Monday, August 29, 2016

எண் கணிதம்

எண் கணிதம் பற்றிய சில தகவல்கள், 1,10,19,28,--சூரியனின் ஆசிகளை பெற்ற இவர்கள் . மிக வேகமாக கோபம் கொள்பவர்கள் .எந்த வேலை செய்தலும் அதை திருப்தியாக செய்வார்கள் .அதிக மனோ பலத்தை உடையவர்கள் . இவர்களில் பெரும்பான்மையோர் குடும்பத்தில் மிகுந்த பொறுப்புடன் இருப்பார்கள். அரசன் ,அரசாங்கம் ,மரம் ,மின்சாரம் போன்ற தொழில்கள் நல்ல உயர்வை தரும் ... இவர்கள் ரத்த கொதிப்பு நோய்களுக்கு வராமல் பாதுகாத்து கொள்ள வேண்டும் இவர்கள் உப்பு ,காரம் குறைத்து பழம்கள் நிறைய உண்ணவேண்டும் . இவர்களுடைய முயற்சி ஞாயறு மற்றும் சூரிய கோள்கள் உடைய நச்சதிரம் -கிருத்திகை ,உத்தரம்,உத்தராடம் அன்று மேன்மை தரும் ... 2,11,20,29...சந்திரனின் ஆசிகளை பெற்றவர்கள் .. கலை துறையில் சிறந்து விளங்கும் இவர்கள் தன்னுடைய குழப்பமான மன நிலையால் நல்ல சந்தர்பம்களை தவற விடுவார்கள் .... நீரில் ,மழையில் அதிகம் விளையாடுவதை குறைத்து கொள்ளவேண்டும் புகழை எளிமையாக இவர்கள் அடைவார்கள் , எதிலும் சந்தேகம் குழப்பம் வராமல் இருக்க இறைவழிபாட்டை செய்யவேண்டும் கடல் பொருட்கள் ,நீர் சம்பதம் பட்ட தொழில்கள் ,கப்பல் ,அயல் நாடு (கடல் உள்ள )செல்லுதல் இவர்களுக்கு மேன்மை தரும் ஆப்பிள் (சீத்தா பலம் )கீரை உணவுகள் இவர்களுக்கு மிக நன்மை தரும் இவர்களுடைய முயற்சி திங்கள் -அல்லது -சந்திரகோள்கள் உடைய நச்சதிரம்மான ஹஸ்தம் ,ரோகினி ,திருவோணம் அன்று மேன்மை தரும் ... 3,12,21,30 ----இவர்கள் குருவின் ஆசிகளை பெற்று வந்தவர்கள் .. மதம்,ஜாதி ,சமுகத்தில் உள்ள பழக்க வழக்கம் பற்றி நன்கு அறிந்தவர்கள் வைத்தியம் ,வேதம் ,சோதிடம் ,வாதம் ,தங்க உலோகம் ,படைக்கும் தொழில் போன்ற தொழில்கள் இவர்களுக்கு மேன்மை தரும் எத்தனை பெரிய மனித கூட்டதிலும் தனியாக தெரிவார்கள் தோல் நோய்கள் ,ஒவ்வாமை இவர்களுக்கு பெரிய தொல்லை .. இவைகளை கண்டு அறிந்து மருந்து எடுக்க வேண்டும் .. இவர்கள் வியாழன் கிழமை அல்லது குருவின் நச்சதிரம்மான புனர்பூசம் ,விசாகம் ,புரட்டாதி ,அன்று முயற்சி மேன்மை தரும் ... 4,13,22,31--ராகுவின் ஆசிகளை பெற்ற இவர்கள் .. ஆசாத்திய செயல்கள் செய்ய வல்லவர்கள் .