மங்களா சரணமாக ஓரிரு ச்லோகத்துடன் தொடங்கலாமே.
அசிந்தயா வ்யக்தரூபாய நிர்குணாய குணாத்மனே |
ஸமஸ்த ஜகதாரமூர்தயே ப்ரம்ஹணே நம: ||
கர்பூர கௌரம் கருணாவதாரம் ஸம்ஸாரஸாரம் புஜகேந்த்ர ஹாரம் |
ஸதா வஸந்தம் ஹ்ருதயாரவிந்தே பவம் பவானீஸஹிதம் நமாமி ||
யத்ரைவ யத்ரைவ மனோ மதீயம் தத்ரைவ தத்ரைவ தவ ஸ்வரூபம் |
யத்ரைவ யத்ரைவ ஸிரோ மதீயயம் தத்ரைவ தத்ரைவ பதத்யம்தே ||
ஸாக்ஷாத் ஸர்வேச்வரனான பரப்ரம்ஹத்தின் லீலையினால் தோன்றிய ஜகத் ஸ்ருஷ்டியில் எண்ணற்ற ஜீவராசிகள் இப்பூமண்டலத்தில் வாழ்ந்து வருகின்றன. இவற்றுள் கிடைத்தற்கரிய விவேகமுள்ள மனிதப் பிறவியில்தான் வேத, சாஸ்த்ரங்களில் சரியாக விதிக்கப்பட்ட தர்மங்களையும் கர்மாக்களையும் அனுஷ்டிக்க முடியும். விவேகம் என்னும் பகுத்தறிவின் மூலம் மனிதன் தன் வாழ்க்கையைப் பயனுள்ளதாகச் செய்து கொள்ள வேண்டும். ச்ருதி, ஸ்ம்ருதிகள் கூறும் ஸ¨க்ஷ்மமான (நுட்பமான) தர்மங்களையும் தத்வங்களையும் கதைகள் மூலம் எளிதாக்கித் தருகின்றன இதிகாச, புராண காவியங்கள்.
உபநயனம் ஆகிய ப்ரம்ஹசாரிக்கு சில நியமங்கள், தர்மங்கள்; விவாஹம் ஆகிய க்ருஹஸ்தனுக்கு பற்பல தர்மங்கள், கர்மாக்கள்; மேலும் அநேக புண்ய காலங்களில் செய்ய வேண்டிய தர்மங்கள்; ஆகியன காலத்தைக் குறிப்பிட்டே தர்மங்கள் விதிக்கப் பட்டிருப்பதால் இத்தகைய தர்மங்களை அனுஷ்டிக்க நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் வேண்டும். மனிதனுக்கு ஆயுள் (வயது) 100 ஆண்டுகள் என வேதம் வாழ்த்துகிறது.
“சதாயுர்வை புருஷ: |
சத ஸம்வத்ஸரம் தீர்கமாயு: |”
ஜோதிஷ சாஸ்த்ரமோ மனிதனின் பூர்ணாயுள் 120 வருஷங்கள் எனக் கணக்கிட்டுள்ளது. நவக்ரஹ நாயகர்கள் பின்வரும் காலக்ரமப்படி மனிதனின் ஆயுளை நிர்ணயிக்கின்றனர். கேது=7, சுக்கிரன்=20, சூரியன்=6, சந்திரன்=10, செவ்வாய்=7, ராகு=18, குரு=16, சனி=19, புதன்=17 ஆக மொத்தம் 120 வருஷங்கள்.
சாந்திகள் ஏன்?
ஒரு குழந்தைக்கு பிறந்தது முதல் 4வருஷம் மாதாவின் பாபத்தாலும் அடுத்த 4வருஷம் பிதாவின் பாபத்தாலும் பின் 4வருஷம் தன் பாபத்தாலும் அரிஷ்டம் ஏற்படுகிறது. பிறந்தது முதல் 8 வயது வரை பாலாரிஷ்டம். பிறகு 20 வயது வரை யோகாரிஷ்டம். இவ்வாறு பல அரிஷ்டங்கள் ஜோதிஷ சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. இவற்றால் ஆயுர்பாவத்துக்கு குறைவு ஏற்படுகிறது. மேலும் நாம் முற்பிறவியில் செய்த புண்யம் (நன்மை) பாபம் (தீமை) ஆகியவற்றுக்கேற்ப இப்பிறவியில் அவ்வினைப் பயன்களான சுக துக்கங்களை அனுபவிக்க நேரிடுகிறது. சுகத்தை அனுபவிப்பதால் புண்யகர்மாவும், துக்கத்தை அனுபவிப்பதால் பாவகர்மாவும் நசிகின்றன. இப்பிறவியில் செய்யும் பாபங்களின் (தீய எண்ணம், சொல், செயல்) பயனாக நமக்குப் பல துன்பங்கள் வருகின்றன.
பொதுவாக நம் ஆயுளின் பின்பகுதியில் (அதாவது 50 வயதுக்குப்பின்) முதுமை தொடங்கி உடல் நலம் குன்றிப் பல நோய்கள் தாக்கி ஆயுட்காலம் குறைகிறது. இக்குறைகள் நீங்கி நலமாக வாழ வைத்யமுறைகள் தவிர வைதிக கர்மாக்களும் தேவை.
