்.

பொதுவாக பலி பீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை மலர் வடிவம் போன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த பீடங்களில் சிற்பங்கள் இருக்கும். சில ஆலயங்களில் வெறும் பீடம் மட்டும் இருக்கும்.

திருப்பதி போன்ற ஆலயங்களில் பலி பீடத்துக்கும் தங்க கவசம் போர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் கருவறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலி பீடத்துக்கும் கொடுக்கப்படுவதை அறியலாம்.

சரி.... பலி பீடம் என்றால் என்ன?

பலி பீடம் என்றதும் 90 சதவீதம் பேர் மனதில் கோழி, ஆடு போன்றவைகளை பலி கொடுக்கும் இடமா என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் வேத காலத்தில் நம் முன்னோர்கள் வேள்வித்தூணாகவும், விலங்குகளை பலியிடும் மேடையாகவும் இருந்தவை தான் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக உருமாறி இன்று கொடி மரமாகவும், பலி பீடமாகவும் வடிவெடுத்துள்ளன என்று சொல்கிறார்கள். எனவே தான் பலி கொடுக்கும் இடம் பலி பீடம் என்ற எண்ணம் பலரது மனதிலும் பதிந்துள்ளது.

இதை உறுதிபடுத்துவது போல கிராமங்களில் இன்றும் கோவில் ஆண்டு திருவிழாக்களின் போது பலி பீட மேடையில் ஆடு, கோழிகளை பலி கொடுத்து விடுவதைப் பார்க்கலாம். இது தவறு.

ஆனால் ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ள சிவாலயங்களிலும், வைணவத் தலங்களிலும் உள்ள பலி பீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டு போற்றப்படுகின்றன.

அந்த ஆலயங்களில் பலி பீடங்களில் உயிர்கள் பலி கொடுக்கப்படுவது இல்லை. அதற்கு பதில் நம்மிடம் உள்ள மோசமான குணங்களை அங்கு பலியிடுகிறார்கள்.

அதெப்படி குணத்தை பலியிடுவது என்று நினைக்கிறீர்களா? மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கெட்ட குணங்கள் நீக்க முடியாததாக இருக்கலாம்.

இப்படி கெட்ட குணத்துடன் கருவறை பகுதிக்கு நாம் சென்றால் கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்? நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார்.

எதுவும் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால்தான் கடவுள் பக்கம் செல்ல முடியும்.

எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது நாம் நல்ல மனிதனாக மாறி விடுவாம்.

இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம். உயிர்ப்பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடமானது உயரியமானது. இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன.

பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும்.

பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன.

பலி பீடத்தை பொதுவாக பத்ரலிங்கம் என்று அழைப்பார்கள். பலி பீடம் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவமலம், பலி பீடத்தில்தான் ஒதுங்கியிருக்கும்.

எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். ‘‘நான்’’ என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும்.

சிலர் எல்லாமே நம் ஒருவரால்தான் நடக்கிறது என்ற இறுமாப்புடன் இருப்பார்கள். அந்த இறுமாப்பை பலிபீடம் அருகில் நின்று பலியிட வேண்டும். பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். அந்த வழிபாடு எப்படி இருத்தல் வேண்டும் தெரியுமா? ஆலயத்தின் கருவறை வடக்கு, மேற்கு திசையை பார்த்தப்படி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறை கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும்.

மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும் போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது.

அதுபோல பலிபீட வழிபாட்டை ஒரு தடவை, இரண்டு தடவை மட்டும் செய்து விட்டு நிறுத்தி விடக் கூடாது. 3, 5, 7, 9, 12 என்ற எண்ணிக்கையில் வணங்க வேண்டும். அந்த சமயத்தில் நம்மிடம் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் 6 கெட்ட குணங்களை பலியிடுவதாக எண்ண வேண்டும்.

பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும், ஆசீர்வதிக்கும். பலி பீடத்தை பலி நாதர் என்றும் சொல்வார்கள்.

