தேனம்பாக்கம் ஶிவாஸ்தானத்தில் ஒருநாள் காலை ஒரே பதைபதைப்பு, பரபரப்பு!
பெரியவா படுத்துக் கொள்ளும் இடத்துக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த பாரிஷதர்கள், உறக்கம் கலைந்து பார்க்கும்போது பெரியவாளை காணோம்!
சுற்றுப்புறம் எல்லாம் சல்லடை போட்டும் பெரியவாளை கண்டுபிடிக்க முடியவில்லை.
முடிவாக, அங்கு ஓடிய சிற்றாரின் கரையில், சற்று தள்ளி, ஏதோ காவி வஸ்த்ரம் தரையில் கிடந்த மாதிரி இருக்கவே, அருகே சென்று பார்க்கலாம் என்றால், காலை வைக்கவே முடியாத அளவு எக்கச்சக்க முட்கள்!
என்ன கொடூரம்!………
முட்புதர்கள் மண்டி கிடக்கும் ஓரிடத்தில், பெரியவா சுருண்டு கிடக்கிறார்!
“அவராக இந்த முள்ளுப்படுக்கையை உவந்தாரா….அல்லது…..?”
எண்ணாததெல்லாம் எண்ணியது அடியார் குழாம்.!
அவர்கள் அருகே நெருங்க, நெருங்க…பளிச்சென எழுந்து உட்கார்ந்தார். திருமேனியில் அடையாக அப்பினார்ப்போல் முட்களைப் பூண்டிருந்த கோலம், அனைவர் மனஸிலும் தைத்தது.!
வயது முதிர்ந்த பக்தரொருவர்…
“ஐயோ, பெரியவா! இதென்ன ஸோதனை?”
அலறுகிறார்….
“இந்த நாள்ல…. ஜன ஸமூஹத்தை வஶீகரிச்சு பிடிச்சிண்டிருக்கிறதா, கை நெறைய்ய ஸம்பாதிக்கறதுக்கு… தினுஸு தினுஸா படிப்புகள் இருக்கு.....
.....அப்டி இருக்கறச்ச, என் வார்த்தையையும் மதிச்சு, [நெகிழ்ந்த குரலில்] என்னை நம்பிண்டு…. செல தாயார், தகப்பனார்கள்.... தங்களோட கொழந்தேள…. வருமானம், ஹானர், ஃபாஷன்-னு… எதையுமே கவனிக்காம, வேத பாடஶாலைகளுக்கு அனுப்பிண்டிருக்கா!.....
......அந்த கொழந்தேளும், பாவம்…. ஊர் ஒலகத்துல… ஒடனொத்த கொழந்தேள்ளாம் தெனம் ஒரு dress, வேளைக்கு ஒரு ஹோட்டல்….ன்னு இருக்கறப்போ, ஒரு மூணரை மொழ ஸோமனை [வேஷ்டி] சுத்திக்கிண்டு, போடற உண்டக் கட்டியை தின்னுண்டு, வெளில தலையக் காட்டினாலே “சிண்டு டோய்!”ன்னு பரியாஸத்தை [பரிஹாஸம்-கேலி] வாங்கி கட்டிண்டு, தொண்டைத்தண்ணி வத்த சந்தை சொல்லிண்டிருக்குகள்..”..
மேலே எதுவும் பேசும் முன் உள்ளிருந்த வேதனையை அடக்கி, மௌனித்தார்.
பிறகு, ஏதோ ஓரிடத்தில் மடத்தின் ஆதரவில் நடக்கும் பாடஶாலையை குறிப்பிட்டு சொன்னார்………
“அங்க கொழந்தேள் என்னமோ விஷமம் பண்ணிடுத்துகள்…ங்கறதுக்காக, அங்க இருக்கற ஸமையல்கார அம்மா… புது தொடைப்பத்தால கொழந்தேள அடிச்சுட்டாளாம்….!!”
[மெளனம்….]….
….வேதம் படிக்கிற அந்த கொழந்தேளுக்கு எப்டி வலிச்சிருக்குன்னு கொஞ்சம் தெரிஞ்சிக்கறதுக்காகத்தான்………”
சுற்றியிருந்தோர் ஆடி போய் விட்டனர்!
எப்பேர்ப்பட்ட பிடிப்பு வேதம் படிக்கும் குழந்தைகளிடம்!
அவர் அருகில் நடக்கமுடியாதபடி பயங்கர முட்கள்.! எப்படி நடந்து போனார்! எப்படி இத்தனை நேரம் அதன் மேல் படுத்துகொண்டிருந்தார்!
ஏஸுநாதர் மற்றவர்களுக்காக முள்க்ரீடத்தை தாங்கினார் என்றால்…. இங்கே பெரியவா… வேதம் படிக்கும் குழந்தைகளுக்காக முள் படுக்கையையே உவந்து ஏற்றார்!
மஹாபுருஷர்கள் எந்தக் காலத்திலும் லோக நன்மைக்காக எந்தக் கஷ்டத்தையும் தாங்களே மனமுவந்து தாங்கிக் கொள்வார்கள்!
“பெரியவா…. க்ஷமிக்கணும்! அந்த ஸமையல்கார அம்மா ஸார்பா…. நாங்க எல்லாரும் மன்னிப்பு கேக்கறோம்.. இப்டி தன்னத்தானே பெரியவா…. வருத்திக்காதீங்கோ!…”
“நீங்கள்ளாம் எங்கிட்ட மன்னிப்பு கேக்கறதுனால என்ன ஆகப்போறது? அந்த அம்மா, அந்த கொழந்தேளுக்கு ஸாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணி… மன்னிப்பு கேட்கணும்”
“கட்டாயமா... ஒடனே பெரியவா ஆக்ஞைப்படி பண்ணச் சொல்லி தகவல் அனுப்பறேன்…! பெரியவா எங்களை ஸோதிக்காம ஏந்து வரணும்…”
ஶ்ரீமடம் மானேஜர் கெஞ்சினார்…
உடனேயே, பெரியவா குறிப்பிட்ட அந்த பாடஶாலைக்கு phone பண்ணினால், பெரியவா வேதனைப்பட்ட ஸம்பவம், முந்தின நாள்தான் நடந்திருக்கிறது என்று தெரியவந்தது.!
ஸர்வ வ்யாபி!
பெரியவா போட்ட உத்தரவை சொல்லி, அந்த ஸமையல்கார அம்மாவை, அங்கிருந்த அத்தனை குழந்தைகளுக்கும் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணச் செய்தனர்.
வேதம் படிக்கும் குழந்தைகளுக்கும், வேதம் படித்தவர்களுக்கும் நாம் பண்ணும் கைங்கர்யமும், அபவாதமும், கெடுதல்களும் பெரியவாளுக்கே, பகவானுக்கே செய்வதுதான்! என்பதை நாம் உணர வேண்டும். அதன் பலனை நல்லதோ, கெட்டதோ நாம் மட்டும் இல்லை, நம்முடைய ஸந்ததிகளும் அனுபவிக்கும் என்பதை மறக்கவே கூடாது.
இன்றும் வேதாத்யாயிகளுக்கு,விவாஹத்திற்கு பெண் தராமல்,உரிய கௌரவம் தராமல், அவர்களுக்கான அநீதிகளை கண்டனம் செய்ய முன்வராமல் பல வகைகளில் அபவாதம் தொடர்கதை தான்
Ambharish G
Savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056 (whats-app)
+91 9790111570
No comments:
Post a Comment