“ஜன்மாந்தர க்ருதம் பாபம் வ்யாதிரூபேண பாததே |
தத் சாந்தி: ஒளஷதை: தானை: ஜபஹோம ஸ§ரார்சனை: ||
அதாவது முற்பிறவியில் செய்த பாபம் நோய் வடிவில் துன்புறுத்துகிறது. இது மருந்து, தானம், ஜபம், ஹோமம், தேவதா ஆராதனம் ஆகியவற்றால் நீங்குகிறது. பாரா ச்ருதி, ஸ்ம்ருதிகளில் விதிக்கப்பட்ட கர்மானுஷ்டானங்களின் செய்முறைகளை ஆச்வலாயனர், ஆபஸ்தம்பர், போதாயனர், காத்யாயனர், விகனஸர் போன்ற பல மஹரிஷிகள் சூத்ரங்களாக அருளிச் செய்தனர். பின்னர் பல மஹான்கள் அவற்றை நடைமுறையில் தெளிவாகக் கையாளப் பல கல்ப ப்ரயோக க்ரந்தங்களையும் வ்யாக்யானங்களையும் தந்துள்ளனர். இந்நூல்களில் நித்ய, நைமித்திக கர்மாக்கள் தவிர, காம்ய, சாந்தி, பௌஷ்டிக, ப்ராயச்சித்த கர்மாக்களும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்தந்தப் பாபங்களுக்குத் தக்கபடி மந்த்ரஜபம், க்ருச்ரம் (உபவாசம்) ஸ்நானம், தானம், ஹோமம், சாந்தி போன்றவை மஹார்ணவம் (கர்ம விபாகம்), சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸ§மாகரம் முதலிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. நோயாளி தக்க மருந்து அருந்தியும், உரிய சாந்திகள் செய்தும் குணமடைகிறான். மேலும் வலிமை பெற புஷ்டி தரும் டானிக் உள்ளது போல் பௌஷ்டிக கர்மாக்களும் உள்ளன. இந்த சாந்திகளால் நீண்ட ஆயுளும், உடல் நலமும், மனநிம்மதியும், அனைத்து வளங்களும் கிடைக்கும். இன்னல்கள் முற்றிலும் நீங்காவிடினும் பெரும்பாலும் குறையும். சாந்திகளால் மனச்சாந்தி கிட்டும்.
சாந்திகள் பலவிதம்:
அநேக சாந்திகள் ஜன்ம நக்ஷத்ரத்தையே பிரதானமாகக் கொண்டு செய்யப்படுகின்றன. பிறந்த குழந்தைக்கு ஓர் ஆண்டு நிறையும் ஜன்ம மாஸ ஜன்ம நக்ஷத்திர நாளில் செய்யும் ஆயுஷ்ய ஹோமத்துடன் கூடிய சாந்தி அப்த பூர்த்தி. பின்னர் ஒவ்வொரு வார்ஷீக ஜன்ம நக்ஷத்ரம் தோறும் ஆயுஷ்ய ஹோமம், நக்ஷத்ர ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம் ஆகிய ஏதாவதொன்று செய்வது நம் மூதாதையரின் வழக்கமாக இருந்து வந்தது. மாதந்தோறும் ஒவ்வொரு ஜன்ம நக்ஷத்ரம் அரிஷ்டகாலம் என்று கூறப்பட்டுள்ளதால், சில சுப காரியங்களை ஜன்ம நக்ஷத்ரத்தில் செய்யக்கூடாது என்று விலக்கப்பட்டிருக்கிறது. இது போல் ஜன்ம மாதமும் ஜன்ம வருஷமும் அரிஷ்ட காலம். பிரதி மாதம், பிரதி வருஷம் ஜன்ம வருஷம் ஜன்ம நக்ஷத்ரத்தில் நிவர்த்திக்காக சாந்தி செய்ய முடியாவிட்டாலும் கீழ்க்காணும் சில குறிப்பிட்ட சாந்திகளையாவது செய்து கொள்வது நல்லது.
சாந்திகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். 1.பீம சாந்தி= 55ஆவது வயது ஆரம்பம். 2.உக்ரரத சாந்தி= 60ஆவது வயது ஆரம்பம், 3.ஷஷ்டிமாப்த பூர்த்தி சாந்தி= 61ஆவது வயது ஆரம்பம். 4.பீமரத சாந்தி= 70ஆவது வயது ஆரம்பம். 5.ரத சாந்தி= 72ஆவது வயது ஆரம்பம். 6.விஜய சாந்தி= 78ஆவது வயது ஆரம்பம். 7.சதாபிஷேகம்= 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில். 8.ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்)= பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால். 9.ம்ருத்யுஞ்ஜய சாந்தி= 85ஆவது முதல் 90க்குள். 10.பூர்ணாபிஷேகம்= 100ஆவது வயதில் சுபதினத்தில்.
இவற்றில் ஷஷ்டிதமாப்த பூர்த்தி வைபவம், சதாபிஷேகம் ஆகிய இரண்டையும் பலரும் கொண்டாடுகின்றனர். அனைத்து கர்மாக்களிலுமே, லௌகிகத்தைக் குறைத்து, வைதிகத்துக்கு முக்கியத்துவமளித்து உரிய தக்ஷிணை, ஸம்பாவனை தானங்கள் கொடுக்க வேண்டும். வைதிக கர்மாக்களை ச்ரத்தையுடன் முறையாகச் செய்து நம் தலைமுறையினர்க்கு வழி காட்ட வேண்டும்.
ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி:
அறுபது வயதில் என்ன விசேஷம்? ஜன்ம வருஷம் என்பது பிரபவாதி 60 வருஷங்களில், தான் பிறந்த வருஷம் மீண்டும் வருவது. சான்றாக ஒருவர் ஸர்வதாரி வருஷத்தில் பிறந்தால், 60வருஷம் கழித்து அடுத்த ஸர்வதாரி வருஷம் ஜன்ம வருஷம்.
