Wednesday, August 10, 2016

சில மந்திரங்களும் செயலாக்கும் காலமும்

ஸ்ரீ விஸ்வாமித்ர மகரிஷி  ஒரு காலத்தில் மிகுந்த வறுமையை அனுபவித்து வந்தார்  அதில் இருந்து விடுபடவும் ,மன்னர்களுக்கே பணத்தட்டுப்பாடு ஏற்பட்டால் செல்வம் அளிக்கும் அளவுக்கு நிறைந்த செல்வவளம் உள்ளவராக விளங்கவும் அவருக்கு உதவியது இந்த மந்திரப் பிரயோகமே .

மேலும் ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த மந்திரப் பிரயோகத்தை மிக உயர்வாகக்  குறிப்பிடுவதோடு தமது உடனுறை சீடர்கள் வளவாழ்வு வாழ இந்த மந்திரப் பிரயோகத்தைச் செய்யுமாறு வலியுறுத்தி இருக்கிறார்கள் .

பிரயோக முறை :-

1.ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து குளித்து முடித்துப் புத்தாடை அணிந்து மஞ்சள் நிறத்   துணி விரித்து அதில் சிறிது பன்னீர் தெளித்து அதன் மீது கிழக்கு  நோக்கி அமரவும்.

2.நெய் விளக்கேற்றி ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தைக் குங்குமம் மற்றும் பன்னீர் கலந்த நீரால் கழுவி,ஒரு பலகையின் மேல் வெள்ளைத்துணி விரித்து அதில் ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டின் மேல் அந்த யந்திரத்தை வைத்து யந்திரத்திற்கு அட்சதை,குங்குமம் ,பூக்களால் மூலமந்திரம் 108 தடவை ஜெபித்து அர்ச்சனை செய்யவும்.

3.வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பாயசம் படைக்கவும்.

4. பின்னர் வலது உள்ளங்கையில் சிறிது நீர் ஊற்றி ஸ்ரீ லக்ஷ்மி தேவியை மந்திரம் சித்தியாக வேண்டி மூன்று முறை மூலமந்திரம் ஜெபித்து அந்த நீரை அருந்தி துளசி மாலையால் மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.

தியான ஸ்லோகம் :-

ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம் |
த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம் |
பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம் |
தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம் ||

மூலமந்த்ரம் :-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி |
லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச |
மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா |

ஒரு மாதம் கழித்து பூஜைக்கு உபயோகித்த பொருள்களை ஆற்றில் விட்டு விடவும் .நாளுக்கு நாள் செல்வம் பெருகத் தொடங்கும்.


""ஓம் நமோ நாராயணாய"

சிவவாக்கியர் கூறும் மந்திரம்""ஓம் நமோ நாராயணாய"" எனும் எட்டெழுத்து மந்திரம், மனதில் நினைத்துக் கொண்டு நூறு உருப்போட்டால் பஞ்சமாபாதகங்கள் செய்திருந்தாலும் அவை பஞ்சுபோல் மறைந்து விடும்.

ஓம் நமோ நாராயணாய
ஓம் என்பது ஓரெழுத்தாகவும், நம என்பது இரண்டெழுத்தாகவும், நாராயணாய என்பது ஐந்தெழுத்தாகவும் ஆக மொத்தம் எட்டெழுத்தும் சேர்ந்து நாராயண அஷ்டாக்ஷரம் எனப்படும். இதைத் தொடர்ந்து கூறிவர நிறைந்த ஆயுள் கிடைக்கும். எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். தீமைகள், துன்பங்கள் தொடராது. முக வசீகரம் கிடைக்கும். எல்லாச் செல்வங்களும் கிட்டும். காலையில் இதை கூறுபவன் இரவில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். மாலையில் கூறுபவன் பகலில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். உச்சிப்பொழுதில் கூறுபவன் ஐந்துவித மகா பாதகங்கள், உப பாதகங்களிலிருந்து விடுபடுகிறான். எல்லா வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான்.

மேற்கூறிய அனைத்தும் நாராயண உபநிஷத்தில் உள்ளவை.

குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார்
படுதுயராயின வெல்லாம்
நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்
நலத்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.


 ஞாபக சக்தியை(memory power) கொடுக்கும் சரஸ்வதி மந்திரம் முடிந்தவரை தினமும் கூறுங்கள்." ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சரஸ்வதி தேவியை நமஹ" . தேர்வுக்கு படிக்கும் குழந்தைகள் இதை சொல்லிவிட்டு படித்தால் ஞாபக சக்தி அதிகமாகும். மற்றவர்களும் இதை சொல்லலாம். மறதி என்பது எல்லோருக்கும் பொதுவானது. சரஸ்வதியின் மூல மந்திரமான " ஐம்" மட்டும் கூட முடிந்தவரை சரஸ்வதியை நினைத்து சொல்லலாம்.

