Wednesday, March 26, 2025

குண்டலினிசக்தியைப்பற்றி அற்புதமான விளக்கம்


 குண்டலினி சக்தி நம்

முதுகுதண்டின் அடிப்பகுதியில்

குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்று

பார்த்தால் தனிமங்களே!! 

🌹🌹🌹அத்தனிமத்தின் பெயர்

வெண்பாஸ்பரஸ்.

இந்த வெண்பாஸ்பரஸ்

காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை கொண்டது. அதேபோல் நம் உடலில் உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு

கீழேயும் காற்று செல்வதில்லை.

இங்கே ஒரு சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை

வழியாக காற்றை மூலாதாரத்திற்கு

கொண்டு செல்லும் போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடு

வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல் மேலேஎழுகின்றது.

இதுவே யோகமுறையில்

குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம் உடலின் வெப்பத்தை உண்மையில்மூலத்தில் தான் கண்டறிய முடியும். அந்த

வெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே எழுகின்றது.

அடுத்து அந்த அனல் மேலே எழும்பி


🔥🔥சுவாதிஷ்தானத்தை அடைகின்றது. அங்கே

உள்ள தனிமத்தின் பெயர்

 🌹🌹கார்பன். மேலே

எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும் வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்ப

டுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே

குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது.

இதனால் அனல் மேலும் மேலே எழுந்து

🔥🔥மணிபூரகத்தை அடைகின்றது. அங்கே அது

வினைபுரியும்🌹🌹🌹 தனிமத்தின் பெயர்

ஹைட்ரஜன். இந்த தனிமத்தின் இயற்கை குணமே வெடிப்பதாகும். எனவே

வெப்பநிலை மேலும் அதிகரித்து  🔥🔥அனாகதத்தை

அடைகின்றது.அனாகதத்தில் உள்ள

தனிமத்தின் பெயர்🌹🌹 சுத்த ஆக்சிஜன். நாம் சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்த

ஆக்சிஜனாகும். சுத்த ஆக்சிஜன்

எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும்.

எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்து🔥🔥விசுத்தியை அடைகின்றது.🌹🌹 ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ள

தனிமத்தின் பெயராகும். இங்கேயும் வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும்

நிகழ்ந்து மேலேறுகின்றது.

அடுத்ததாக உள்ள

சக்கரத்தின் பெயர் 🔥🔥ஆக்கினை. அங்கே🌹🌹 சுத்த

நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது. மேலே

எழுப்பிய அனல் இத்துடன் வினைபுரிவதோடு நிற்கிறது என்றும்,🔥🔥அதை எழுப்பத்தான் குருவின் உதவி தேவைப்படுகின்றது என்றும்,

ஒரு குருவின்

பெருமைகளை வெறும் வார்த்தைகளால்

விவரிக்க முடியாது. அவருக்கு நிகர் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. அது உங்கள்

அனுபவத்திற்கு வரும்போது நன்கு விளங்கும் என்றும் கூறப்படுகிறது.

🔥🔥🔥"சிரம் முட்டும் பொழுதில் வரம் தட்டும் குருவே

தரம் பார்த்துன்னை பரம் ஆக்கிடு வான்"🌹🌹

🔥🔥ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல்

திறந்தலே வெற்றிட பூஜ்ஜிய

பரமநிலையாகும். பிரமநிலைக்கு மணிபூரக

சக்கரம் விழிப்படைதலே காரணம்.🔥 பக்தி

நிலைக்கு அனாகத சக்கரம் விழிப்படைதலும்,

🔥முக்தி நிலைக்கு சகஸ்ராரம்

விழிப்படைதலும்,

🔥யோக நிலைக்கு சுவாதிஷ்டானமும்,

🔥ஞானத்தேடலுக்கு மூலாதாரம்

விழிப்படைதலும் காரணமாகும்.

🌹🌹🌹நாதத்தின்

மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்கு

விசுத்தி விழிப்படைதலே காரணமாகும்.