ஒரு வருஷகாலம் சென்றால் ஒரு வயது நிறையும். 60 வருஷம் (வயது) நிறைவடைவதை ஷஷ்டிதமாப்த பூர்த்தி (ஷஷ்டிதம 60ஆவது) எனப்படும். இரண்டும் ஒன்றுதான். 60 ஆண்டு முடிவுற்று 61 ஆவது ஆண்டு ஜன்ம மாதத்தில் ஜன்ம நக்ஷத்ர நாளன்று செய்வதே ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி.
“ஜன்மதினாத் ஆரப்ய ஷஷ்டதம ஸம்வத்ஸரே ஜன்ம மாஸே ஜன்ம நக்ஷத்ரே”
“ஜன்மாப்தே ஜன்ம மாஸே ச ஜன்மர்«க்ஷ வா த்ரிஜன்மஸ§”
என்றார் போதாயனர். இந்த வசனப்படி, ஜன்ம நக்ஷத்ரத்தன்று ஏதாவது அசௌகர்யத்தால் சாந்தியை நடத்த முடியாவிடில் அதிலிருந்து 10ஆவது அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்யலாம். ஜன்மானு ஜன்மம் அதாவது கேட்டை முதல் நக்ஷத்ரமானால் ரேவதி 10ஆவது நக்ஷத்ரம். ஆயில்யம் 19ஆவது நக்ஷத்ரம். இதை அனுசரித்தே திருநெல்வேலி ஜில்லாவிலும் கேரள தேசத்திலும் ஸெளரமான ரீதியாக ஒரு மாதத்தில் இரண்டு ஜன்ம நக்ஷத்ரங்கள் வந்தால் முதல் ஜன்ம நக்ஷத்ரத்தில் பிறந்தநாள் வைபவம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கு சாஸ்த்ர ப்ரமாணமும் உள்ளது.
இவ்வாறு செய்தால் தான் முதல் நக்ஷத்ரத்தில் செய்ய முடியாதவர்கள் அதே மாதத்தில் 10ஆவது அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்யமுடியும். பின்னால் வரும் நக்ஷத்ரத்தில் செய்வது என்று வைத்துக் கொண்டால் அன்று செய்ய முடியாதவர்கள் அதே மாதத்தில் 10 அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்ய முடியாது. ஏனெனில் அப்போது அடுத்த மாதம் வந்து விடும். பங்குனி மாதமானால் வருஷமே மாறிவிடும். எனவே ஜன்ம வருஷத்தில் ஜன்ம மாதத்தில் முதல் ஜன்ம நக்ஷத்ரத்தில் தான் சாந்தி கர்மாவைச் செய்து கொள்ளவேண்டும். சௌனகர் வசனப்படி ஸ்த்ரீகளும் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி செய்து கொள்ளலாம்.
ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி என நாம் கூறினாலும் ரிஷிகள் (சௌனகர், போதாயனர்) உக்ரரத சாந்தி என்ற பெயரால் அழைக்கிறார்கள். (உக்ரரதோ ம்ருத்யு ரூபோ கர்த:- உக்ரரதம் எனில் ம்ருத்யு ரூபமான பெரும் பள்ளம் (பாழும் கிணறு)) இந்த சாந்தி செய்யும் முறை பல பிரகாரமாக பல மஹரிஷிகளால் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கொன்று சிறிது மாறுதல் இருந்தாலும் பொதுவாக முக்கிய கர்மாவில் மாற்றமில்லை. சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸ§மாகரம் ஆகிய க்ரந்தங்களில் சௌனகோக்த ப்ரயோகம் உள்ளது. மதுரைக்கு வடக்கே சௌனகோக்த ப்ரகாரமே அனுஷ்டிக்கப்படுகிறது. திருநெல்வேலி, கன்யாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய தென் பிரதேசங்களில் பெரும்பாலும் ரோமச மஹரிஷி கூறிய பிரகாரம் நடந்து வருகிறது. ரிக்வேதிகள், ஆபஸ்தம்ப ஸ¨த்ரிகள் பலர் பல ஸாமவேதிகள், போதாயன ஸ¨த்ரிகள் எல்லாரும் இந்த முறையையே பின்பற்றுகின்றனர். சில ஸாமவேதிகள் மட்டும் கௌதமர் கூறிய முறைப்படி நடத்தி வருகின்றனர்.
ரோமசர் முறையில் மத்தியில் 3 கும்பங்கள், திக்பாலக கும்பங்கள் 8 ஆக மொத்தம் 11 கும்பங்கள், மத்தி மூன்றில் நடுவில் ம்ருத்யுஞ்ஜயர், தென்புறம் ம்ருத்யு, வடபுறம் நக்ஷத்ரதேவதை. அஷ்டதிக் பாலகர்கள் வருமாறு: இந்திரன்(கிழக்கு); அக்னி (தென்கிழக்கு); யமன் (தெற்கு); நிர்ருதி (தென்மேற்கு); வருணன் (மேற்கு); வாயு (வடமேற்கு); ஸோமன் (வடக்கு); ஈசானன் (வடகிழக்கு).
முதலில் விக்னேச்வர பூஜை. பின் விசேஷமாக சங்கல்பம், பூர்வாங்க வைதிக கட்டங்கள், புண்யதீர்த்தம் நிரம்பிய கும்ப ஸ்தாபனம், அந்தந்தக் கும்பங்களில் அந்தந்த தேவதைகள் த்யானம், ஆவாஹனம், ஷோடசோபசார பூஜை, உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள், ஜபம், ஹோமம், அபிஷேகம், தசதானம் பஞ்சதானம் மற்றும் இஷ்ட தானங்கள், சாஸ்த்ர சம்பந்த மில்லாவிடினும் சம்ப்ரதாயத்தில் உள்ள மாங்கல்ய தாரணம், அக்ஷதை ஆசீர்வாதம் முதலிய காரியக்ரமங்கள் முறையாகவும், ச்ரத்தையுடனும் செய்யப்பட வேண்டும். ரித்விக் ப்ராம்ஹணர்கள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து, மித்ரர்கள் செய்யவே கூடாது. ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தப்பின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும்.
