விதி என்பது முன் ஜென்மத்தில்
நாம் செய்த பாவ,
புண்ணியம் காரணமாக அனுபவித்து தீர்க்கபட வேண்டிய கர்மா.
இது ஏற்கனவே நமக்காக நாம் அனுபவிக்க தீர்மானிக்கப்பட்டது.
மதி என்பது
இந்த ஜென்மத்தில் நாம் செய்ய போகிற பாவ,புண்ணிய
கர்மா .
அதாங்க நமக்காக நாம் அனுபவிக்க
நம்மளாலேயே
நாம் தீர்மானிக்கப் போகிற கர்மா .
நமக்கு இனி வருங்காலத்தில் நமக்கு என்ன நன்மை தீமை வரும் என்று தீர்மானிப்பது கதி
விதிக்கு லக்னம்
மதிக்கு சந்திரன்
கதிக்கு சூரியன்
என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்த நியதி.
பிறப்பில் இருந்து
ஒருவருக்கு விதி
என்கிற லக்னம் 33 வயது வரை தன் கர்மாவை அனுபவிக்க செய்யும்.
மதி என்கிற சந்திரன்
34 வயது முதல் 66 வயது
வரை தன் கர்மாவை
அனுபவிக்க செய்யும்.
கதி என்கிற சூரியன்
67வயது முதல் 99 வயது
வரை தன் கர்மாவை அனுபவிக்க செய்யும்.
என்று ஜோதிட சாஸ்திரம்
வரையறுத்து உள்ளது.
விதி என்பது
இறந்த காலம்
நமக்கு
தீர்மானிக்கப்பட்டது.
மதி என்பது
நிகழ்காலம்
நாமாகவே ,
தீர்மானிப்பது.
கதி என்பது
எதிர்காலம்
நமக்காக
தீர்மானிக்கப்போவது.
Ambharish gsavithaastro@gmail.com
savithaastro.blogspot.com
9790111570
No comments:
Post a Comment