பலி பீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு - இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடமாக கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு என்று வேண்டுவதற்கு சமமாகும்.

பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக் பாலகர்களை உணர்த்துகிறது.

(திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது 8 திசைகளிலும் இந்த பெயர்களில் அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளன) இந்த எட்டு திக் பாலகர்கள் ஆலய பரிவார தேவதைகள் ஆவார்கள். எனவே இவர்களுக்கு அன்னம், தீர்த்தம் இடுதல் போன்றவைகளுக்கு பலி பீடங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த 8 பலி பீடங்களும் ஒவ்வொரு கோவிலின் ஆகம விதிகளுக்கு ஏற்ப கோவில் பிரகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு தலைமை பலி பீடமாக நந்தி பின்புறம் உள்ள பலி பீடம் அமையும். பொதுவாக தலைமை பலி பீடம், மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.

சில கோவில்களில் பலி பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதையே இது காட்டுகிறது.

சக்தி தலங்களில் தலைமை பலி பீடம் தவிர பிராம்மி, மகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களை உணர்த்தும் பலி பீடங்களும் அமைத்திருப்பார்கள்.

அந்த பலி பீடங்களையும் மறக்காமல் வழிபட வேண்டும். பலி பீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால்... நம்மிடம் உள்ள தேவையற்ற காமம் போய் விடும். ஆசை போய் விடும். கோபம் போய் விடும். தீராத பற்று போய் விடும். நெறி பிறழாத தன்மை உண்டாகும். பேராசை வரவே வராது. உயர்வு - தாழ்வு மனப்பான்மை விலகும். வஞ்சகக் குணம் வரவே வராது.

ஆக பலி பீடம் மனிதனை... மனிதனாக மாற்றுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே பலி பீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்கு கொண்டு வாருங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும்.

கோவிலில் கோபுர வாசலுக்கும் கொடி மரத்திற்கும் இடையில் உள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர்.

இதை பலி போடுதல் என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம் மீது பட்டு விட்டாலே ஒருமுறை குளிக்க வேண்டும் என்று ஆகமங்கள் சொல்கின்

Ambharish G
Savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056 (whats-app)
+91 9790111570

முயற்சியின் வினை


க்வசித் ப்ருத்வீசய்ய: க்வசிதபி பர்யங்க ஸயக:
க்வசித் சாகாஹார: க்வசிதபிச ஸால்யோ தன ருசி: I
க்வசித் கந்தாதாரீ க்வசிதபிச திவ்யாம்பரதர:
மநஸ்வீ கார்யார்த்தி ந கணயதி துக்கம் ந ச சுகம் II

கார்யார்த்தி : கார்யசித்தி பெற விரும்பும் (ஒரு காரியத்தில் வெற்றி பெற விரும்பும்)
மநஸ்வீ : தீரனான ஒரு மனிதன்
துக்கம் : துக்கத்தையோ
சுகம் : சுகத்தையோ
ந கணயதி : பாராட்ட மாட்டான்
க்வசித் ப்ருத்வீசய்ய: : சில சந்தர்ப்பங்களில் வெறும் பூமியில் படுப்பான்
க்வசிதபி பர்யங்க ஸயக: : வேறு சந்தர்ப்பத்தில் உயர்ந்த கட்டிலிலும் படுப்பான்
க்வசித் சாகாஹார: : ஒரு சமயம் வெறும் காய் கிழங்குகளையே புசிப்பான்
க்வசித் ஸால்யோ தன ருசி: : இன்னொரு சமயம் உயர்ந்த சம்பா அரிசி சாதத்தைப் புசிப்பதில் ருசி கொள்வான்
க்வசித் கந்தாதாரீ : ஒரு சமயம் கந்தை ஆடையை அணிவான்
க்வசிதபிச திவ்யாம்பரதர: : இன்னொரு சமயமோ திவ்யமான ஆடையை அணிவான்

ஆக வெற்றியை விரும்பும் ஒரு மனிதன் சுக துக்கங்களைப் பொருட்படுத்தமாட்டான். இப்படி வெற்றி பெற இலக்கணம் வகுக்கிறார் பர்த்ருஹரி.