60வயது வரை வாழ்வது என்பது வாழ்க்கைப் பயணத்தில் பாதிவழி கடப்பது போலாகும். மீதிப்பயணத்தையும் வெற்றிகரமாகக் கடந்து பரப்ரம்ஹ லக்ஷ்யத்தை அடைய ஈச்வரனின் அனுக்ரஹத்தையும், தேவர்களின் அருளாசிகளையும் வேண்டி 60 வயது நிறைந்து 61 வயது தொடங்கும் நாளன்று ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி செய்துகொண்டு பாபங்கள், தோஷங்கள், கஷ்டங்கள் நீங்கி நீண்ட ஆயுள், மரணபயமின்மை, உடல்நலம், ஐச்வர்யம் யாவும் பெற்றுப் பல்லாண்டு வளமுடன் வாழ்வோமாக.
ஏவம் ய: குருதே சாந்திம் தீர்கமாயுச்ச விந்ததி |
தஸ்ய ம்ருத்யயுபயம் நாஸ்தி ஸ§கீ பவதி நாரத ||
இவ்வாறு பலச்ருதியுடன் ஹேமாத்ரி தன் தர்மசாஸ்த்ர நூலில் ரோமச மஹரிஷி கூறிய ஷஷ்டிதமாப்தபூர்த்தி சாந்தி விதியில் கூறி முடிக்கிறார்.
எண்பது வயதில் என்ன விசேஷம்? - சதாபிஷேகம்:
சதாபிஷேகம் என்ற சொல் நூறு வயதில் அபிஷேகம் எனப்பொருள்படும். ஆனால் 100 வயது வரை வாழ்வது மிக அரிது என்பதால் பல ரிஷிகள் நம் மீது கருணைகூர்ந்து 1000 சந்த்ர தர்சனம் செய்தவர் (சஹஸ்ரசந்த்ர தர்சீ) ஆயிரம் பிறை கண்டவர் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இங்கே சந்திர தர்சனம் என்பதை பௌர்ணமி பூர்ண சந்திரனைப் பார்ப்பது என்று கருத வேண்டும். (ஆனால் அமாவாஸ்யை கழிந்து சுக்ல த்விதியை திதியில் மூன்றாம் பிறைச் சந்திர தர்சனம் செய்வது விசேஷம். ஏனெனில் இந்த மூன்றாம் பிறையே பரமசிவனின் சிரசை அலங்கரித்து அவருக்கு சந்திரசேகரன், சந்திரமௌலி எனப்பெயர் பெற்றுத்தந்தது.) இப்போது ஒருவர் ஆயிரம் பிறை கண்டு சதாபிஷேகம் செய்து கொள்வது எப்போது எந்த வயதில் என்று பார்ப்போம்.
சாஸ்த்ரக் கணக்கு:
விகனஸ மகரிஷி அருளிய வைகானஸக்ருஹ்ய ஸ¨த்ரத்திற்கு ஸ்ரீநிவாஸமகி என்பவரின் தாத்பர்ய சிந்தாமணி என்ற வ்யாக்யானத்தில் (இரண்டாம் பாகம் மூன்றாம் ப்ரச்னம் 21ஆவது கண்டத்தில்) பின் வருமாறு உள்ளது.
“அஷ்டமாஸ அதிக அசீதி வர்ஷாணாம் மாஸ ஸங்க்யா க்ரமேண அஷ்டாதி கஷஷ்ட்யுபேத நவசதம் (968) இந்தவோ ஜாயந்தே |
பஞ்சமே பஞ்சமே வர்ஷே த்வெள மாஸெள அதி மாஸகொ இதி (மஹாபாரத) வசனாத் த்வாத்ரிம் சத் அதிக மாஸா: (32) ஸந்தி |
தாவந்த இந்த வச்ச பவந்தி | அத: ஸ த்ருஷட ஸஹஸ்ர சந்த்ரோ (968+32=1000) ப வதி |”
ஆக வைகானஸ க்ருஹ்ய ஸ¨த்ரப்படி 80 வருஷங்களும் 8 மாதங்களும் நிறைந்தவர் ஸஹஸ்ர சந்திர தரிசனம் செய்தவர் ஆவார். மேலும் காலவிதானம் என்ற ஜ்யோதிஷ சாஸ்த்ர நூல் சதாபிஷேக காலத்தை முடிவாக நிர்ணயிக்கிறது.
“தசஹதவஸ§ ஸங்க்யே சார்கவர்ஷே அஷ்டமாஸே
தசசத சசி த்ருஷ்டிர் ஜாயதே மானவானாம் |
ரவி சசி கதிபேதை: பஞ்சமே பஞ்சமே அப்தே
பவதி யததிமாஸ த்வந்த் வமேதத் ப்ரமாணம் ||
மாதம் ஒரு பௌர்ணமி வீதம் 80 வருடங்களுக்கு 80ஜ்12 =960 பௌர்ணமிகள்.
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு 2 அதிமாஸங்கள் ஏற்படும். (மஹாபாரதவசனம்; காலவிதான ஜோதிட நூல் நிர்ணயம்) 80 வருடத்தில் 16 ஐந்து வருடங்கள் உள்ளன. எனவே 16ஜ்2=32 அதிகப்படி பௌர்ணமிகள், மேலும் 8 மாதங்களுக்கு 8 பௌர்ணமிகள்,
ஆக: 80 வருடம் 8 மாதம் =(80x12)+(16x2)+8
=960+32+8=1000 பௌர்ணமிகள் (சந்த்ரதர்சனங்கள்).