பெளர்ணமி தினத்தில் இரவு குளித்துவிட்டு,மொட்டை மாடியிலோ நதிக்கரையிலோ அல்லது மலை மீதோ அமர்ந்து , சந்திர ஒளியில் காயத்ரி மந்திரம் ,கனகதாரா ஸ்தோத்திரம்,சொல்லலாம் அல்லது நல்ல கருத்துக்கள் உடைய தெய்வீக துதிகள் படிக்கும்போது அதற்கு சக்தி அதிகம்....அந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பலன்கள் உங்களுக்கு பலிக்க ஆரம்பித்து நன்மைகள் வந்து சேரும்...கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இதை படிக்கலாம்....நீங்கள் எதிர்காலத்தில் என்னவெல்லாம் அடைய விரும்புகிறீர்களோ அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம்...உரத்து பேசக்கூடாது....உங்கள் கனவுகளை பலமுறை விவாதித்து பேசும்போது ஆழ்மனதில் பதியும் அது பிரபஞ்ச சக்தியால் கிரகைக்கப்பட்டு அது உங்களை வந்தடையும் விரும்பியதை கிடைக்கச்செய்யும்....பெளர்ணமி அன்று கந்த சக்தி பூமியில் அதிகம்..தேவதைகள் பூமிக்கு வருகை தரும் நாள்...அமைதியான சுத்தமான இடத்தில் நல்ல வார்த்தைகளை பேசும்போது அந்த தேவதைகள் உங்கள் உடன் அருகில்  இருந்து அப்படியே ஆகட்டும் என்பார்கள்...

மனிதர்களுடன் வசிக்கிறாள் ஆதி சக்தி
ஆதி சக்தி என்ற அண்டத்திற்குரிய சக்தி ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் அடங்கியுள்ளது. பிறந்தது முதலே இந்த ஆற்றலின் மூலம் மனிதனுக்குள் ஒளிந்திருக்கும். அதன் முழுமையான சக்தியை உணர்ந்திட அதனை செயல்படுத்த வேண்டும். தனிப்பட மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் இந்த சக்தியை விழிக்க செய்யும் பாதையை நோக்கி தான், யோகா, ஆன்மீகம் போன்றவைகள் பயணிக்கின்றன.

 

   

நம்முள் ஒளிந்திருக்கும் இந்த சக்தியை வெளிக்கொண்டுவர இந்த மந்திரத்தை கூற வேண்டும். அவை கீழ் வருமாறு:
ஆதி சக்தி, ஆதி சக்தி, ஆதி சக்தி, நமோ நமோ!
சரப் சக்தி, சரப் சக்தி, சரப் சக்தி, நமோ நமோ!
ப்ரிதும் பகவதி, ப்ரிதும் பகவதி, ப்ரிதும் பகவதி, நமோ நமோ!
குண்டலினி மாதா சக்தி, மாதா சக்தி, நமோ நமோ!
அர்த்தம்:
முக்கிய மூலாதாரமான சக்தியே, உனக்கு நான் தலை வணங்குகிறேன்!
அனைத்தையும் உள்ளடக்கும் சக்தியே, உனக்கு நான் தலை வணங்குகிறேன்!
படைக்கும் இறைவனே, உனக்கு நான் தலை வணங்குகிறேன்!
குண்டலினியின் ஆற்றல் திறன் சக்தியே, தாய்க்கு தாயான சக்தியே, உனக்கு நான் தலை வணங்குகிறேன்!
சக்தி நம்பிக்கை
சக்தியை வழிபடுபவர்கள் ஆதி சக்தியை தான் உச்ச உயர்வான கடவுளாக பார்க்கின்றனர். அண்டசராசரத்தில் வாழும் அனைத்தும் இந்த தெய்வீக சக்தியால் உருவானவை. தெய்வீகத்தின் ஆண்மையான சிவபெருமானுடன் சேர்ந்து இந்த சக்தியை வழிபடுகின்றனர். அதனால் சக்தியை நம்புகிறவர்கள், அண்டசராசரத்தை உருவாக்கிய பெண்ணாக சக்தியை பார்க்கின்றனர். அண்டசராசரத்தை அவள் வடிவத்தில் பார்க்கின்றனர். உலகத்தின் அடித்தளமே பெண் தான். உடலின் உண்மையான வடிவமும் அவளே.


அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

No comments:

Post a Comment