மேலும் நாம் தியானத்தில் அமரும் போது

🔥🔥குண்டலினியானது புருவமத்தி அல்லது

சகஸ்ராரத்திலும், தூங்கும் போது விசுத்தியிலும் தங்கும். அந்த அமிர்தமும்

விசுத்தியை தாண்டி கீழிறங்காது. அதாவது

விசுத்திதான் உறைவிடம்(உறையும் இடம்).

குண்டலினி எழும்பியபின் முதலில் நரம்பு

முடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய்

விழிப்படையும். இதில் உடலில் மாறுபாடாக

அடையாளமாக காண்பது விந்தின் வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ் உள்ள

மூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து

வெம்மையானது நெருப்பாறாக மாறி வரிவரியாக தடம் இருக்கும்.மேலும் உடலில்

நிரந்தரமாக காணப்படும் அடையாளமாக

புருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ் விந்தின் வெம்மையால் ஒரு பிறைவடிவ "U " நாமத்தடம் விழும். இத்தடமானது இப்பூமியில்

உடல் விடும் வரை இருக்கும். கை விரலால்தடவி பார்த்து நெற்றியில் இந்நாமத்

தடத்தினையும், கபாலத்தில் வரிவரியாக நெருப்பாற்றின் தடத்தினையும் காணலாம்.

சகஸ்ராரத்திலிருந்து நெருப்பாற்று தடத்தின்

வழியாக அமிர்தமானது பிறை வடிவ நாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன்

வழி புருவமத்தி உட்வாசலான குதம் சென்று பின் அங்கிருந்தே உண்ணாக்கு வழி விசுத்தி

சென்று உறைவிடமாய் கொள்கிறது. மேலும்

பொன்னை உரசினாற் போல் மேனியுடைய தேமலானது உடலில் அதிகம் காணலாம்.

அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாக

உடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகிய

உடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும்

வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடு

கூடிய ஓர் பழ வாசனையை அறியலாம்.உடல் அடையாளமாக சாதாரணமாகவே

உழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும் மற்றும்

புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும்,மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானது

உறையும் இடமாதலால் தொண்டை மத்தியில்

ஏதோ ஒன்று கட்டியாக ஒரு சிறு

உருண்டையாக இருந்துகொண்டு எதையும்

நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு

உறுத்தல் ஏற்படும்.

குண்டலினி சக்தி என்பது உங்களுக்குள் இருக்கும் ‘வெளிப்படாத சக்தி’. அதாவது அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வரை,அப்படியொரு சக்தி உங்களுக்குள் இருப்பதைக்

கூட நீங்கள் அறியமாட்டீர்கள்.

ஆம், ‘அசையாத

வரை’ இல்லாதது போல் இருக்கும், ஆனால்

அது எழுச்சியுற்று, வெளிப்பட

ஆரம்பித்துவிட்டாலோ, இத்தனை சக்தியும்

உங்களுக்குள் தான் இருந்ததா என்று நீங்கள்

மலைத்துப் போவீர்கள்.

இக்காரணத்தினால்தான்

இந்த சக்தியை ‘சுருண்டு கிடக்கும் பாம்பாக’

குறித்தார்கள். சுருண்டு கிடக்கும் பாம்பு நகர

ஆரம்பிக்கும் வரை, யார் கண்ணிலும் படாது.

அதேபோல் தான் உங்களுள் அமிழ்ந்திருக்கும் இந்த சக்தி எழுச்சியுற்று நகரும் வரை, அதை நீங்கள் உணரமாட்டீர்கள்.இந்த சக்தி

எழுச்சியுறும் போது, நீங்கள் கற்பனையில்கூட நினைத்திடாத அதிசயங்கள் உங்களுக்குள் நடக்கத் துவங்கும். முற்றிலும் புதுவிதமான,

அபரிமிதமான சக்தியோட்டம் உங்களுக்குள் நிகழ, அனைத்துமே வேறு வகையில்

இயங்கும்.குண்டலினியை எளிமையாக விளக்க உங்கள்

வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் (plug point)

இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை உருவாக்குவதில்லை.

எங்கோ ஓரிடத்தில் ஒரு

பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம் இருக்கிறது, அதுதான் மின்சாரத்தை

உருவாக்குகிறது,ஆனால் அது உங்களுக்கு நேரடியாக மின்சாரத்தை வழங்க

முடியாது.இந்த பிளக் பாயிண்ட்தான்

உங்களுக்குமின்சாரத்தைக் கொடுக்க முடியும்.