விஞ்ஞானக் கணக்கு:
இரு பௌர்ணமிகளுக்கிடையே உள்ள காலம் 29.5306 நாள்கள். 1000 பௌர்ணமிக்கு 29530.6 நாள்கள். ஒரு வருஷத்திற்கு 365.256 நாள்கள். 80 வருடத்திற்கு 80ஜ்365.256 =29220.48 நாள்கள்.
1000 பௌர்ணமிக்கு 80 வருடத்தை விட அதிகப்படியான நாள்கள் =29530.0 -29220.48 =310.12 நாள்கள்.
எனவே 1000 பௌர்ணமி காண 80 வருடமும் 310 நாள்களும் அதாவது 80 வருடம் 10 மாதம் ஆகிறது.
சிசு பிறந்து மூன்றாம் மாதத்தில் சூர்யனையும், நான்காம் மாதத்தில் சந்திரனையும், பசுவையும் காட்ட வேண்டுமென்கிறது ஜோதிடநூலாகிய காலவிதானம்.
துண்டு விழும் இந்த 4 மாதத்தை 80 வருடம் 8 மாதத்துடன் கூட்டினால் 81 வயது நிறையும் போது சதாபிஷேக காலம் சரியாக வரும்.
எண்பத்தொன்றில் நூறும்! ஆயிரமும்!!
81 வயது பூர்த்தி ஜன்ம நக்ஷத்ரத்தில் செய்வதானால் விசேஷமாக கவனிக்க வேண்டாம். திதி, வார, நக்ஷத்ர தோஷங்கள் இல்லை. 80 வருடம் 8 மாதங்களில் ஆயிரம் பௌர்ணமி கண்டபின், உத்தராயணத்தில் சுக்ல பக்ஷத்தில் (காலவிதான வாக்யப்படி) ரோஹிணி, உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி, ரேவதி, சதயம், திருவோணம், ஹஸ்தம் ஆகிய 8 நக்ஷத்ரங்களில் ஏதாவதொன்றில் சுபவாரத்தில் சுப திதியில் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம். 81ஆவது வயதில் அல்லது பின்னர் சதாபிஷேகம் செய்யலாம். இதற்கு முன்னர் செய்யவே கூடாது. ஸஹஸ்ர சந்தரதர்சி ஆகமாட்டார்.
(இந்த சாஸ்த்ர, விஞ்ஞானக் கணக்குகளை நம்பாதவர் பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டி, தான் பிறந்தத்திலிருந்து ஒவ்வொரு பௌர்ணமியாக ஆயிரம் பௌர்ணமி எண்ணிச் சரிபார்க்கலாமே! நாம் நம் கண்களால் ஆயிரம் முழுநிலவைப் பார்த்தோமா என்கிற சந்தேக ப்ராணிகளுக்கு ஒரு வார்த்தை. நாம் பார்க்காவிட்டாலும், சர்வ வ்யாபியும் ஸாக்ஷியுமான சந்திர பகவான் நம்மை எப்போதும் பார்க்கிறாரே!)
சதாபிஷேகச் சிறப்பு:
த்வாரகாபுரியில் ருக்மிணி தேவி ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவிடம் “தங்களை எல்லாரும் வணங்குகிறார்கள்; தாங்கள் யாரை வணங்குகிறீர்கள்?” என்று கேட்க, பகவான், தான் தினமும் ஆறு பெரியவர்களை வணங்குவதாகக் கூறியுள்ளார்.
நித்யான்னதாதா தருணாக்னிஹோத்ரீ
வேதாந்தவித் சந்த்ரஸஹஸ்ரதர்சீ |
மாஸோபவாஸீ ச பதிவ்ரதா ச
ஷட் ஜீவலோகே மம வந்தனீயா: ||
நித்யான்ன தாதா: தினமும் அன்னதானம் செய்பவன், ஸ்நானம், ஸந்த்யா, காயத்ரீ முதலான ஜபம், ஒளபாஸனம் தேவபூஜை, வைச்வதேவம் ஆகிய ஷட்கர்மாக்களைச் செய்தபின், அதிதிக்கு அன்னமிடுபவன்.
தருணாக்னி ஹோத்ரீ: இளம் வயதிலேயே விவாஹம் செய்து கொண்டு அக்னி ஹோத்ரம், ச்ரௌத கர்மாக்கள் ஆகியவற்றைச் செய்பவன்.
வேதாந்த வித்: வேதம், வேதாந்தம், சாஸ்த்ரம் கற்றுணர்ந்து அதன்படி நடப்பவன்.
சந்த்ர ஸஹஸ்ரதர்ஸீ: 1000 பூர்ண சந்திரர்களைப் பார்த்தவன்
மாஸோபவாஸீ: மாதத்தில் நியமப்படி உபவாசம் இருப்பவன். ஞாயிற்றுக்கிழமை, அமாவாஸ்யை பூர்ணிமைகளில் இரவிலும், இரு பக்ஷங்களிலும் சதுர்தசி, அஷ்டமி திதிகளில் பகலிலும், இரு ஏகாதசிகளில் பகலிலும் இரவிலும் உபவாசம் இருக்க வேண்டும். நாம் செய்த பாபம் நீங்க நம் உடல் உபவாச நியமத்தால் சிறிது கஷ்டப்பட வேண்டும். தர்மசாஸ்த்ரங்கள் தப்தம், ப்ராஜாபத்யம், சாந்த்ராயணம் முதலிய பலக்ருச்ர நியமங்களைச் சொல்கின்றன. சாந்த் ராயணம் என்பது சந்திரனின் வளர்வு தேய்வுடன் தொடர்புள்ள ஓர் உபவாச நியமம் அல்லது ப்ராயச்சித்தம். சந்திரகலைகள் வளரும் சுக்லபக்ஷ ப்ரதமை முதல் பௌர்ணமி வரை தினம்தோறும் ஒவ்வொரு கவளமாகக் கூட்டி உண்டும், பிறகு கலைகள் தேயும் க்ருஷ்ணபக்ஷ ப்ரதமை முதல் அமாவாசை வரை ஒவ்வொரு கவளமாகக் குறைத்து உண்டும் சந்திரனை மனத்தில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமே சந்திராயணம். நம் முன்னோர் பலர் இதை அனுஷ்டித்தனர்.
