Monday, April 1, 2024

6,8,12" இந்த மூன்று பாவங்கள்


★6 8 12 பாவங்கள் ஒரு மனிதனின் முக்கியமான தேவைகளையும் முக்கியமான பிரச்சனைகளையும் கொண்டிருக்கும் பாவங்களாகும்.

★அதாவது ஆறாம் பாவம் என்பது கடன், வம்பு, வழக்கு,கோர்ட், கேசு அடிதடி, சண்டை, போட்டி பொறாமைகள், எதிரிகள் சத்துருக்கள், போன்றவற்றை உள்ளடக்கிய பாவமாகும்.

★எட்டாம் பாவம் என்பது ஆயுள் அசிங்கம் அவமானம் பயத்தை கொடுக்கக்கூடிய பாவம் தவறான எண்ணங்களை உருவாக்கக்கூடிய பாவம்.

★பன்னிரண்டாம் பாவம் என்பது விரயச் செலவு அயன சயன போகம் சுகபோக வாழ்க்கை மருத்துவமனை மற்றும் முக்தி எனும் ஸ்தானம் இவற்றை உள்ளடக்கிய பாவங்களாகும்.

★இந்த மூன்று விஷயங்கள் மூலமாகத்தான் ஒரு மனிதனுக்கு பிரச்சனைகள் என்பது வரும் மற்றும் ஒரு மனிதனின் முக்கியமான தேவைகளும் இந்த பாவங்களும் தான்.இந்த மூன்று பாவம் சார்ந்த விஷயங்களை ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் அனுபவித்தே தீரவேண்டும் என்பதுதான் விதி.

★6 8 12-ஆம் பாவங்கள் எதற்கு அவ்வளவு முக்கியத்துவமான பாவங்கள் என்றால் ஒரு மனிதன் தான் பிறக்கும் பொழுது அவனுடைய முன்ஜென்மத்தில் செய்த தவறை பழிதீர்க்க இந்த ஜென்மத்தில் இந்தப் பிரபஞ்சம்,இந்த இயற்கை 6 8 12 பாவங்கள் மூலமாகத் தான் நம்மை பழி தீர்க்கும்.

★ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் அவன் சந்திக்க கூடிய முதல் சவால் அல்லது முதல் படி 6ம் பாவம் மூலமாக இருக்கும்.6ம் பாவம் என்பது உத்தியோகம்.6ம் பாவத்தை ஒருவன் கடந்துவிட்டால் 7ம் பாவம் எனும் திருமணம் அவனுக்கு சுலபமாக விடும்.

★8ம் பாவம் என்பது ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் திருமணத்திற்குப் பிறகு அவன் சந்திக்கக் கூடிய விஷயங்கள் பயம், negative எண்ணம், மற்றும் அசிங்கம் ,அவமானம் போன்றவைகள் ஆகும்.இந்த 8ம் பாவத்தை ஒருவன் கடந்துவிட்டால் 9,10,11, பாவங்கள் ஒருவனுக்கு சுலபமாகக் கிடைத்துவிடும்.

★12 ம் பாவம் என்பது விரயச் செலவுகள் ஒருவன் தன் வாழ்க்கையில் அவனுடைய குறிப்பிட்ட வயதில் தனக்கு வரக்கூடிய பிரச்சனைகள் மற்றும் விரயச் செலவுகள் ஆகும்.

★இந்த 3 பாவங்களின் ஆதிபத்தியங்கள் தான் ஒருவனுக்கு மிக முக்கியமான தேவைகள் ஆகும்.அதனால்தான் நமது முன்னோர்கள் இந்த 6 8 12ம் பாவங்களில் இந்த முக்கியமான ஆதிபத்தியங்களை வைத்திருக்கிறார்கள்.

★இந்த மூன்று பாவங்களில் தான் நமக்கு பிரச்சனைகள் என்பது இருக்கும்.இந்த இயற்கை அல்லது இந்த பிரபஞ்சம் நம்மை சோதிக்க கூடிய இடங்களும் இந்த மூன்று பாவங்கள் தான்.

★ஒரு மனிதன் சாதாரணமாக இந்த மூன்று பாவத்தையும் கடப்பது என்பது கடினமாகும்.ஏனென்றால் நாம் முன்ஜென்மத்தில் செய்த தவறை இந்த ஜென்மத்தில் இந்த பிரபஞ்சம் இந்த மூன்று பாவங்களை பயன்படுத்தி தான் நம்மை சோதனைக்கு உள்ளாக்கும் அல்லது நம்மை கஷ்டப்படுத்தும்.

★இப்பொழுது ஆறாம் பாவத்தில் எந்த எந்த கிரகங்கள் இருந்தால் என்ன ஆகும் என்பதே ஒவ்வொரு கிரகமாக பார்க்கலாம்.

1.(6ம் பாவம்)

★ஆறாம் பாவத்தில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரகத்தின் காரகத்துவங்களை சார்ந்து கடன் வம்பு வழக்கு கோர்ட் கேசு அடிதடி சண்டை போட்டி பொறாமை எதிரி போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

★(6 பாவத்தில் "புதன்")

★புதன் ஆறாம் பாவத்தில் இருந்தால் கடன், சீட்டு, ஏலம், loan, sharemarket stockmarket, trading இவற்றின் மூலமாக கடன் பிரச்சினை, வம்பு வழக்கு கோர்ட் கேசு அடிதடி சண்டை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

★இந்தப் பிரச்சினையில் இருந்து எப்படி தப்பிப்பது என்றால் யாருக்கெல்லாம் ஆறாம் பாவத்தில் புதன் இருக்கிறதோ இவர்கள் என்றைக்குமே கடன்,சீட்டு,ஏலம்
loan, sharemarket,stockmarket, trading போன்றவற்றில் முதலீடு செய்வதோ
கடன் வாங்குவதோ கடன் கொடுப்பதோ போன்ற செயல்களை செய்யக்கூடாது.

★இவர்கள் என்றைக்குமே தங்களுடைய பெயரில் சீட்டு ஏலம்,loan,போன்றவைகள் எடுக்கக் கூடாது.

★(6ம் பாவத்தில் "செவ்வாய்")

★செவ்வாய் யாருக்கெல்லாம் ஆறாம் பாவத்தில் இருக்கிறதோ இவர்களுக்கு வீடு வண்டி வாகனம் சொத்து உத்தியோகம் இதன் மூலமாக கடன் பிரச்சினை வம்பு வழக்கு கோர்ட் கேசு அடிதடி சண்டை போட்டிகள் பொறாமைகள் போன்ற பிரச்சினைகள் இவர்களுக்கு இருக்கும்.

★இந்த விஷயங்களை நாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கு தகுந்தார்போல் நாம் ஜாக்கிரதையாக இருந்து கொண்டால் இந்தப் பிரச்சினையில் இருந்து நாம் தப்பிக்க இயலும்.

★செவ்வாய் ஆறாம் பாவத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் வீடு வண்டி சொத்து உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் முன்கூட்டியே சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.

★மேலும் இதனை சார்ந்தது இவர்கள் யாரிடமும் கடன் வாங்கவே கூடாது வாங்கினால் அதனை அடைவதற்கு சிரமமாகிவிடும்.

★(6ம் பாவத்தில் "சூரியன்")

★சூரியன் ஆறாம் பாவத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் தந்தை மூலமாகவும் அல்லது அரசாங்கம் மூலமாகவும் மருத்துவ செலவுகள் மூலமாகவும் கடன் பிரச்சனை வம்பு வழக்கு அடிதடி சண்டை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

★இந்த விஷயங்களை முன்கூட்டியே நாம் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார்போல் நாம் கவனமாக இருந்து கொண்டால் இந்த விஷயத் தில் இருந்து தப்பிக்க இயலும்.

★மேலும் சூரியன் ஆறாம் பாவத்தில் இருப்பவர்களெல்லாம் மருத்துவ செலவுகள் சார்ந்தும் தந்தையை சார்ந்தும் அரசாங்கத்தை சார்ந்தும் சற்று கவனமாகவே எப்போதும் இருக்க வேண்டும்.

★மருத்துவ செலவுகள் சார்ந்த இவர்கள் கடன் வாங்கவே கூடாது வாங்கினால் அதை அடைப்பதற்கு படாதபாடு ஆகிவிடும்.

★(6ம் பாவத்தில் "சனி")

★சனி ஆறாம் பாவத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் தொழில் மூலமாக கடன் பிரச்சினை வம்பு வழக்கு அடிதடி சண்டை போட்டி பொறாமைகள் போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

★மேலும் தொழில் சார்ந்து இவர்கள் எப்போதுமே கவனமாக இருக்கவேண்டும் தொழிலுக்காக என்றைக்குமே இவர்கள் மற்றவர்களிடம் கடன் வாங்கவே கூடாது வாங்கினால் அதை அடைப்பதற்கு மிகவும் சிரமமாகிவிடும்.

★(6ம் பாவத்தில் "குரு")

★குரு யாருக்கெல்லாம் ஆறாம் பாவத்தில் இருக்கிறதோ இவர்களுக்கு குழந்தைகள் மூலமாகவும் மற்றும் ஆன்மீக செலவுகள் சார்ந்தும் இவர்களுக்கு கடன் பிரச்சினை வம்பு வழக்கு அடிதடி சண்டை போன்ற பிரச்சனை ஏற்படும்.

★யாருக்கெல்லாம் குரு ஆறாம் பாவத்தில் இருக்கிறதோ இவர்கள் கண்டிப்பாக கடன் பிரச்சனையில் சிக்குவார்கள்.

★குரு ஆறாம் பாவத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் என்றைக்குமே இவர்களுக்கு உத்தியோகம் மூலம் வரும் வருமானத்தை இவர்களுக்காக இவர்களின் விருப்பத்திற்காக அந்த பணத்தை என்றைக்குமே
அனுபவிக்கவே முடியாது.

★(6ம் பாவத்தில் "சுக்கிரன்)

★ஆறாம் பாவத்தில் சுக்கிரன் இருப்பவர்களுக்கெல்லாம் மனைவி மூலமாகவும் காதலி அல்லது காதலன் மூலமாகவும் கடன் பிரச்சனை வம்பு வழக்கு கோர்ட் கேசு அடிதடி சண்டை போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

★மேலும் இதனை சார்ந்த விஷயங்களில் இவர்கள் முன்கூட்டியே சற்று கவனமாக இருந்து கொண்டால் இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க இயலும்.

★இவர்கள் என்றைக்குமே மனைவி மற்றும் காதலன் காதலி இவர்களை சார்ந்த விஷயங்களில் சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.

★ஆறாம் பாவத்தில் "ராகு,கேது சந்திரன்" இந்த மூன்று கிரகங்கள் இருந்தால் அதற்கு இந்த சூட்சமம் பொருந்தாது.

2.( 8ம் பாவம்)

★எட்டாம் பாவத்தில் எந்த எந்த கிரகங்கள் எல்லாம் இருக்கிறதோ அந்த கிரக காரகத்துவம் சார்ந்தும் அந்த கிரக உறவு காரகத்துவம் சார்ந்தும் நமக்கு பயம் என்பது இருக்கும்.

★(8ம் பாவத்தில் "புதன்")

★8ம் பாவத்தில் புதன் இருப்பவர்களுக்கெல்லாம் படிப்பு சார்ந்த விஷயங்களிலும்,mathematics accounts, documents,இது சார்ந்த விஷயங்களில் இவர்களுக்கு பயம் என்பது இருக்கும்.

★பத்திரப் பதிவு,ஆவணங்கள், படிப்பு சார்ந்த விஷயங்கள் இவர்களுக்கு பயம் என்பது சற்று இருக்கும்.

★(8ம் பாவத்தில் "சனி")

★சனி எட்டாம் பாவத்தில் யாருக்கெல்லாம் இருக்கிறதோ இவர்கள் வாழ்க்கையில் எதற்குமே பயப்பட மாட்டார்கள்.

★என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் வருவதை நாம் எதிர்கொள்வோம் என்ற மனோபாவம் இவர்களுக்கு இருக்கும்.

★(8ம் பாவத்தில் "செவ்வாய்")

★எட்டாம் பாவத்தில் செவ்வாய் இருப்பவர்களெல்லாம் பயத்தின் மூலமாக வீரத்தை வெளிப்படுத்துபவர்கள்.

★மேலும் அவர்களுக்கு உத்தியோகம் மூலமாகவும் வீடு வண்டி சொத்து  மூலமாகவும் பயம் இருக்கும்.

★(8ம் பாவத்தில் "குரு")

★யாருக்கெல்லாம் குரு எட்டாம் பாவத்தில் இருக்கிறதோ இவர்களுக்கு குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் பயம் என்பது இருக்கும்.

★குரு எட்டாம் பாவத்தில் இருப்பவர்களெல்லாம் வாகனம் ஓட்டும் போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் இவர்களுக்குத் தான் அதிகம்.

★(8ம் பாவத்தில் "சுக்கிரன்")

★சுக்கிரன் எட்டாம் பாவத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் மனைவியை சார்ந்தும் காதலன் அல்லது காதலியை சார்ந்தும் இவர்களுக்கு பயம் என்பது இருக்கும்.

★மேலும் இவர்கள் சுக்கிரன் சம்பந்தப்பட்ட விஷயங்களை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது சொன்னால் பிரச்சினை ஏற்பட்டுவிடும்.

★(8ம் பாவத்தில் "சூரியன்")

★சூரியன் எட்டாம் பாவத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் மருத்துவம் சார்ந்த விஷயங்களிலும்
தந்தையை சார்ந்த விஷயங்களிலும் மற்றும் அரசாங்கம் சார்ந்த விஷயங்களிலும் இவர்களுக்கு பயம் என்பது இருக்கும்.

★சூரியன் எட்டாம் பாவத்தில் இருப்பவர்களெல்லாம் இருட்டைக் கண்டால் பயப்படுவார்கள்.

★(8ம் பாவத்தில் "சந்திரன்")

★சந்திரன் எட்டாம் பாவத்தில்
 இருப்பவர்களுக்கெல்லாம் தண்ணீரைக் கண்டால் பயம் என்பது இவர்களுக்கு இருக்கும்.

★மேலும் இவர்கள் தண்ணீர் சார்ந்த விஷயங்களில் சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.

★(8ம் பாவத்தில் "ராகு")

★ராகு எட்டாம் பாவத்தில் இருப்பவர்களெல்லாம் அமானுஷம் சார்ந்த விஷயங்களிலும் ஆவிகள் பேய்கள் இதனை சார்ந்த விஷயங்களிலும் இவர்களுக்கு பயம் என்பது இருக்கும்.

★மேலும் இவர்கள் மின்சாரம் மற்றும்
electrical and electronics  சம்பந்தப்பட்ட பொருட்களை கையாளும் போதும் 
மற்றும் வாகனம் ஓட்டும்போதும் சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.

★கேது எட்டாம் பாவத்தில் இருந்தால் அதற்கு இந்த சூட்சமம் பொருந்தாது.

3.(12ம் பாவம்)

★பன்னிரெண்டாம் பாவத்தில் எந்த எந்த கிரகங்கள் எல்லாம் இருக்கிறதோ அந்த கிரக காரகத்துவம் சார்ந்து நமக்கு
விரயச் செலவுகள் என்பது இருக்கும்.

★(12ம் பாவத்தில் "சூரியன்")

★சூரியன் பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் மருத்துவம் சார்ந்தும் தந்தையை சார்ந்தும் அரசாங்கம் சாந்தும் நமக்கு விரயச் செலவுகள் என்பது கண்டிப்பாக வரும்.

★மேலும் சூரியன் 12 ஆம் பாவத்தில் இருந்தால் மருத்துவம் சார்ந்த விஷயங்களில் கண்டிப்பாக விரயச் செலவுகள் என்பது வரும்.

★இதனை சார்ந்த விஷயங்களை நாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கு தகுந்தார்போல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

★(12ம் பாவத்தில் "சனி")

★சனி பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் தொழில் மூலமாக விரயச் செலவுகளும் பணக் கஷ்டங்களும் இவர்களுக்கு ஏற்படும்.

★மேலும் சனி 12 ஆம் பாவத்தில் இருந்தால் தொழில் சார்ந்த விஷயங்களில் இவர்கள் முன்கூட்டியே கவனமாக இருக்க வேண்டும்.தொழிலுக்காக அவர்கள் கடன் வாங்கவே கூடாது.

★(12ம் பாவத்தில் "புதன்")

★புதன் 12 ஆம் பாவத்தில் இருந்தால்
கடன், சீட்டு, ஏலம், loan, sharemarket stockmarket, trading இவற்றை சார்ந்த விஷயங்களின் மூலம் இவர்களுக்கு விரயச் செலவுகள் என்பது இருக்கும்.

★மேலும் புதன் 12 ஆம் பாவத்தில் இருந்தால் கடன், சீட்டு, ஏலம் இது சார்ந்த விஷயங்களில் இவர்கள் போக கூடாது.மற்றும் இதனை சார்ந்து இவர்கள் கவனமாகவே இருக்க வேண்டும்.

★(12ம் பாவத்தில் "சுக்கிரன்")

★சுக்கிரன் 12ம் பாவத்தில் இருந்தால் மனைவி மூலமாகவும் அல்லது காதலன் மற்றும் காதலி மூலமாகவும் விரயச் செலவுகள் என்பது இருக்கும்.

★இதனை சார்ந்த விஷயங்களில் இவர்கள் முன்கூட்டியே சற்று கவனமாக இருக்க வேண்டும்.

★(12ம் பாவத்தில் "செவ்வாய்")

★செவ்வாய் பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் வீடு வண்டி வாகனம் சொத்து உத்யோகம் இதனை சார்ந்த விஷயங்களின் மூலம் இவர்களுக்கு விரைய செலவுகள் என்பது இருக்கும்.

★மேலும் இந்த விஷயங்களை சார்ந்து இவர்கள் முன்கூட்டியே சற்று கவனமாக இருக்க வேண்டும்.

★(12ம் பாவத்தில் "குரு")

★குரு பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் குழந்தைகள் மூலமாகவும் ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் மூலமாகவும் விரயச் செலவுகள் என்பது இருக்கும்.

★மேலும் இவர்கள் குழந்தைகள் சார்ந்த விஷயத்திலும் ஆன்மீகம் சார்ந்த விஷயத்திலும் விரயச் செலவுகள் செய்ய முன் கூட்டியே சற்று கவனமாக இருக்க வேண்டும்.

★பன்னிரெண்டாம் பாவத்தில் "சந்திரன், ராகு, கேது" இந்த மூன்று கிரகங்கள் இருந்தால் அதற்கு இந்த சூட்சமம் பொருந்தாது.

★6,8,12ம் பாவத்தில் கிரகங்கள் இல்லை என்றால் அந்த பாவத்தின் அதிபதி எந்த எந்த வீட்டில் இருக்கிறதோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரகத்தின் மூலமாக அந்த பாவங்கள் செயல்படும்.
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
9790111570

No comments:

Post a Comment