பெரும்பாலானவர்கள் அந்த மின்நிலையத்தை

நினைத்துக்கூட பார்ப்பதில்லை, இல்லையா?

அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்று

தெரியாமல் இருந்தாலும், ஒரு

மின்சாதனத்தை

இந்த பிளக் பாயிண்டோடு இணைத்துவிட்டால்,

அந்த சாதனம் வேலை செய்யும் என்பது மட்டும் தெரிந்திருக்கிறது. இந்தக்

குண்டலினியும் ஒரு பிளக் பாயிண்ட் போலத்தான், அதுவே ஒரு மின்நிலையம்

அல்ல. இது 3 பின்களைக் (pin) கொண்ட பிளக்

பாயிண்ட் அல்ல. 5 பின்களைக் கொண்ட பிளக்

பாயிண்ட். இதை இப்படிப் பார்க்கலாம். உடலில்

இருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள்

கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் மூலாதார சக்கரம், அடிப்படை அல்லது ஆதாரமாக

இருக்கும் சக்கரம். இது ஒரு பிளக் பாயிண்டைப்

போலவும் அடுத்த 5 சக்கரங்கள் சேர்ந்து 5

பின்கள் கொண்ட ஒரு பிளக் போலவும்

இருக்கிறது.ஏழாவது சக்கரம் ஒரு பல்பைப்

(bulb) போன்றது. இப்போது பிளக்கை பிளக்

பாயிண்ட்டில் சொருகினால், உங்களைப்பற்றிய

அனைத்தும் ஒளிவிடுகின்றன. இப்போதுஉங்களைப் பற்றிய அனைத்தையும் படிக்க

முடியும். இப்படி உங்களுடைய பிளக் அதற்கான பிளக் பாயிண்டில் சரியாக

சொருகப்பட்டு விட்டால், பிறகு விளக்குகள் இருபத்தி நான்கு மணி நேரமும்பிரச்சனையின்றி தொடர்ந்து எரியும். பேட்டரி

தீர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டியஅவசியம் கிடையாது. எனவே, உங்களில், பிளக்

சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிரு

க்கும்போது, நீங்கள் எல்லையில்லாத

சக்தியின் மூலத்தோடு தொடர்பு

கொள்கிறீர்கள். அதுதான் குண்டலினி.யோகா செய்வதன் அடிப்படையேஅவர்களுக்குள் ஒரு சமநிலையை

ஏற்படுத்துவதுதான். அந்த சமநிலை வந்துவிட்டால், பிறகு ப்ளக்கை பிளக்பாயிண்டில் சரியாக சொருகி விடுவீர்கள்.

அப்படிச் சரியாக தொடர்பு கொள்ளும்போது,

எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்து

தொடர்பில் இருப்பீர்கள்.

சக்தி நிலை கூடுகிறது என்றால் உங்கள்

‘ஆழ்ந்து உணரும்’ ஆற்றலும் கூடுகிறது.

யோக விஞ்ஞானம் முழுவதுமே உங்களின் இந்த நுண்ணுணர்வை அதிகரிக்க

உருவாக்கப்பட்டவை தான். ஆன்மீக செயல்முறை என்றாலே உங்களின் உணரும்

திறனைஅதிகரிப்பதற்குத்தான்… ஏனெனில்உங்கள் அறிவின் சாரம், நீங்கள் அறிபவை

எல்லாம் நீங்கள் உணர்வதை சார்ந்தே இருக்கிறது.  

வளமுடன் வாழ்க . . .

🔥🔥🔥🔥

இந்த குண்டலினி யோகத்தை தக்க குருவின் துணையுடன் செய்வது நல்லது 

🔥🔥🔥

சரியான முறையில் செய்யவில்லை என்றால் மனநிலை பாதிப்பு ஏற்படும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த பயிற்சி செய்யும் போது உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியமான ஒன்று.

ambharish G 

Savithaastro@gmIl.com 

savithaastro.blogspot.com

9790111570


No comments:

Post a Comment