Ambharish G
Savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056 (whats-app)
+91 9790111570

பெரியவா பெருமை

தேனம்பாக்கம் ஶிவாஸ்தானத்தில் ஒருநாள் காலை ஒரே பதைபதைப்பு, பரபரப்பு! 

பெரியவா படுத்துக் கொள்ளும் இடத்துக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த பாரிஷதர்கள், உறக்கம் கலைந்து பார்க்கும்போது பெரியவாளை காணோம்!

சுற்றுப்புறம் எல்லாம் சல்லடை போட்டும்  பெரியவாளை கண்டுபிடிக்க முடியவில்லை.

முடிவாக, அங்கு ஓடிய சிற்றாரின் கரையில், சற்று தள்ளி, ஏதோ காவி வஸ்த்ரம் தரையில் கிடந்த மாதிரி இருக்கவே, அருகே சென்று பார்க்கலாம் என்றால், காலை வைக்கவே முடியாத அளவு எக்கச்சக்க முட்கள்!

என்ன கொடூரம்!………

முட்புதர்கள் மண்டி கிடக்கும் ஓரிடத்தில், பெரியவா சுருண்டு கிடக்கிறார்!

“அவராக இந்த முள்ளுப்படுக்கையை உவந்தாரா….அல்லது…..?”

எண்ணாததெல்லாம் எண்ணியது அடியார் குழாம்.!

அவர்கள் அருகே நெருங்க, நெருங்க…பளிச்சென எழுந்து உட்கார்ந்தார். திருமேனியில் அடையாக அப்பினார்ப்போல் முட்களைப்  பூண்டிருந்த கோலம், அனைவர் மனஸிலும் தைத்தது.!

வயது முதிர்ந்த பக்தரொருவர்…

“ஐயோ, பெரியவா! இதென்ன ஸோதனை?”

அலறுகிறார்….

“இந்த நாள்ல…. ஜன ஸமூஹத்தை வஶீகரிச்சு பிடிச்சிண்டிருக்கிறதா, கை நெறைய்ய ஸம்பாதிக்கறதுக்கு… தினுஸு தினுஸா படிப்புகள் இருக்கு.....

.....அப்டி இருக்கறச்ச, என் வார்த்தையையும் மதிச்சு, [நெகிழ்ந்த குரலில்] என்னை நம்பிண்டு…. செல தாயார், தகப்பனார்கள்.... தங்களோட கொழந்தேள…. வருமானம், ஹானர், ஃபாஷன்-னு… எதையுமே கவனிக்காம, வேத பாடஶாலைகளுக்கு அனுப்பிண்டிருக்கா!.....

......அந்த கொழந்தேளும், பாவம்…. ஊர் ஒலகத்துல… ஒடனொத்த கொழந்தேள்ளாம் தெனம் ஒரு dress, வேளைக்கு ஒரு ஹோட்டல்….ன்னு இருக்கறப்போ, ஒரு மூணரை மொழ ஸோமனை [வேஷ்டி] சுத்திக்கிண்டு, போடற உண்டக் கட்டியை தின்னுண்டு, வெளில தலையக் காட்டினாலே “சிண்டு டோய்!”ன்னு பரியாஸத்தை [பரிஹாஸம்-கேலி] வாங்கி கட்டிண்டு, தொண்டைத்தண்ணி வத்த சந்தை சொல்லிண்டிருக்குகள்..”..

மேலே எதுவும் பேசும் முன் உள்ளிருந்த வேதனையை அடக்கி, மௌனித்தார்.

