Monday, July 18, 2016

ஆடி மாத யோகம்

இன்று முதல் ஒரு மாத காலம் இரண்டு வேலையும் ஶ்ரீ ஸூக்த பாராயணம் செய்பவர்களுக்கு செல்வமும்  லக்ஷ்மி கடாக்‌ஷமும் தழைத்தோங்கும்.

ஸ்ரீ ஸுக்தம் மற்றும் அதன் அர்த்தம்.

ஹரி: ஓம்
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்
ஸுவர்ண – ரஜ தஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்
ஜாதவேதோ மஆவஹ (1)

அக்னி பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் - வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் எனக்குக் கிட்டும்படி அருள வேண்டுகிறேன்.

தாம் ம ஆவஹ ஜாதவேதோ
லக்ஷ்மீ - மநபகாமிநீம்
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம்
காமஸ்வம் புருஷாநஹம் (2)

பொருள் : அந்த லக்ஷ்மி கடாட்சம் என்னிடம் இருந்தால் நான் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடையமுடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் என்னை விட்டுப் பிரியாமல் இருக்க அருள்புரியுங்கள்.

அஸ்வபூர்வாம் ரத – மத்யாம்
ஹஸ்திநாத -ப்ரபோதிநீம்
ஸ்ரியம் தேவீமுபஹ்வயே
ஸ்ரீர்மா தேவீ ஜுஷதாம் (3)

குதிரைப்படை முன்னால் செல்கிறது. நடுவில் தேர்ப்படை போகிறது. யானைகளின் பிளிறல் ஓசை எந்த அன்னையின் மஹிமையை மற்றவர்களுக்கு அறிவிக்க கஜநாதம் செய்கிறதோ அந்த ஸ்ரீதேவியை என்னிடத்தில் வருமாறு அழைக்கிறேன். அனைவருக்கும் புகலிடமான லட்சுமிதேவி என்னை வந்தடையட்டும்.

காம் ஸோ ஸ்மிதாம் ஹிரண்யப்ராகாராம்
ஆர்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம்
தாமிஹோபஹ்வயே ஸ்ரியம் (4)

மகிழ்வான தோற்றத்தை உடையவளும், எப்பொழுதும் புன்முறுவலுடன் காட்சி தருபவளும், பொன்மயமான பிரகாரம்போல் ஒளிரும் தேகத்தை உடையவளும், யானைகளின் திருமஞ்சன நீரினால் நனைந்த திருமேனியை உடையவளும், திசை எங்கும் தன் ஒளியைப் பரப்புபவளும், குறைவில்லாத நிறைவை உடையவளும், தன்னைப் போலவே பக்தர்களும் நிறைவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவளும், தாமரைப் பூவில் வசிப்பவளும், தாமரை போன்ற நிறம் உடையவளும், ஸ்ரீ என்ற பெயரை உடையவளுமான லட்சுமிதேவியை என் இருப்பிடத்திற்கு அழைக்கிறேன்.

சந்த்ராம் ப்ரபாஸாம்
யஸஸா ஜ்வலந்தீம்
ஸ்ரியம் லோகே
தேவஜூஷ்டா - முதாராம்
தாம் பத்மிநீமீம்
ஸரண-மஹம் ப்ரபத்யே
அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே (5)

பொருள் : பக்தர்களை மகிழ்விப்பவளும், ஒளியாய் பிரகாசிப்பவளும், அனைத்து உலகங்களிலும் புகழப்படுபவளும், பக்தர்களைத் தேடி வந்து அருள்பவளும், தேவர்களால் துதிக்கப்பட்டவளும், உதாரகுணம் நிறைந்தவளும், சக்கரம்போல் வட்டமான தாமரைப் பூவை கையில் தரித்திருப்பவளும், வேத, இதிகாச புராணங்களில் போற்றப்படுபவளுமான தேவியை நான் சரணடைகிறேன். என்னுடைய வறுமை அழியட்டும். எனக்கு அருள் கிடைக்கட்டும்.

ஆதித்ய - வர்ணே தபஸோ திஜாதோ
வநஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோத பில்வ:
தஸ்ய பலாநி தபஸா நுதந்து
மாயாந்த ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ: (6)

சூரியனைப் போல் ஒளிநிறைந்தவளே ! உன்னுடைய அருளால் பூ இல்லாமல் பழம் உண்டாகும் வில்வ மரம் உண்டாகியது. அந்த மரத்தின் பழங்கள் உன்னுடைய அருளைப் போல மனங்களின் உள்ளேயும், வறுமைகளையும் போக்க வல்லன. உன்னுடைய அருளால் கிடைக்கும் அந்த மரத்தின் பழங்கள் மூலமாக அறியாமையையும் வறுமையையும் போக்கி அருளவேண்டும்.

உபைது மாம் தேவஸக :
கீர்த்தீஸ்ச மணிநா ஸஹ
ப்ராதுர் பூதோ ஸ்மி ராஷ்ட்ரே – ஸ்மின்
கீர்த்திம்ருத்திம் ததாது மே (7)

நீ என்னை அடைய வரும்பொழுது தேவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்த மகா விஷ்ணுவும் உடன் வருவார். இந்த பூமியில் பிறந்திருக்கும் எனக்குக் கீர்த்தியையும், ஐஸ்வர்யத்தையும் கொடுத்தருள வேண்டும்.

