Thursday, June 16, 2016

கேந்திராதிபத்தியம் ஒரு பார்வை


  
                                         கேந்திராதிபத்தியம் ஒரு பார்வை 



1)       ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் குரு  பத்தாமிடத்தில்  சுக்கிரன்
     நான்கில் சந்திரன் ஆகியோர் இருப்பின் அது கேந்திராதிபத்திய தோஷம்
     எனப்படும் .
2)      ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் புதன் பத்தாமிடத்தில்  சுக்ல சந்திரன்
மூன்றாமிடத்தில் குரு  ஆகியோர் இருப்பின் கேந்திராதிபத்திய தோஷம் எனப்படும் .


              இதன் பலன்கள்  யாதேனில்

இந்த ஸ்தானங்களில் உள்ள கிரகங்களின் திசைகள்  மற்றும் புக்திகளில்
தனக்கு என்று வாழவும் அனுபவிக்கவும் சேர்த்து வைத்த  பொருட்களையும்
சொத்துக்களையும் சுற்றத்தார் மற்றும் குடுபத்தினரையும் , உடனிருந்து அனுபவிக்கவிடாமல் செய்வதே கேந்திராதிபத்திய தோஷமாகும் .
ஆனால் மற்றவர்களுக்கென்று எந்தகாரியாத்தில் ஈடுபட்டாலும் அவை
உடனே கை கூடுகிறது .
இருக்கக்கூடிய தோஷங்களிலேயே மிகவும் கொடிய தோஷமாக இது உள்ளது .
இதற்க்கு தீர்வாக கேந்திரத்தில் உள்ள கிரஹங்களுக்கு பாப சம்பந்தம்
ஏற்ப்பட்டால் கேந்திராதிபத்தியம் வேலை செய்யாது என்று கூறுகின்றனர்
கல்வியிற் சிறந்த பெரியோர்கள் .ஆனாலும் அது தன குணத்தினை முழுவதுமாக காட்டியே தீருகிறது .
எனக்கு தெரிந்து நான் ஆராய்ச்சி செய்து பாரத்ததி  ௦௦ ஜாதகத்தில் ௯
ஜாதகங்கள் மிகச்சரியாக பலன்களை செய்துள்ளது .
எனக்கென்னவோ இதற்க்கு ஒரே தீர்வு சிவக்ஷேத்திரம் ஒன்றுதான்
என்று தோன்றுகிறது.
வேறுவழியில் இவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை .
ஆனால் சிவக்ஷேத்திரத்திக்கு சென்று மனமுருகி பிரார்த்திக்க அவன்
நிச்சயமாக அனுக்க்ரகிப்பான் .
இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.



Ambharish G
Savithaastro@gmail.com
+91 9443711056 (whats-app)
+91 9790111570



1 comment:

  1. அருமையான பதிவு சார்.


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete