Monday, April 1, 2024

முற்பிறவிகளில் ஏற்பட்ட சாபங்கள், பாவங்கள்


 லக்னத்திற்கு
2ல் செவ்வாய், ராகு, கேது, சனி இவர்கள்
இருந்து சுபகிரகம் பார்வை பெறாவிட்டால் இந்த ஜாதகருக்கு வாழ்வில் சுகம் என்பதே இராது. 

2ல் செவ்வாய் இருந்தால்                  
பிறர் செய்வினை செய்திருப்பார்கள். கேது இருந்தால் இவரே இவரது மனைவிக்கு
செய்வினை செய்திருப்பார்.
சனி இருந்தால் ஜாதகரின் முன்னோர்கள் பிறருக்கு
செய்வினை செய்திருப்பார்கள். ராகு 2ல்
இருந்தால் பிறரின் செல்வத்தை வஞ்சித்தவனாவன். இதனால் வேலையில் தடை, குடும்பம் அமை
யாத சூழலை உருவாக்கும்.              5ல் செவ்வாய் இருப்பது முன்ஜென் மாவில் சீடன்  கேட்ட
கேள்விக்கு சரியான பதில்கூறாததினால் ஏற்பட்ட சாபத்தால் வந்ததாகும். இதனால் இப்பிறவியில் சின்ன விஷயத்திற்கெல்லாம் சத்தம் போட்டு பேசுவார். ஐந்தில சனி
இருந்தால் ஒருமுறைக்கு பலமுறை கேட்ட
பின்பே பதில்கூறுவார். இது புத்திரதோஷ அமைப்பாகும். ராகு இருந்தால் எந்நேரமும் போதையில் இருப்பான். 5ல் கேது இருந்தால் ஞானிபோல் பேசுவான்.  முன் பிறவியில் குழந்
தைகளை அடித்ததாலும், படிக்காதவர்களை ஏளனமாக பேசியதாலும் வந்ததாகும். தாயை மதிக்காததினாலும் இந்த அமைப்புகள் வருவதாகும்.8ல் செவ்வாய் இருப்பது பிறர்மனை, வீடு நிலத்தை அபகரித்ததால் வந்தது. சனி இருப்பது பொய்சாட்சி சொன்னதால் வருவது. இது அஷ்டம
சனி மூலம் ஆட்டிப்படைக்கும்.8ல் ராகு இருப்பது பிறர்மனைவியின் மீது இச்சைக்
கொண்டதாலும், அவற்றின் மூலம் பெற்ற
சாபத்தினால் வருவது  ஆகும். எட்டில் கேது இருப்பது வயோதிக காலத்தில் பிறர்மனைவி மீதும்,
இளம்பெண்கள் மீதும் இச்சை கொண்டதால் வந்தது. இதனால் ஜாதகருக்கு மாரக
தோஷமும், மனைவிக்கு மாங்கல்ய தோஷமும் ஏற்படும். 11ல் செவ்வாய் இருப்பது
லாபத்திற்காக பிறரை வஞ்சித்ததால் வந்ததாகும். சனி இருப்பது வேலை எதுவும்
செய்யாமல் முன்னோர்களின் சொத்துக்
களை அனுபவித்ததால் வந்தது.. ராகு இருப்பது முன்னோர்கள் வஞ்சகமாக சேர்த்
தசொத்துக்களை அனுபவித்ததினால் வந்ததாகும். கேது 11ல் இருப்பது முன்னோர்கள் உயர்பதவியில் இருந்து தவறான வழியில் சம்பாதித்த சொத்துக்களை அனுபவித்து அழித்ததனால் வந்ததாகும். இது
தான் கர்ம அமைப்புக்கள் என்று சொல்லத் தக்கன

Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
9790111570

No comments:

Post a Comment