பதிவ்ரதா: தன் ச்ரமங்களையும் பாராது கணவனுக்குப் பணிவிடை செய்யும் உத்தம ஸ்த்ரீ.
இந்த ஸ்லோகத்திலிருந்து, ஆயிரம் பூர்ண சந்த்ரன் கண்ட “ஸஹஸ்ர சந்திரதர்சி” மற்ற சிறந்த ஐவருக்கு நிகராகப் போற்றப் படுகிறான் என்று தெரிகிறது.
சதாபிஷேகச் செய்முறைச் சுருக்கம்:
1. ரக்ஷ£பந்தனம்: சதாபிஷேகத்திற்கு முதல்நாள் மாலை ப்ரதோஷ வேளையில் கர்த்தாவுக்கு ப்ரதிஸரபந்தம் (ரக்ஷ£பந்தனம்) என்கிற காப்புக் கட்டுதல் செய்ய வேண்டும். அல்லது மறுநாள் காலையில் வைபவம் தொடங்குமுன் செய்யலாம்.
2. அனுக்ஞை: புதிய தீக்ஷ£வஸ்த்ரம் அணிந்து கொண்டு கர்த்தா தன் பத்னியுடன் தெய்வத்தையும் பெரியவர்களையும் வணங்கி விட்டு ஸதஸ்ஸில் உள்ள வைதீக ப்ராம்ஹணர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசிபெற்று அனுக்ஞை (அனுமதி) யுடன் சதாபிஷேக வைபவத்தைத் தொடங்க வேண்டும்.
3. விக்னேச்வர பூஜை: ப்ரார்த்தனை.
4. விசேஷ ஸங்கல்பம்.
5. அப்யுதயம்: புண்யாஹ வாசனம்
6. பூர்வாங்க வைதீக கட்டங்கள்.
7. ஆசார்யர், ரித்விக்குகள் (ஜப ப்ராம்ஹணர்கள்) வரித்தல்.
8. கும்பஸ்தாபனம்: சதாபிஷேக கர்மாவுக்கு ப்ரதான தேவதை வேதஸ்வரூபமான ப்ரம்ஹா (நடுவில்) பார்ஷத (பக்க) தேவதைகள் நால்வர்-ப்ரஜாபதி (கிழக்கில்); பரமேஷ்டி (தெற்கில்; சதுர்முகர் (மேற்கில்); ஹிரண்ய கர்பர் (வடக்கில்) குறைந்த பக்ஷம் இந்த ஐந்து தேவதைகளுக்கு 5 கும்பங்களை வைத்து ஆராதிக்க வேண்டும். இது தவிர திக்பாலகர்களுக்குத் தனியாக 8கும்பங்கள் வைக்கலாம். கும்பங்களில் புண்யதீர்த்தம் நிரப்பி; மாவிலைக் கொத்து, (குடுமித்) தேங்காய், தர்ப கூர்ச்சம் வைத்து நல்ல புது வஸ்திரம் கட்டி சந்தானம் குங்குமம் சார்த்தவும் ப்ரதான கும்பத்தில் ப்ரம்ஹ ஸ்வரூப ப்ரதிமையை வைக்கவும்.
9.கும்ப பூஜை: முதலில் மண்டப பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு கும்ப தேவதைக்கும் அதற்குரிய வேதமந்த்ரம், காயத்ரீ, புராண ச்லோகம் சொல்லி த்யானம் செய்ய வேண்டும். பின்னர் ஆவாஹனம், ப்ராண ப்ரதிஷ்டை, பிறகு ப்ரம்ஹஸ¨க்த விதானமாக ஷோடசோபசாரபூஜை செய்ய வேண்டும். ப்ரம்ஹா அஷ்டோத்தர சதநாமாவளி அர்ச்சனை செய்யலாம். மந்த்ரபுஷ்பம், ஸ்வர்ணபுஷ்பம், சத்ர சாமராதி ராஜோபசாரங்கள் செய்யவும்.
10. ஹோமம்: ஸ்தண்டிலம் அமைத்து அதில் லௌகிகாக்னியில் ப்ரம்ஹவரணம் முதல் முகாந்தம் வரை செய்து கொண்டு ப்ரம்ஹ ஸ¨க்தத்தால், ஆயுஷ்ய ஹோமம் போல, 108 ஆவர்த்திக்குக் குறையாமல் ஸமித், ஹவிஸ், நெய்யால் ஹோமம் செய்யவேண்டும். ஜயாதி ஹோமத்துடன் பூரணமடையும். உபஸ்தானம் செய்து நமஸ்கரிக்கவும். ஹ§தசேஷ ஹவிஸ்ஸைத் தனியாக மூடி வைக்கவும்.
11. கும்ப ஜபம்: ரித்விக்குகள் உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள் ஜபம் செய்ய வேண்டும். யஜமானன் ச்ரத்தையுடன் அவற்றைக் கேட்கவேண்டும்.