தன்னுடைய குடும்பத்திற்கு நிறைய பொறுப்பான செயல்கள் செய்தாலும் ,குடும்பத்தால் நல்ல பெயர் வாங்க மாட்டார்கள் .. எந்த நோய்களுக்கும் எளிதில் வசபடமாட்டர்கள் ,தலை வலி மட்டும் வரும் ,, சிறு வயதில் வயிறு சம்பம்தம் பட்ட அவஸ்தைகள் ஏற்பட்டு விலகும் எண்ணெய் உணவுகளை இவர்கள் குறைக்க வேண்டும் இவர்கள் நம்பிகைக்கு உரியவர்கள் ,மிகவும் ரகசியமாக எதையும் செய்வார்கள் .. சிறுவயதில் இவர்களை சரியாக கவனிக்ககாமல் ,அக்கறை கொள்ளாமல் விடுவது , இவர்கள் தான் பல தீய வழிகளின் வழிய பணம் சம்பாதிபார்கள்.... பராக்கிரம நபர்கள் இவர்கள் அரசியல் ,அடியாள் பதவி ,மது ,களிப்பு , மனமகிழ் மன்றம் போன்ற துறைகளில் மேன்மை அடைவார்கள் .. சனிகிழமை அல்லது திருவாதிரை ,சுவாதி,சதயம் என்ற ராகுவின் நச்சதிரம்மான அன்று முயற்சி மேன்மை தரும் ... 5,14,23,--புதனின் ஆசிகளை பெற்ற இவர்கள் .. மிகுந்த புத்தி கூர்மை உடையவர்கள் .. நாளை காலை தான் பரீட்சை விடியலில் படிக்கலாம் என்று வேற வேலைகளை பார்பர் .. மின்னலை போன்று அறிவு வெளிச்சம் உடையவர்கள் இவர்கள் இவர்களின் உள் மனதை அறிந்து (உணர்த்தும் செயல்) ,சகுனம் பார்ப்பது போன்ற செயலால் சில நேரம் நன்மைகள் அடைய முடியும் .. ரசயான பொருட்கள் ,மற்றும் சில உலோகங்கள் ஒவ்வாமை இவர்களுக்கு தரும் அதை கண்டு அறிந்து தவீர்க்கவும் .. கணக்கு சரிபார்த்தல்,ஏற்றுமதி இறக்குமதி ,புலன் விசாரணை , சோதிடம் ,ஆராய்ச்சி,கண்டுபிடிப்பு ,விஞ்ஞானிகள் இந்த துறையில் மேன்மை வரும் ... புதன் கிழமை அல்லது ஆயில்யம் ,கேட்டை ,ரேவதி புதனின் நச்சதிரம்மான அன்று முயற்சி மேன்மை தரும் 6,15,24 --சுக்ரன் ஆசிகளை பெற்ற இவர்கள் இன்பம் அனுபவிக்க பிறந்தவர்கள் கைகால்கள் அளந்து வைத்து போல் இருப்பர் ,கண்கள் கவர்ச்சியாக இருக்கும்,சிலருக்கு ஒரு கண் மாறுபடும் ,இவர்களின் இதயம் பலம் கிடையாது .. இவர்கள் கசப்பை தவிர்க்க வேண்டும் , தினமும் ஒரு ஆப்பிள் உண்ணவேண்டும் கலை துறை ,துணிகள் ,கற்கள் ,வெள்ளி உலோகம் போன்ற துறைகள் மேன்மை தரும் . இவர்கள் எளிதில் காதல் வசபடுவர்கள் . கலை சங்கம் ,பெண்கள் கலை பொருட்கள் ,அலங்கார பொருட்கள் ,அழகுசாதன பொருட்கள் போன்றதுகள் இதில் மேன்படும் .. வெள்ளிகிழமை மற்றும் பரணி ,புரம் , பூராடம் சுக்ரனின் நச்சதிரம்மான அன்று முயற்சி மேன்மை தரும்.... 7,16,25 , பிரிந்த இவர்கள் கேது பகவானின் ஆசிகளை பெற்றவர் .... இவர்களின் உடலில் கைகள் சற்று நீளமாக இருக்கும் இவர்கள் எங்கு வீடு கட்டினாலும் ,குடி புகுந்தாலும் அங்கே விநாயகர் கோவில் ,அல்லது பொதுவான இடம் உண்டு (நூலகம் ,பள்ளி கூடம்,மக்கள் கூடும் இடம் ) இவர்கள் உடலில் மலக்குடலில் பலம் இருக்காது , நிறைய கீரைகள் உண்ணவேண்டும் .. தெய்வ பலத்தால் எதையும் சாதித்து