Wednesday, August 10, 2016

ராசிகளும் ப்ரார்த்தனைகளும்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் துன்பம் வரும் சமயத்தில் இந்த மந்திரத்தை 18 முறை கூறி  சஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் .                             """

ஷண்முகம் பார்வதீ புத்ரம்                                                                   கிரௌஞ்ச சைவ விமர்த்தனம்                                                        தேவ சேனாபதிம் தேவம் ஸ்கந்தம்                                           வந்தே சிவாத் மஜம்"""


ரிஷப ராசியில் பிறந்தவர்கள் துன்பமான சமயங்களில் மட்டுமல்லாமல் எப்பொழுதும் மகாலட்சுமி பூஜை செய்து வெள்ளிகிழமைகளி்ல்  இந்த மந்திரத்தை 21 முறை          கூறி வந்தால் துன்பங்கள் நீங்கும்.செல்வம் பெருகும் ""

ஸ்ரீ லக்ஷ்மீம் கமல தாரின்யை சிம்ஹ வாஹின்யை நமஹ """



மிதுன ராசியில் பிறந்தவர்கள் துன்பம் வரும் வேளைகளில் இந்த  மந்திரத்தை 11 முறை கூறி விஷ்ணுவுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் ""

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ """



கடக ராசியில் பிறந்தவர்கள் பௌர்ணமி தோறும் அம்பாளுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ் வரும் மந்திரத்தை 21 முறை ஜெபித்தால் வாழ்வில் உயர்வு ஏற்படும் ."""

ஓம் ஐம் க்லீம் சோமாய நமஹ """


சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்று கிழமை சூரியனுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ் கண்ட மந்திரத்தை 108 முறை ஜெபித்து வந்தால் நல்ல பலன் ஏற்படும் .""

ஓம்-ஹ்ரீம்-ஹிரிம்-சூர்யாய நம """

க ன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன் கிழமை  விஷ்ணுவுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து இந்த  மந்திரத்தை ஜெபித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் ."

ஓம் -ஐம் -ஸ்ரிம் - ஸ்ரீம் -புதாய நம "


துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை ஒரு வெள்ளி கிழமை சத்ய  நாராயண பூஜை செய்து கீழ் கண்ட மந்திரத்தை ஜெபித்தால் நன்மை ஏற்படும் "

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்   சுக்ராய நமஹ "


விருச்சிக  ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் கிழமை துர்கையை பூஜித்து கீழ் கண்ட ஸ்லோகத்தை ஜெபித்தால் நல்ல பலன் கிடைக்கும் "

தரணி கர்ப்ப சம்பூதம் ;;; வித்யுத் காந்தி சமப்ரதம் ;;;;குமாரம் சக்தி ஹஸ்தம் ச ;;;;மங்களம் ப்ரணமாம்யஹம் ""



தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழ  கிழமைகளில்   தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்து பின் வரும் மந்திரத்தை 21 முறை ஜெபித்தால் நன்மைகள் உண்டாகும் ."

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே   நமஹ ""


மகர ராசியில் பிறந்தவர்கள் சனிகிழமை சனீச்வர பகவானுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ் கண்ட மந்திரத்தை 21 முறை ஜெபித்தால் நல்ல பலன் பெறலாம் ."

ஓம் ஐம்  ஹ்ரீம் ஸ்ரீம் சனீச்வராய நமஹ "


கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒரு சனிக்கிழமையில் மாதம் ஒரு முறை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ் கண்ட மந்திரத்தை 21 முறை ஜெபித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் ""

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்த்ராய அச்சுதாய நமோ நமஹ ""


மீனா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு வியாழன் சிவா பெருமானுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை 27  ஜெபித்து வந்தால் நலம் உண்டாகும் "

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நமஹ "

அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

No comments:

Post a Comment