12. கும்ப புன: பூஜை: முதலில் பூஜிக்கப்பட்ட கும்பங்களுக்கு மறுபடியும் சுருக்கமாக பூஜை செய்து, தூபம், தீபம் நைவேத்யம், கற்பூரம், ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் ஆகிய உபசாரங்களைச் செய்யவும். பிறகு யதாஸ்தானம், நிரீஷிதாஜ்ய தானம் செய்யலாம்.
13. கும்பாபிஷேகம்: (ஸஹஸ்ரதாராபிஷேகம்) ஸஹஸ்ர தாரா என்பது குழிந்து பரந்த வெள்ளி அல்லது தாமிரத் தாம்பாளத்தில் ஒரே சீராக 1000 வட்டத் துளைகள் பத்ம வடிவில் போடப்பட்டிருக்கும். இந்த 1000 துளைகள் 1000 பூர்ண சந்திரர்களை நினைவூட்டுகிறதோ! ரித்விக்குகள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து மித்ரர்கள் செய்யவே கூடாது.
உறவினர்கள் இத்தட்டை சதாபிஷேக தம்பதியர் தலைமேல் சிறிது உயரே பிடித்துக் கொள்ள வேண்டும். தட்டில் ஸ்வர்ணம் ஏதாவது வைக்க வேண்டும். கும்பதீர்த்த ப்ரோக்ஷணம் செய்தபின், ஆசார்யன் பிரதான ப்ரம்ஹ கும்பத்திலுள்ள பாதி தீர்த்தத்தை, சிறிது சிறிதாக, யாஸ§கந்தா, யாஊர்ஜம் யாஸாம் நிஷ்க்ரமணே..., யாஸாம் இமே த்ரயோ... என்ற நான்கு மந்த்ரங்களால் ஒவ்வொரு மந்த்ர முடிவிலும் தட்டில் விடவேண்டும். பின்னர் “யா: ப்ராசீ ரேவதீ...” என்ற மந்த்ரம் சொல்லி ப்ரஜாபதி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாதக்ஷிணா...” என்ற மந்த்ரத்தால் பரமேஷ்டி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாப்ரதிசீ...” என்ற மந்த்ரத்தால் சதுர்முக கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும்.
அடுத்து, “யா உதீசீ...” என்ற மந்த்ரத்தால் ஹிரண்ய கர்ப கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். கடைசியாக “யா ஊர்த்வா...” என்ற மந்த்ரத்தால் ப்ரதான ப்ரம்ஹ கும்பத்தில் மீதியுள்ள ஜலம் முழுவதையும் ஆசார்யன் விடவும். கும்ப தீர்த்தங்கள் பாபம் போக்கி மங்களம் சுகம் நன்மை தரட்டும் என்பதே இந்த மந்த்ரங்களின் ஸாரம். அபிஷேக காலத்தில் சுமங்கலிகள் மங்களகானம் (கௌரீ கல்யாணம்) பாடலாம். வாத்யங்கள் முழங்கலாம். அனைவரும்
“ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே”
என்று பகவந் நாம ஸங்கீர்த்தனம் செய்யலாம். அபிஷேகம் முடிந்தபின் “ஸ்ரீஹரயே நம:” என்று மூன்று முறை கூறி எல்லாரும் “ஹரி:” என ஹரிஸ்மரணம் செய்யவேண்டும்.
14. சதாபிஷேகம் ஆனபின் கர்த்தா மூன்று புதிய வஸ்த்ரங்கள் தரிக்க வேண்டும். த்ருதீய வஸ்த்ரத்தை பட்டுப்பாயின் மேல் விரித்து அதில் தம்பதியர் உட்கார வேண்டும். புது யக்ஞோப வீதம் (பூணூல்) தரித்து ஆதித்யோபஸ்தானம் செய்து சூர்யதர்சனம் செய்ய வேண்டும்.
15. எடுத்து வைத்த ஹ§த சேஷ ஹவிஸ்ஸை வெண்கலப் பாத்திரத்தில் போட்டு நெய்விட்டு தங்கக் காசு ஒன்றை அதில் வைத்து தட்டால் மூடி, மந்த்ரம் சொல்லித் திறந்து பார்த்துவிட்டு ஆசார்யருக்கு தக்ஷிணையுடன் கொடுக்க வேண்டும். அபிஷேகத்தால் நனைந்த தீக்ஷ£வஸ்த்ரங்களை (வேஷ்டி, உத்தரீயம், புடைவை, ரவிக்கைத் துணியுடன்) தானம் செய்யவும்.
16. ப்ரதான கும்பத்தையும் ப்ரம்ஹ ப்ரதிமையையும் வஸ்த்ரத்தையும் ஆசார்யருக்குக் கொடுக்கவும். எல்லா ரித்விக்குகள்,தகுந்த மரியாதை செய்யவும்
நீண்ட ஆயுளுக்கு உதவும் சாந்தி ஹோமங்கள்
50 ஆண்டுகள் தூக்கத்திலும், 15 ஆண்டுகள் பால பருவத்திலும் செல்ல, மீதமுள்ள 35 ஆண்டுகளே ஒரு மனிதன் நல்வாழ்வுக்கு எஞ்சியிருக்கின்றது.
மனிதனாகப் பிறந்தவர்கள் சாந்திகர்மாக்களை அனுஷ்டிக்க வேண்டும்.