பிறகு, ஏதோ ஓரிடத்தில் மடத்தின் ஆதரவில் நடக்கும் பாடஶாலையை குறிப்பிட்டு சொன்னார்………

“அங்க கொழந்தேள் என்னமோ விஷமம் பண்ணிடுத்துகள்…ங்கறதுக்காக, அங்க இருக்கற ஸமையல்கார அம்மா… புது தொடைப்பத்தால கொழந்தேள  அடிச்சுட்டாளாம்….!!”

[மெளனம்….]….

….வேதம் படிக்கிற அந்த கொழந்தேளுக்கு எப்டி வலிச்சிருக்குன்னு கொஞ்சம் தெரிஞ்சிக்கறதுக்காகத்தான்………”

சுற்றியிருந்தோர் ஆடி போய் விட்டனர்! 

எப்பேர்ப்பட்ட பிடிப்பு வேதம் படிக்கும் குழந்தைகளிடம்! 

அவர் அருகில் நடக்கமுடியாதபடி பயங்கர முட்கள்.! எப்படி நடந்து போனார்! எப்படி இத்தனை நேரம் அதன் மேல் படுத்துகொண்டிருந்தார்!

ஏஸுநாதர் மற்றவர்களுக்காக முள்க்ரீடத்தை தாங்கினார் என்றால்…. இங்கே பெரியவா… வேதம் படிக்கும் குழந்தைகளுக்காக முள் படுக்கையையே உவந்து ஏற்றார்!

மஹாபுருஷர்கள் எந்தக் காலத்திலும் லோக நன்மைக்காக எந்தக் கஷ்டத்தையும் தாங்களே மனமுவந்து தாங்கிக் கொள்வார்கள்!

“பெரியவா…. க்ஷமிக்கணும்! அந்த ஸமையல்கார அம்மா ஸார்பா…. நாங்க எல்லாரும் மன்னிப்பு கேக்கறோம்.. இப்டி தன்னத்தானே பெரியவா…. வருத்திக்காதீங்கோ!…”

“நீங்கள்ளாம் எங்கிட்ட மன்னிப்பு கேக்கறதுனால என்ன ஆகப்போறது? அந்த அம்மா, அந்த கொழந்தேளுக்கு ஸாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணி… மன்னிப்பு கேட்கணும்”

“கட்டாயமா... ஒடனே பெரியவா ஆக்ஞைப்படி பண்ணச் சொல்லி தகவல் அனுப்பறேன்…! பெரியவா எங்களை ஸோதிக்காம ஏந்து வரணும்…”

ஶ்ரீமடம் மானேஜர் கெஞ்சினார்…

உடனேயே, பெரியவா குறிப்பிட்ட  அந்த பாடஶாலைக்கு phone பண்ணினால், பெரியவா வேதனைப்பட்ட ஸம்பவம், முந்தின நாள்தான் நடந்திருக்கிறது என்று தெரியவந்தது.!

ஸர்வ வ்யாபி!

பெரியவா போட்ட உத்தரவை சொல்லி, அந்த ஸமையல்கார அம்மாவை, அங்கிருந்த அத்தனை குழந்தைகளுக்கும் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணச் செய்தனர்.

வேதம் படிக்கும் குழந்தைகளுக்கும், வேதம் படித்தவர்களுக்கும் நாம் பண்ணும் கைங்கர்யமும், அபவாதமும், கெடுதல்களும் பெரியவாளுக்கே, பகவானுக்கே  செய்வதுதான்! என்பதை நாம் உணர வேண்டும். அதன் பலனை நல்லதோ, கெட்டதோ நாம் மட்டும் இல்லை, நம்முடைய ஸந்ததிகளும் அனுபவிக்கும் என்பதை மறக்கவே கூடாது.

இன்றும் வேதாத்யாயிகளுக்கு,விவாஹத்திற்கு பெண் தராமல்,உரிய கௌரவம் தராமல், அவர்களுக்கான அநீதிகளை கண்டனம் செய்ய முன்வராமல் பல வகைகளில் அபவாதம் தொடர்கதை தான்

Ambharish G
Savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056 (whats-app)
+91 9790111570