Wednesday, May 22, 2024

ஹிந்துமத_அறிவியல்


உலக வாழ்க்கையில் #இந்துக்கள் தொடாத பகுதிகளே இல்லை!

ஏன்,, #வானவியல்_அறிவியலும், #விஞ்ஞான_அறிவியலும் #அணு_அறிவியலும் முதலில் ஹிந்துக்களிடம் இருந்தே தோன்றியது!

இன்று ஆயிரம் #விஞ்ஞானிகள் சேர்ந்து செயற்கைக்கோளை உருவாக்கி அதற்கு #ஆரியப்பட்டா என்று பெயர் வைக்கிறார்கள். அந்த ஆரியப்பட்டர் யார் தெரியுமா? அவர் ஒர் இந்து #ஞானி 5ஆம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்தவர். முதல் முதலில் வான மண்டலத்தை ஆராய்ந்து தெளிவான குறிப்பு எழுதி வைத்தவர்.

அவரின் குறிப்பில் பூமியில் இருந்து சந்திர மண்டலத்தின் தூரமும், சந்திரனின் எடையும் சரியாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது! சந்திரகிரணத்திற்கு பின் உள்ள அறிவியலை 1600ஆண்டுகளுக்கு முன்பே மிகத் தெளிவாக எழுதி இருக்கிறார். மேலும் கணிதத்தில் #பூஜியத்தை கண்டுபிடித்தவரும் அவரே!

#Number_The_Language_of_Science என்ற புகழ் வாய்ந்த நூலை எழுதிய #Tobias_Dantzig அந்த நூலில் சொல்கிறார் :" கணிதத்துறையில் இந்தியர்கள் (இந்து) செய்திருக்கும் சாதனைகள்  உலக  முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் சந்தேகமே இல்லை என்று....

#கடவுளின்_வடிவம்:
""அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே''

அணுவிற்குள் அணுவாகவும் அதற்கப்பாலும் இருப்பவன்தான் #இறைவன். அப்படி அணுவிற்குள் அணுவாய் உள்ளதை ஆயிரம் கூறு செய்து, அவ் ஆயிரத்தில் ஒரு கூறினை நெருங்க வல்லார்க்கு அணுவிற்குள் அணுவாய் இருக்கின்ற இறைவனை அணுகலாம்.

உயிருக்கு கூறப்பட்ட வடிவத்தை ஆயிரம் கூறுகளாக்கிக் கிடைப்பது இறைவன் வடிவம் என்று கூறுகின்றார்...

#அணு_ஆராட்சி
உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தைச் சொல்ல வந்த #திருமூலர் ஓர் அதிசயமான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஒரு #மாட்டின்_முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் #அணுவைப் பிளப்பது போலத்தான். 

ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறுபோடச் சொல்கிறார். இதுதான் #ஆன்மாவின் வடிவம் என்கிறார்.

பாடல்:-
""மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே''

அதாவது, ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர் அணுவைப் பிளப்பதை #மனக்கண்ணில் கண்டுள்ளார்.

ஒரு கடுகில் 32,768 அணு என ஒரு பழந்தமிழ்ப் பாடல் #அணு பற்றிய #இந்துக்களின்_அறிவை விளக்குகிறது...

""அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி
மணற்கடுகு நெல் விரலென்றேற - வணுத்தொடங்க
யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி
லச்சாணிரண்டு முழமாம்''

8 அணு = ஒரு தேர்த்துகள்
8 தேர்த்துகள் = ஒரு பஞ்சிழை
8 பஞ்சிழை = ஒரு மயிர்
8 மயிர் = ஒரு மணல்
8 மணல் = ஒரு கடுகு = 2,62,144 அணுக்கள்,
8 கடுகு = ஒரு நெல்
8 நெல் = ஒரு விரல்
8 12 விரல் = ஒரு சாண்
2 சாண் = ஒரு முழம் = 4,02,65,31,184 அணுக்கள்
4 முழம் = ஒரு கோல்
500 கோல் = ஒரு கூப்பீடு
4 கூப்பீடு = ஒரு காதம்

#தற்போதைய_விஞ்ஞானம் ஒரு ஹைட்ரோஜென்(Hydrogen) அணுவின் சுற்றளவு. 0.000000212 MM - ஹைட்ரோஜென் எனப் பிரித்திருக்கின்றது.

இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டுப் பார்ப்போம். ஒரு மனிதனின் முடியானது 40-80 மைக்ரோன் (Micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்த்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே எடுத்துக் கொள்வோம்.

பசு மாட்டு மயிரின் உரு அளவு =100 மைக்ரோன் -- Size of an hair - 100 Miicron -

100 மைக்ரோன் = 0.1 MM - 100 micron - 0.1 MM..

இப்பொழுது திருமூலர் கூறியவாறு பசு மாட்டின் ஒரு முடியை நூறாகப் பிரிப்பதாக எடுத்துக்கொள்வோம்.

0.1/100=0.001  (MM) அதை ஆயிரமாகப் பிரிப்பதாக எடுத்துக் கொள்வோம். 0.001/1000= 0.000001 MM. இதை நாம் (100,000) நூறாயிரமாகப் பிரிப்பதாக எடுத்துக் கொள்வோம்.

0.000001/100 000 = 0.00000000001 மில்லிமீட்டர் (MM) இதையே #உயிரின் (அணுவின்) அளவாக இருக்கின்றது என்கிறார் திருமூலர். ஆகவே, திருமூலர் உயிரின் அளவாகக் குறிப்பிடுவது சராசரியாக 0.00000000001 (MM) .

அணுவின் சுற்றளவு 0.000000 212 (MM)-

ஹைட்ரோஜென். ஆனால், திருமூலர் அதற்கும் கீழே சென்று உயிரின் அளவாக, 0.00000000001-யைக் குறிப்பிடுகின்றார்.

____________________________

இந்து மதத்திற்கு எதிராக எத்தனை பகுத்தறிவு பொத்துக்கொண்டு வந்தாலும் "#கடைசியில் எங்கே போகிறோம் என்று தெரியாமலேதான் கண்மூடப் #போகிறோம்!!!..

அப்படி இருக்க #அன்று சொன்ன இந்து ஞானிகளின் அறிவியல் #இன்று நிரூபிக்கப்பட்டுக்கொண்டு வரும் வேளையில் இந்துக்களின் கடவுள் நம்பிக்கையையும் அறிவியல் என்று அங்கீகரித்தால் என்னத் தவறு?
Ambharish g 
savithaastro@gmail.com 
savithaastro.blogspot.com
9790111570

No comments:

Post a Comment