1 வயதில் (365 நாளில்) அப்தபூர்த்தி சாந்தியும் :
59 வயதில் உக்ர ரத சாந்தியும் :
60 வயதில் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தியும் :
77 வயதில் விஜயரத சாந்தியும் :
80 வயதில் சதாபிஷேகச் சாந்தியும் :
100 வயதில் கனகாபிஷேகம் என்னும் பூர்ணாபிஷேகச் சாந்தியும் செய்து கொள்ள வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. மனிதன் பிறக்கும்போதே ஷஷ்டிதேவி என்ற ஒரு சக்தியுடன் தோன்றுவதாக ஆகமங்கள் கூறுகின்றன. அந்த ஷஷ்டிதேவி மனிதனுக்கு துன்பத்தை தந்து வாழ்வை வாழ்வாங்கு வாழவிடாமல் தடையாக நிற்பாள்.
ஷஷ்டி தேவதையை ஜபம், பூஜை, ஹோமங்களினால் திருப்தி செய்து, அவள் அனுக்ரகத்தைப் பெற வேண்டும். மிருத்யுஞ்சய ஸ்தோத்திரத்தால் பரமேஸ்வரனை ஆராதிக்க வேண்டும். 100 ஆண்டு காலம் மனிதனுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகள் தூக்கத்திலும், 15 ஆண்டுகள் பால பருவத்திலும் செல்ல, மீதமுள்ள 35 ஆண்டுகளே ஒரு மனிதன் நல்வாழ்வுக்கு எஞ்சியிருக்கின்றது.
சதாபிஷேக தம்பதிகள் இன்சொல்லும், பணிவுடைமையும் இயல்பாகக் கொண்டவர்கள், ஈகையால் இசைபட வாழ்பவர்கள், ஊக்கம் குன்றாதவர்கள், எண்ணித் துணியும் செய்கையினால் ஏற்றம் பெற்றவர்கள். ஆகவே, என்றும் இளமை குன்றாதவராக, தளர் நடை இல்லாமல், இன்முகத்தோடு வாழ்த்து வருபவர்கள், அவர்களைப்பற்றி கூறவேண்டுமாயின் நாள் போதாது. இளவயது முதல் எதைச் செய்தாலும் அவற்றில் நற்பலன்கள் விளைந்திட வேண்டுமென்றும், எல்லோரும் இன்புற்று வாழவேண்டுமென்றும், இறையருளை எல்லோரும் பெற்றுத் துய்க்க வேண்டுமென்றும் நினைப்பவர்.
சதாபிஷேகம் என்றால் எண்பதாண்டு வயது நிறைவில் செய்துகொள்ளும் அபிஷேகம் என்பது, மனிதனை நூறு ஆண்டுகள் வாழ்க என வாழ்த்துகிறது வேதம். கிரகங்களோ நூற்று இருபது வயது வாழ வாழ்த்துகின்றன. இது ஜோதிடவிதி. இதன் படிதான் அனைத்து ஒன்பது தசைகளும் சேர்ந்து நூற்று இருபது ஆண்டுகள் ஆகும் என யாவரும் அறிந்ததே!
இவ்வாறு பூரண ஆயுள் பெறும் மனிதன் உலக விவகாரங்களில் ஈடுபடும் போது அவ்வப்போது - ஆங்காங்கு சிறு சிறு தவறுகளும் அனிச்சையாக அல்லது அறிந்தும் தவிர்க்க முடியாத நிலையில் செய்கிறான். இதற்காகவே தன் வயது கணக்கின் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு சாந்திகளைச் செய்துகொள்கிறான். இவைகள் பரிஹாரங்களும், பிராயச்சித்தங்களுமாகும்.
ஆயுஷ்யஹோமம் (முதலாண்டு நிறைவு), உக்ரரத சாந்தி (59 ஆண்டு பூர்த்தி), 60 ஆரம்பம் ஷஷ்டியப்த பூர்த்தி (60 பூர்த்தி), பீமரத சாந்தி (70 ஆரம்பம்), விஜயரத சாந்தி (77 ஆரம்பம்), சதாபிஷேகம் (80 வருஷம்) எட்டு மாதம் முடிந்து உத்தராயண சுக்லபட்ச நல்ல நாளில் நடத்தவேண்டியது.
ஆனால், நடைமுறையில் 80 வயது நிறையும் நாளில், ஜன்ம நட்சத்திரத்தில் செய்து விடுகின்றனர். ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கொள்ளுப்பேரன் பிறந்தால் ஒருவர் செய்து கொள்ளும் எட்டு மாதத்தில் ஆயிரம் பௌர்ணமி கண்டவர் என்ற தகுதியைப்பெறுகிறார்.
இன்னொரு கணக்கு சொல்கிறது. குழந்தைகள் அது பிறந்த மூன்று மாதம் நிறைந்த பின் சூரியனையும், நான்கு மாதம் நினைந்த பின் சந்திரனையும், பசுவையும் காட்ட வேண்டும் என காலவிதானம் கூறுவதால், முதல் நாலு மாதம் குழந்தை சந்திரனை பார்க்காததால், 80 வருடம், 8 மாதத்தில் நாலு மாத தரிசனம் குறைந்திருக்கும்.
எனவே 80 வருடம் 8 மாதத்துடன் 81 வயது 4 மாதத்தை இப்போது சேர்த்து 81 வயது நிறையும் போது ஆயிரம் பிறை கண்டவர் என்பதால் 81 வயது நிறையும் நாளில் சதாபிஷேகம் நடத்தலாம். ஆயிரம் பௌர்ணமியிலும் அவர் சந்திரனைக் கண்டிருப்பரா? மழைக்கால மேகங்களாலும், வேறு பல காரணங்களாலும் சாத்தியமில்லைதான். ஆனால் சந்திரன் இவரை பார்த்துவிடுகிறது. எனவே, 80 வயது நிறைவு முதல் 81 வயது நிறைவு வரை நல்ல நாளும் பார்த்து சதாபிஷேகம் நடத்தலாம் என்பதே சரி.
அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056
No comments:
Post a Comment