க்ஷத் -பிபாஸா மலாம் ஜ்யேஷ்டா - மலக்ஷ்மீம் நாஸயாம்யஹம்
அபூதி - மஸம்ருத்திம் ச ஸர்வாந் நிர்ணுத மே க்ருஹாத் (8)

உன் அனுகிரகத்தை அடைந்தால் அதன் பலத்தால், பசி, தாகம், பீடை இவற்றை உண்டு பண்ணுகிற மூதேவியை என்னைவிட்டு அகலும்படி செய்துவிடுவேன். சகலவிதமான வறுமையையும் மேன்மேலும் வரவிடாமல் என்னுடைய வீட்டிலிருந்து நீ அகற்றியருள வேண்டும்.

கந்த - த்வாராம் துராதர்ஷாம்
நித்ய புஷ்டாம் கரீஷிணீம்
ஈஸ்வரீம் ஸர்வ - பூதாநாம்
தாமிஹோபஹ்வயே ஸ்ரியம் ………….(9)

வாசனைமிக்க திரவியங்களை முதலில் அனுப்பி அதன்பிறகு வந்தவளும், தீயவர்களால் அடைய முடியாதவளும், எப்பொழுதும், எப்பொருட்களாலும் நிறைவுள்ளவளும் கரீஷிணி என்ற திருநாமத்தைப் பெற்றவளும், அனைவராலும் போற்றப்படுபவளுமான உன்னை, இங்கே என்னிடம் (எங்கள் இல்லத்தில்) நித்தியவாசம் (எப்போதும் நீங்காது இருக்கும்படி) செய்யும்படி அழைக்கிறேன்.

மனஸ: காம மாகூதிம்
வாச: ஸத்ய மசீமஹி
பசூநாம்ரூபமந்தஸ்ய
மயிஸ்ரி ஸ்ரயதாம் யசஹா (10)

மனதினுடைய விருப்பத்தையும், சந்தோஷத்தையும் வாக்கினுடைய உண்மையையும் அடைவோம். பசுக்களுடையவும் உணவுப் பொருள்கள் உடையவும், பலவிதமான உருவத்தையும் அடைவோம். என்னிடத்தில் லக்ஷ்மிதேவியானவள் நித்யவாசம் செய்யவேண்டும்.

கர்த்தமேந ப்ரஜாபூதா
மயிஸம்பவ கர்தம
ச்ரியம் வாஸய மே குலே
மாதரம் பத்ம மாலினீம் (11)

கர்த்தம ப்ரஜாபதி என்னும் மகரிஷியால் தேவி, புத்திரமதி ஆனாள். கர்த்தமனே என்னிடத்தில் நித்யவாசம் செய்வாயாக. தாமரை மாலையை அணிந்து கொண்டிருக்கிற உனது தாயாராகிய ஸ்ரீதேவியை எனது வீட்டில் வசிக்கச் செய்வாயாக.

ஆபஸ் ஸ்ருஜந்து ஸ் நிக்தானி
சிக் லீத வஸ மே கிருஹே
நிச தேவீம் மாதரம்
ச்ரியம் வாஸயமே குலே (12)

ஓ சிக் லீதரே, தண்ணீர், நெய், தயிர், பால் முதலிய பொருட்கள் என்னுடைய வீட்டில் குறைவின்றிப் பெருகவேண்டும். எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிற உம்முடைய தாயை (ஸ்ரீதேவியை) எனது வீட்டில் வசிக்கச் செய்து அருளும்.

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம்
பிங்கலாம் பத்ம மாலினீம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்
ஜாதவேதோ மமாவஹ (13)

கருணையால் நனைந்தவளும் (தயையால் நனைந்த இதயம்) தாமரைப் பூவில் வாசம் செய்கின்றவளும் நிறைவின் உருவானவளும், தாமரைப் பூமாலையைத் தரித்தவளும், எல்லா உயிர்களையும் மகிழ்விப்பவளும், பொன் போன்ற பரிசுத்தமான மேனியை உடையவளுமான மகாலட்சுமி என் இருப்பிடத்திற்கு வருமாறு செய்தருளுங்கள்.

ஆர்த்தராம் ய: கரிணீம் யஷ்டிம்
ஸுவர்ணாம் ஹேமமாலினீம்
சூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்
ஜாத வேதோ மமாவஹ (14)

பகவானாகிய அமுதத்தால் நனைந்த திருமேனியையுடையவளும், செங்கோலுக்கு அடையாளமாக தண்டாயுதத்தை கையில் தரிப்பவளும், மெலிந்த திருமேனியை உடையவளும், கண்களுக்கு ஆனந்தகரமான வடிவினை உடையவரும், தங்கத்தினால் செய்யப்பட்ட மாலையை அணிந்தவளும், சூரியனைப் போன்ற பிரகாசமுடையவளும், தங்கமயமானவளுமான லட்சுமிதேவியை என்னிடம் வரவழைத்து அவள் என்னிடம் நித்யவாசம் செய்ய அருளுங்கள் திருமாலே !

தாம் ம ஆவஹக ஜாதவேதோ
லக்ஷ்மி மநப காமினிம்
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ
தாஸ் யோஸ் வான் விந்தேயம் புருஷனாநஹம் (15)

ஓ பகவானே, எந்த லக்ஷ்மி என்னிடம் வசிக்கையில் ஏராளமான பொன் பொருள்களும், பசுக்களும், சேவகர்களும் குதிரைகளும், உற்றார்களும், நண்பர்களையும் நான் அடைவேனோ, அப்படிப்பட்ட ஸ்ரீமகாலக்ஷ்மி என்னிடம் நித்யவாசம் செய்ய அருளவேண்டும்.

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்.

அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

No comments:

Post a Comment