கொள்ளும் இவர்கள் , சமுதாயத்தில் நடக்கும் எல்ல பொது காரியங்களிலும் ஈடுபடுவர் .. சமாதனம் முறையில் எதையும் முடித்து கொள்வர் .. தரகர் வேலை ,மக்கள் குறை கேட்கும் துறை ,சட்டத்தில் உரிமைகள் போன்ற துறைகளில் மேம்பட்டு இருப்பார்கள் .. செவ்வாய் கிழமை அல்லது கேதுவின் அஸ்வினி ,மகம் ,முலம் நச்சதிரம்மான அன்று முயற்சி மேன்மை தரும் 8,17,26---சனியின் ஆசிகளை பெற்ற இவர்கள் மிகுந்த சோம்பலை உடையவர்கள் ,ஜீரன குடல் ,மல குடல் மிகவும் பலம் இல்லா மேல் இருக்கும் . பித்தம் அதிகமாக இருக்கும் இவர்கள் அடிகடி பழம்கள் ,கீரைகள் , தானியும்கள் உண்ணவேண்டும் இவர்களில் சிலருக்கு ஒரு கால் குட்டையாக இருக்கும் .. அதிதமான மண வலிமை படைத்த இவர்கள் நீதி ,நேர்மை என்று இருப்பார்கள் .. பண்பாடு ,கலாச்சாரம் ,மதம் ,பழைய சடங்குமுறைகளை பின்பற்று வார்கள் மிக முக்கிய சட்டம் ,தண்டனை ,அரசாங்கத்தில் எழதபடும் பிளான் இவர்களால் மட்டும் முடியும் எந்த சுப நிகழ்ச்சி நடந்தாலும் அதில் கலக்காமல் தனியே இருந்து மகிழ்வார்கள் ... சுடுகாடு ,கழிவுகள் இடம் ,நீர் ,கதை எழுதுவது ,யுக்திகள் சொல்லி தருவது போன்றவற்றுள் மென்மையும் வருமானம் இருக்கும் ... சனி கிழமை அல்லது பூசம் ,அனுஷம் ,உத்ரட்டாதி சனியின் நச்சதிரம்மான அன்று முயற்சி மேன்மை தரும்.... 9,18,27, --- செவ்வியின் ஆசிகளை பெற்றவர் ... அதிக கோபம் ,வேகம் ,வைராக்கியம் கொள்ளும் இவர்கள் மனத்தால் மென்மையானவர்கள் .. ரத்த அழுத்தம் ,முல நோய் வர வாய்ப்பு உண்டு , இவர்கள் உடலில் நிறைய தழும்புகள் ,அறுவை சிகிச்சை செய்த அடையாளங்கள் இருக்கும் .. இவர்கள் மனதை அமைதியாக வைத்து கொள்ள பழகி கொள்ள வேண்டும் ... ராணுவம் ,காவல் துறை ,,விளையாட்டு ,நெருப்பு துறை ,சமையல் ,போன்றவைகள் மேன்மை தரும் அளவுக்கு மீறிய கோபம் இவர்களுக்கு தான் வரும் .. இவர்கள் வாழ்வில் நிறைய நபர்கள் மனைவியுடன் சேர்ந்து வாழ்வது இல்லை திருமணத்திற்கு பிறகு இவர்களின் வாழ்கை திசை மாறிவிடும் இவர்களின் சிறப்பு யாராலும் செய்யமுடியாத அதித செயல்களை செய்வர் கட்டிடகலை ,படைக்கும் தொழில் ,உருவாகும் தொழில் இவர்களால் மென்மையாக இருக்கும் ... செவ்வாய் கிழமை அல்லது அவிட்டம் ,மிருக சீர்டம் ,சித்திரை நச்சதிரம்மான அன்று முயற்சி மேன்மை தரும் இவைகள் பொதுவான பலன்கள், ஆகவே எண்கணிதம் ஒரு சின்ன கணக்கு , இதில் நிறைய முரண் பாடுகள் வரலாம்  .

அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

No comments:

Post a Comment